இலங்கைசெய்திகள்

கட்டுநாயக்க விமான நிலையத்திற்குள் ஆயுதங்களுடன் அடிதடியில் ஈடுபட்ட ராஜாங்க அமைச்சர்

Share
24 6646e473c9fdd
Share

கட்டுநாயக்க விமான நிலையத்திற்குள் ஆயுதங்களுடன் அடிதடியில் ஈடுபட்ட ராஜாங்க அமைச்சர்

கட்டுநாயக்க விமான நிலைய வளாகத்திற்குள் குழப்பம் ஏற்படுத்தும் வகையில் நடந்து கொண்டதனை இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணவீர ஒப்புக் கொண்டுள்ளார்.

வெளிநாட்டில் உள்ள தனது மகனைப் பார்ப்பதற்காக தனது மனைவியை விமான நிலையத்திற்கு அழைத்துச் செல்வதற்காக கடந்த 14ஆம் திகதி காலை கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு சென்றிருந்தார்.

அங்கு இராஜாங்க அமைச்சர் தனது பாதுகாப்பு அதிகாரிகளுடன் துப்பாக்கி ஏந்தியவாறு விமான நிலையத்திற்குள் நுழைய முற்பட்டதுடன் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் அரச அமைச்சரிடம் பயணச்சீட்டுடன் விமான நிலையத்திற்குள் நுழையுமாறு கூறியுள்ளனர்.

துப்பாக்கி ஏந்தியவர்களை விமான நிலையத்துக்குள் அனுமதிக்க முடியாது என்றும் பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணவீர பாதுகாப்பு அதிகாரிகளை திட்டியதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும், இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணவீர விமான நிலைய வளாகத்திற்குள் பொருட்களை கொண்டு செல்லும் நபர்கள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இந்த தாக்குதல் சம்பவம் அங்கிருந்த சிசிடிவி கேமராவிலும் பதிவாகியுள்ளது.

இராஜாங்க அமைச்சரின் மனைவி கொண்டு வந்த சில பயணப் பொதிகளை ஏற்றிச் செல்வதற்காக இராஜாங்க அமைச்சர் 700 ரூபாவை பொருட்களை கொண்டு செல்பவர்களுக்கு வழங்கியிருந்த நிலையில், அந்தத் தொகை போதுமானதாக இல்லை என்ற காரணத்தினால் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இது தொடர்பான தகவல்கள் ஊடகங்கள் வாயிலாக கசிந்துள்ள நிலையில், தாக்குதல் சம்பவத்தை ராஜாங்க அமைச்சர் ஏற்றுக்கொண்டுள்ளார்.

Share
Related Articles
20 7
உலகம்செய்திகள்

காசா மக்களுக்கு விழப்போகும் பேரிடி : காசாவின் முழு கட்டுப்பாட்டையும் கைப்பற்றும் இஸ்ரேல்

காசா (Gaza) பகுதியை முழுமையாகக் கைப்பற்றி, காலவரையின்றி அங்கு தங்கள் இருப்பை நிறுவும் திட்டத்தை இஸ்ரேலின்...

14 6
இலங்கைசெய்திகள்

தபால் வாக்குகள் தனியாக எண்ணப்பட மாட்டாது:வெளியான அறிவிப்பு

இன்று நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலின் போது தபால் வாக்குகள் தனியாக எண்ணப்படமாட்டாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது....

13 6
இலங்கைசெய்திகள்

வவுனியாவில் 80 இலட்சம் பெறுமதியான நகைகள் மீட்பு

வவுனியாவில் 80 இலட்சம் ரூபாய் பெறுமதியான 35 பவுன் தங்க நகைகளினை மீட்டுள்ளதாக நெளுக்குளம் பொலிஸார்...

15 6
இலங்கைசெய்திகள்

வெலிக்கடை சிறைக்குள் இருந்து கைத்துப்பாக்கி மீட்பு

வெலிக்கடைச் சிறைச்சாலையின் கழிவுநீர் வடிகாண் ஒன்றின் அருகே இருந்து கைத்துப்பாக்கியொன்று மீட்கப்பட்டுள்ளது. வெலிக்கடைச் சிறைச்சாலையின் எல்...