tamilni 145 scaled
இலங்கைசெய்திகள்

மருத்துவத்துறையின் அபார வளர்ச்சி: புதிய சாதனை

Share

மருத்துவத்துறையின் அபார வளர்ச்சி: புதிய சாதனை

மருத்துவத்துறையின் அபார வளர்ச்சியினால் மூளையின் ஒரு பக்க செயலாக்கத்தை மட்டும் நிறுத்தும் முயற்சியில் அமெரிக்கா சாதனை படைத்துள்ளது.

அந்த வகையில் அமெரிக்காவில் சிறுமி ஒருவருக்கு மூளையின் ஒரு பக்கத்தை செயலிழக்க செய்யும் சத்திர சிகிச்சை வெற்றியளித்துள்ளது.

அமெரிக்காவில் வசித்து வரும் 6 வயதான பிரையன்னா பாட்லி என்ற சிறுமிக்கு திடீரென உடல் நலம் குறைவு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் குறித்த சிறுமி கலிபோர்னியாவில் உள்ள லோமா லிண்டா (Loma Linda) பல்கலைக்கழக வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதனையடுத்து மேற்கொள்ளப்பட்ட வைத்திய பரிசோதனையில் “ராஸ்முஸ்ஸென்ஸ் என்சஃபலைட்டிஸ்” (Rasmussen’s Encephalitis) எனும் அரிய வகை மூளை அழற்சி நோய் கண்டரியப்பட்டுள்ளதுடன் சிறுமியின் மூளையின் ஒரு பாகம் சுருங்கியிருப்பதும் தெரியவந்துள்ளது.

இதன் போது வைத்தியர்கள் இந்த அரிய வகையான நோய்க்கு ஒரு பக்க மூளையின் செயலாக்கத்தை நிறுத்துவதே தீர்வு என கண்டுப்பிடித்துள்ளனர்.

இதற்கமைய வைத்தியர்கள் மேற்கொண்ட அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடைபெற்றதுடன் சிறுமியும் நலமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது இதற்கான தீர்வு கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து இந்த சாதனை மருத்துவ உலகின் முன்னேற்றமாக பார்க்கப்படுகின்றது.

Share
தொடர்புடையது
25 68fb9443b29cd
செய்திகள்இலங்கை

உயர்தரப் பரீட்சை நவம்பர் 10 முதல் ஆரம்பம் – பரீட்சைகள் திணைக்களம் அறிவிப்பு!

2025 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை நவம்பர் 10 ஆம் திகதி...

25 68fbf3f9586ce
செய்திகள்உலகம்

அமெரிக்க அரசாங்க முடக்கத்தால் விமான சேவைகள் பாதிப்பு: 10 முக்கிய நகரங்களில் ஒரு மணி நேர தாமதம்!

அமெரிக்காவின் (United States) முக்கிய நகரங்களில் விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன....

l19420250910170027
செய்திகள்இலங்கை

மெட்டா மற்றும் டிக் டாக் மீது ஐரோப்பிய யூனியன் குற்றச்சாட்டு: வெளிப்படைத்தன்மை விதிகளை மீறியதாக அபராதம் விதிக்க வாய்ப்பு!

ஐரோப்பிய யூனியன், மெட்டா (Meta) மற்றும் டிக் டாக் (TikTok) ஆகியவற்றின் மீது குற்றம்சாட்டடொன்றை முன்வைத்துள்ளது....

images 1 6
இலங்கைசெய்திகள்

யாழ்ப்பாணம் குருநகரில் 200 மில்லிகிராம் ஹெரோயினுடன் இளைஞர் கைது!

யாழ்ப்பாணம் – குருநகர் பகுதியை சேர்ந்த 22 வயதுடைய இளைஞர் ஒருவர் நேற்று (24) போதைபொருளுடன்...