5 13 scaled
இலங்கை

பதவி விலக தயாராகும் எட்டு இராஜாங்க அமைச்சர்கள்: ரணிலுக்கான ஆதரவால் ஏற்பட்ட விளைவு

Share

பதவி விலக தயாராகும் எட்டு இராஜாங்க அமைச்சர்கள்: ரணிலுக்கான ஆதரவால் ஏற்பட்ட விளைவு

அரசாங்கத்தில் இராஜாங்க அமைச்சர்கள் பதவிகளை வகிக்கும் சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் 8 உறுப்பினர்கள் அந்தப் பதவிகளில் இருந்து விலகத் தயாராகி வருவதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு (Ranil Wickremesinghe) ஆதரவளிக்கப் போவதில்லை எனத் தீர்மானித்துள்ள எட்டு இராஜாங்க அமைச்சர்களே இந்த முடிவை எடுக்க உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன் போது, டி. வி சானக (D. V. Chanaka), தேனுக விதானகமகே (Thenuka Vidanagamage), சசீந்திர ராஜபக்ச (Shasheendra Rajapaksa), அசோக பிரியந்த (Ashoka Priyantha), மொஹான் டி சில்வா (Mohan De Silva), இந்திக்க அனுருத்த (Indika Anuruddha), பிரசன்ன ரணவீர (Prasanna Ranaweera) மற்றும் சிறிபால கம்லத் (Siripala Gamalath) ஆகிய இராஜாங்க அமைச்சர்கள் குழுவே இவ்வாறு பதவி விலக உள்ளதாக கூறப்படுகிறது.

இதேவேளை, அரசாங்கத்திற்கு ஆதரவளிக்காமல் இராஜாங்க அமைச்சர்கள் பதவிகளில் நீடிப்பது நெறிமுறையல்ல என பல அமைச்சர்கள் கடந்த காலங்களில் சுட்டிக்காட்டியிருந்தனர்.

எவ்வாறாயினும், அந்த இராஜாங்க அமைச்சர்களின் பதவிகள் தொடர்பில் எவ்வித நடவடிக்கையும் எடுக்க அரசாங்கம் இதுவரை தீர்மானிக்கவில்லை என தெரியவந்துள்ளது.

அத்துடன், எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தனிப்பட்ட காரணத்திற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவளிப்பதாக அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி (Pavithra Wanniarachchi), சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்சவிடம் (Namal Rajapaksa) தெரிவித்துள்ளதாக இந்த கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

எனினும், அரசியலில் தனிப்பட்ட முடிவுகளை இணைக்க வேண்டாம் என பவித்ரா வன்னியாராச்சியிடம் நாமல் ராஜபக்ச வலியுறுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.

Share
தொடர்புடையது
25 688de9f74b46a
இலங்கைசெய்திகள்

உள்நாட்டு இறைவரித் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு

2024/2025 மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமான அறிக்கைகளைச் சமர்ப்பிப்பதற்காக வழங்கப்பட்ட தனிப்பட்ட அடையாள எண்ணின் (PIN) செல்லுபடியாகும்...

25 688df4fc39fbe
இலங்கைசெய்திகள்

வாய்த்தர்க்கத்தில் ஒருவர் சுட்டுக்கொலை.. பொலிஸாரிடம் சரணடைந்த சந்தேகநபர்

அம்பலாந்தோட்டை, ஹுங்கம பிங்காம பகுதியில் இன்று (02) மதியம் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது....

25 688e158f2c449
இலங்கைசெய்திகள்

சட்டத்தை நடைமுறைப்படுத்தியவரால் நிராகரிக்கப்பட்ட ஜனாதிபதி சிறப்புரிமைகள்

இலங்கையின் முதல் நிறைவேற்றதிகார ஜனாதிபதியான ஜே.ஆர்.ஜெயவர்த்தனவால் கொண்டுவரப்பட்ட ஜனாதிபதிகளுக்கான சலுகைகளை அவரே பெற்றுக்கொள்ளவில்லை என அரசியல்...

25 688ddffa557e6
இலங்கைசெய்திகள்

இலங்கையில் கட்டாயமாக்கப்பட்டுள்ள நடைமுறை: விதிமுறையை மீறினால் சட்ட நடவடிக்கை

அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் இலகுரக வாகனங்களில் பின்புற பயணிகள் ஆசனப்பட்டி அணிவது நேற்று (01) முதல்...