5 13 scaled
இலங்கை

பதவி விலக தயாராகும் எட்டு இராஜாங்க அமைச்சர்கள்: ரணிலுக்கான ஆதரவால் ஏற்பட்ட விளைவு

Share

பதவி விலக தயாராகும் எட்டு இராஜாங்க அமைச்சர்கள்: ரணிலுக்கான ஆதரவால் ஏற்பட்ட விளைவு

அரசாங்கத்தில் இராஜாங்க அமைச்சர்கள் பதவிகளை வகிக்கும் சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் 8 உறுப்பினர்கள் அந்தப் பதவிகளில் இருந்து விலகத் தயாராகி வருவதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு (Ranil Wickremesinghe) ஆதரவளிக்கப் போவதில்லை எனத் தீர்மானித்துள்ள எட்டு இராஜாங்க அமைச்சர்களே இந்த முடிவை எடுக்க உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன் போது, டி. வி சானக (D. V. Chanaka), தேனுக விதானகமகே (Thenuka Vidanagamage), சசீந்திர ராஜபக்ச (Shasheendra Rajapaksa), அசோக பிரியந்த (Ashoka Priyantha), மொஹான் டி சில்வா (Mohan De Silva), இந்திக்க அனுருத்த (Indika Anuruddha), பிரசன்ன ரணவீர (Prasanna Ranaweera) மற்றும் சிறிபால கம்லத் (Siripala Gamalath) ஆகிய இராஜாங்க அமைச்சர்கள் குழுவே இவ்வாறு பதவி விலக உள்ளதாக கூறப்படுகிறது.

இதேவேளை, அரசாங்கத்திற்கு ஆதரவளிக்காமல் இராஜாங்க அமைச்சர்கள் பதவிகளில் நீடிப்பது நெறிமுறையல்ல என பல அமைச்சர்கள் கடந்த காலங்களில் சுட்டிக்காட்டியிருந்தனர்.

எவ்வாறாயினும், அந்த இராஜாங்க அமைச்சர்களின் பதவிகள் தொடர்பில் எவ்வித நடவடிக்கையும் எடுக்க அரசாங்கம் இதுவரை தீர்மானிக்கவில்லை என தெரியவந்துள்ளது.

அத்துடன், எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தனிப்பட்ட காரணத்திற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவளிப்பதாக அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி (Pavithra Wanniarachchi), சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்சவிடம் (Namal Rajapaksa) தெரிவித்துள்ளதாக இந்த கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

எனினும், அரசியலில் தனிப்பட்ட முடிவுகளை இணைக்க வேண்டாம் என பவித்ரா வன்னியாராச்சியிடம் நாமல் ராஜபக்ச வலியுறுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.

Share
தொடர்புடையது
Untitled 81
செய்திகள்இலங்கை

எரிபொருள் நிலைய உரிமையாளர்கள் நாளை போராட்டம்: பெட்ரோல், டீசல் விநியோகத்தில் சிக்கல் ஏற்பட வாய்ப்பு!

பல்வேறு தீர்க்கப்படாத கோரிக்கைகளை முன்வைத்து, நாடு முழுவதுமுள்ள எரிபொருள் நிலைய உரிமையாளர்கள் நாளை (ஏப்ரல் 06,...

Untitled 79
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மட்டக்களப்பில் அதிரடி: நவீன ஸ்கேனருடன் புதையல் தோண்டிய இரு பெண்கள் உட்பட 11 பேர் கைது!

மட்டக்களப்பு, வெல்லாவெளி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட திக்கோடை பகுதியில் சட்டவிரோதமான முறையில் புதையல் தோண்டும் நடவடிக்கையில் ஈடுபட்ட...

Untitled 77
செய்திகள்இலங்கைபிராந்தியம்

செவனகலையில் 1,000 லீற்றர் மண்ணெண்ணெய் பறிமுதல்: இருவர் கைது!

மொனராகலை மாவட்டம், செவனகல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தண்டுவ பகுதியில், எவ்வித அனுமதிப்பத்திரமுமின்றி சட்டவிரோதமான முறையில் லொறி...

Untitled 75
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அநுராதபுரத்தில் அதிரடிச் சோதனை: காலாவதியான அரிசி பறிமுதல்!

எதிர்வரும் சித்திரை புத்தாண்டுப் பண்டிகை காலத்தை முன்னிட்டு, நுகர்வோருக்குப் பாதுகாப்பான உணவுப் பொருட்கள் கிடைப்பதை உறுதி...