tamilni 145 scaled
இலங்கைசெய்திகள்

மருத்துவத்துறையின் அபார வளர்ச்சி: புதிய சாதனை

Share

மருத்துவத்துறையின் அபார வளர்ச்சி: புதிய சாதனை

மருத்துவத்துறையின் அபார வளர்ச்சியினால் மூளையின் ஒரு பக்க செயலாக்கத்தை மட்டும் நிறுத்தும் முயற்சியில் அமெரிக்கா சாதனை படைத்துள்ளது.

அந்த வகையில் அமெரிக்காவில் சிறுமி ஒருவருக்கு மூளையின் ஒரு பக்கத்தை செயலிழக்க செய்யும் சத்திர சிகிச்சை வெற்றியளித்துள்ளது.

அமெரிக்காவில் வசித்து வரும் 6 வயதான பிரையன்னா பாட்லி என்ற சிறுமிக்கு திடீரென உடல் நலம் குறைவு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் குறித்த சிறுமி கலிபோர்னியாவில் உள்ள லோமா லிண்டா (Loma Linda) பல்கலைக்கழக வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதனையடுத்து மேற்கொள்ளப்பட்ட வைத்திய பரிசோதனையில் “ராஸ்முஸ்ஸென்ஸ் என்சஃபலைட்டிஸ்” (Rasmussen’s Encephalitis) எனும் அரிய வகை மூளை அழற்சி நோய் கண்டரியப்பட்டுள்ளதுடன் சிறுமியின் மூளையின் ஒரு பாகம் சுருங்கியிருப்பதும் தெரியவந்துள்ளது.

இதன் போது வைத்தியர்கள் இந்த அரிய வகையான நோய்க்கு ஒரு பக்க மூளையின் செயலாக்கத்தை நிறுத்துவதே தீர்வு என கண்டுப்பிடித்துள்ளனர்.

இதற்கமைய வைத்தியர்கள் மேற்கொண்ட அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடைபெற்றதுடன் சிறுமியும் நலமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது இதற்கான தீர்வு கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து இந்த சாதனை மருத்துவ உலகின் முன்னேற்றமாக பார்க்கப்படுகின்றது.

Share
தொடர்புடையது
25 694ededb0ff94
செய்திகள்உலகம்

ஜப்பான் டயர் தொழிற்சாலையில் ஊழியர் நடத்திய கத்திக்குத்து: 15 பேர் காயம், 5 பேர் நிலை கவலைக்கிடம்!

ஜப்பான் தலைநகர் டோக்கியோவிற்கு அருகிலுள்ள மிஷிமா (Mishima) நகரில் அமைந்துள்ள வாகன டயர் உற்பத்தித் தொழிற்சாலையில்,...

articles2FamQmNaW4XK0qSBeE32Ow
செய்திகள்இலங்கை

மத்திய மாகாணத்தில் 160 பாடசாலைகளுக்கு நிலச்சரிவு அபாயம்: விரிவான அறிக்கை பிரதமரிடம் சமர்ப்பிப்பு!

மத்திய மாகாணத்தில் நிலச்சரிவு அபாயத்தில் உள்ள பாடசாலைகள் குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு தேசிய கட்டிட...

25 694f2ec30f150
செய்திகள்இலங்கை

அதிபர் தாக்கியதில் மாணவன் படுகாயம்: 8 நாட்களாக வைத்தியசாலையில் அனுமதி – அரசியல் தலையீடெனப் பெற்றோர் குற்றச்சாட்டு!

சூரியவெவ பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றின் அதிபர் மாணவன் மீது நடத்திய மனிதாபிமானமற்ற தாக்குதலால், பாதிக்கப்பட்ட...

image 64d1628410
உலகம்செய்திகள்

சிரியா பள்ளிவாசலில் குண்டுவெடிப்பு: வெள்ளிக்கிழமை தொழுகையின் போது 8 பேர் பலி, 18 பேர் காயம்!

சிரியாவின் மூன்றாவது பெரிய நகரமான ஹோம்ஸில் (Homs) உள்ள பள்ளிவாசல் ஒன்றில் நேற்று (26) வெள்ளிக்கிழமை...