tamilni 335 scaled
இலங்கைசெய்திகள்

ரணிலை கைவிடுகிறதா மொட்டு கட்சி! பசில் வாக்குறுதி

Share

ரணிலை கைவிடுகிறதா மொட்டு கட்சி! பசில் வாக்குறுதி

அடுத்த ஜனாதிபதி தேர்தலின் போது மொட்டு கட்சி வேட்பாளர் ஒருவரை களமிறக்க நடவடிக்கை எடுக்கப்படும் என கட்சி செயற்பாட்டாளர்களிடம் பசில் ராஜபக்ச உறுதியளித்துள்ளார் என அரசியல் வட்டாரங்களில் இருந்து அறிய முடிகின்றது.

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் ஸ்தாபகரான பசில் ராஜபக்ச கட்சி தலைமையகத்தில் கடந்த வாரம் முதல் தொடர் சந்திப்புகளை நடத்திவருகின்றார்.

தொகுதி அமைப்பாளர்கள், முன்னாள் உள்ளாட்சி மற்றும் மாகாணசபை உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் என பலரும் சந்திப்பில் பங்கேற்று வருகின்றனர்.

சமகால அரசியல் மற்றும் கட்சியின் எதிர்கால நகர்வுகள் தொடர்பில் கட்சி செயற்பாட்டாளர்களின் ஆலோசனைகளும், கருத்துகளும் கோரப்படுவதுடன், எவ்வாறு செயற்பட வேண்டும் என இதன்போது ஆலோசனையும் வழங்கப்பட்டு வருகின்றது என தெரியவருகின்றது.

மொட்டு கட்சிக்கு ஜனாதிபதி தரப்பில் கவனிப்பு எதுவும் இல்லை, அமைச்சு பதவி கூட வழங்குவதில் இழுத்தடிப்பு தொடர்கின்றது என உள்ளக்குமுறல்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.

அதேபோல அடுத்த ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்ரமசிங்கவுக்கு மொட்டு கட்சி ஆதரவு வழங்கவுள்ள விவகாரம் தொடர்பிலும் அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

அவ்வேளையிலேயே மொட்டு கட்சி உறுப்பினர் ஒருவரே வேட்பாளராக களமிறக்கப்படுவார் என்ற உத்தரவாதத்தை பசில் ராஜபக்ச வழங்கியுள்ளார் என தெரியவருகின்றது.

Share
தொடர்புடையது
Untitled 77
செய்திகள்இலங்கைபிராந்தியம்

செவனகலையில் 1,000 லீற்றர் மண்ணெண்ணெய் பறிமுதல்: இருவர் கைது!

மொனராகலை மாவட்டம், செவனகல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தண்டுவ பகுதியில், எவ்வித அனுமதிப்பத்திரமுமின்றி சட்டவிரோதமான முறையில் லொறி...

Untitled 76
செய்திகள்உலகம்

ஈரானில் அமெரிக்க போர் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது: பரபரப்பான பின்னணி!

ஈரானின் வான்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்த அமெரிக்காவின் அதிநவீன போர் விமானத்தை, தங்கள் நாட்டின் புதிய வான்...

Untitled 75
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அநுராதபுரத்தில் அதிரடிச் சோதனை: காலாவதியான அரிசி பறிமுதல்!

எதிர்வரும் சித்திரை புத்தாண்டுப் பண்டிகை காலத்தை முன்னிட்டு, நுகர்வோருக்குப் பாதுகாப்பான உணவுப் பொருட்கள் கிடைப்பதை உறுதி...

Untitled 74
செய்திகள்இலங்கைபிராந்தியம்

களுத்துறை பொலிஸ் கல்லூரி பட்டமளிப்பு விழா: 280 அதிகாரிகள் நியமனம்!

களுத்துறை பொலிஸ் கல்லூரியில் தங்களது அடிப்படைப் பயிற்சியை வெற்றிகரமாக நிறைவு செய்த 280 பயிலுநர் பொலிஸ்...