5 13 scaled
இலங்கை

பதவி விலக தயாராகும் எட்டு இராஜாங்க அமைச்சர்கள்: ரணிலுக்கான ஆதரவால் ஏற்பட்ட விளைவு

Share

பதவி விலக தயாராகும் எட்டு இராஜாங்க அமைச்சர்கள்: ரணிலுக்கான ஆதரவால் ஏற்பட்ட விளைவு

அரசாங்கத்தில் இராஜாங்க அமைச்சர்கள் பதவிகளை வகிக்கும் சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் 8 உறுப்பினர்கள் அந்தப் பதவிகளில் இருந்து விலகத் தயாராகி வருவதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு (Ranil Wickremesinghe) ஆதரவளிக்கப் போவதில்லை எனத் தீர்மானித்துள்ள எட்டு இராஜாங்க அமைச்சர்களே இந்த முடிவை எடுக்க உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன் போது, டி. வி சானக (D. V. Chanaka), தேனுக விதானகமகே (Thenuka Vidanagamage), சசீந்திர ராஜபக்ச (Shasheendra Rajapaksa), அசோக பிரியந்த (Ashoka Priyantha), மொஹான் டி சில்வா (Mohan De Silva), இந்திக்க அனுருத்த (Indika Anuruddha), பிரசன்ன ரணவீர (Prasanna Ranaweera) மற்றும் சிறிபால கம்லத் (Siripala Gamalath) ஆகிய இராஜாங்க அமைச்சர்கள் குழுவே இவ்வாறு பதவி விலக உள்ளதாக கூறப்படுகிறது.

இதேவேளை, அரசாங்கத்திற்கு ஆதரவளிக்காமல் இராஜாங்க அமைச்சர்கள் பதவிகளில் நீடிப்பது நெறிமுறையல்ல என பல அமைச்சர்கள் கடந்த காலங்களில் சுட்டிக்காட்டியிருந்தனர்.

எவ்வாறாயினும், அந்த இராஜாங்க அமைச்சர்களின் பதவிகள் தொடர்பில் எவ்வித நடவடிக்கையும் எடுக்க அரசாங்கம் இதுவரை தீர்மானிக்கவில்லை என தெரியவந்துள்ளது.

அத்துடன், எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தனிப்பட்ட காரணத்திற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவளிப்பதாக அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி (Pavithra Wanniarachchi), சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்சவிடம் (Namal Rajapaksa) தெரிவித்துள்ளதாக இந்த கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

எனினும், அரசியலில் தனிப்பட்ட முடிவுகளை இணைக்க வேண்டாம் என பவித்ரா வன்னியாராச்சியிடம் நாமல் ராஜபக்ச வலியுறுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.

Share
தொடர்புடையது
images 6 2
செய்திகள்இலங்கை

வாகன இறக்குமதி நிலையான மட்டத்தை அடைந்தது; டொலர் கையிருப்பு உயரும்: மத்திய வங்கி ஆளுநர் நம்பிக்கை!

இலங்கையில் நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் வாகன இறக்குமதி குறிப்பிடத்தக்க அளவில் நிலையான மட்டத்தை அடைந்துள்ளதாக,...

MediaFile 21
செய்திகள்இலங்கை

யாழ்ப்பாணம் நாவாந்துறையில் 290 மில்லி கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் 5 சந்தேகநபர்கள் கைது!

யாழ்ப்பாணம் – நாவாந்துறைப் பகுதியில் நேற்றிரவு மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்போது, ஐஸ் (Ice) போதைப்பொருளுடன் 5 சந்தேகநபர்கள்...

6.WhatsApp Image 2024 11 20 at 09.04.56
இலங்கைஅரசியல்செய்திகள்

மீனவர்களைப் பாதுகாப்போம், கடற்றொழில் துறையை நவீனமயமாக்குவோம்: அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் உறுதி!

இலங்கை மீனவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தீர்க்கப்பட்டு வருவதாகவும், அவர்களை நிச்சயம் பாதுகாப்பதாகவும் கடற்றொழில், நீரியல் மற்றும்...