tamilnih 34 scaled
இலங்கைசெய்திகள்

தலைவர் பிரபாகரனை போல் தமிழ் தேசியத்தை உலகறிய செய்வேன்

Share

தலைவர் பிரபாகரன் ஆங்கில மொழியோ, சட்ட புலமையோ இல்லாமல் உலகத்திற்கு தமிழ் தேசியத்தை கொண்டு சென்று தமிழினத்தை அடையாளப்படுத்தினார் என யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் தெரிவித்துள்ளார்.

மேலும், தலைவர்களுக்கு ஆங்கில மொழி புலமையும் சட்ட அறிவும் அவசியமென்றால் தந்தை செல்வா, ஜிஜி பொன்னம்பலம் காலத்தில் நாங்கள் விடுதலைபெற்றிருக்கவேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.

மட்டக்களப்பு களுவாஞ்சிகுடியில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இதன்போது மேலும் கருத்து தெரிவித்த அவர்,

தலைவர் பிரபாகரன் எவ்வாறு தன்னுடைய ஆங்கில மொழியோ சட்ட புலமையோ இல்லாமல் உலகத்திற்கு தமிழ் தேசியத்தை கொண்டு சென்று தமிழினத்தை அடையாளப்படுத்தினார்.

ஆனால் எத்தனையோ தலைவர்கள் தேடி வந்து பேசிய வரலாறை நாங்கள் திரும்பிப் பார்க்கின்றோம். ஆகவே அவற்றை நாங்கள் விமர்சிக்க தேவையில்லை.

அது மொழி என்பது ஒரு கொடை சட்டம் என்பது கிடைக்கின்ற கல்வி ரீதியான ஆற்றல் அவை இருக்கட்டும்.

ஆனால் தலைமைத்துவத்திற்கு அவர்களுடைய தைரியமும் மக்களை வழி நடத்துகின்ற பற்றும் இனம் மீதான சிந்தனையும் இருந்தால் அது ஒரு நல்ல தலைமைத்துவமாக வளரும்.

யாரையும் நான் குறைத்து மதிப்பிடவில்லை. ஐயாவும் தலைவராக வரக்கூடிய பூரண தகுதி கொண்டவர். என்னுடைய சக வேட்பாளர் சுமந்திரனும் தலைவராக வருவதற்குரிய பூரண தகுதியை கொண்டவர்.

ஆனால் இதை விட விண்ணப்பிக்காதவர்கள் வெளியிலே கட்சியை நடத்தக்கூடிய தலைவர்களும் இருக்கின்றார்கள்.

நாங்கள் யாரையும் குறைத்து மதிப்பிடவில்லை. ஆனால் என்னாலும் நடத்த முடியும். நான் இதனை நடத்திச் செல்வதற்கு என்னுடைய விருப்பத்தை தெரிவிக்கின்ற விண்ணப்பத்தை கொடுத்திருக்கின்றேன்.

ஆகவே என்னுடைய வழி வரைபடம் நான் ஒரு மக்கள் புரட்சியை ஏற்படுத்தி புலம்பெயர் நாடுகளில் இருக்கின்ற தமிழ் தரப்புகளையும் ஒன்றிணைத்து, நிலத்திலே இருக்கின்ற எமது மக்களையும் புலம்பெயர் மக்களையும் ஒன்றாக ஒரு ராஜதந்திர உறவுகளோடு உலக நாடுகளில் குறிப்பாக பிராந்திய சக்தி சர்வதேச சக்திகளின் உடைய அனுசரணையோடு எங்களுக்கான நிரந்தர அரசியல் தீர்வை அடைவதற்கான பாதையை எவ்வாறு உருவாக வைப்பது என்பதற்கான ஒரு வழி வரவிடத்தை கொண்டு என்னுடைய பயணத்தை தொடர நான் விரும்புகின்றேன்” என்றார்.

Share
தொடர்புடையது
25 688de9f74b46a
இலங்கைசெய்திகள்

உள்நாட்டு இறைவரித் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு

2024/2025 மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமான அறிக்கைகளைச் சமர்ப்பிப்பதற்காக வழங்கப்பட்ட தனிப்பட்ட அடையாள எண்ணின் (PIN) செல்லுபடியாகும்...

25 688df4fc39fbe
இலங்கைசெய்திகள்

வாய்த்தர்க்கத்தில் ஒருவர் சுட்டுக்கொலை.. பொலிஸாரிடம் சரணடைந்த சந்தேகநபர்

அம்பலாந்தோட்டை, ஹுங்கம பிங்காம பகுதியில் இன்று (02) மதியம் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது....

25 688e26468e8e8
சினிமாசெய்திகள்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு காலமானார்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு உடல்நலக் குறைவால் காலமானார். அவர் தனது 71ஆவது வயதில்...

25 688e158f2c449
இலங்கைசெய்திகள்

சட்டத்தை நடைமுறைப்படுத்தியவரால் நிராகரிக்கப்பட்ட ஜனாதிபதி சிறப்புரிமைகள்

இலங்கையின் முதல் நிறைவேற்றதிகார ஜனாதிபதியான ஜே.ஆர்.ஜெயவர்த்தனவால் கொண்டுவரப்பட்ட ஜனாதிபதிகளுக்கான சலுகைகளை அவரே பெற்றுக்கொள்ளவில்லை என அரசியல்...