tamilni 335 scaled
இலங்கைசெய்திகள்

ரணிலை கைவிடுகிறதா மொட்டு கட்சி! பசில் வாக்குறுதி

Share

ரணிலை கைவிடுகிறதா மொட்டு கட்சி! பசில் வாக்குறுதி

அடுத்த ஜனாதிபதி தேர்தலின் போது மொட்டு கட்சி வேட்பாளர் ஒருவரை களமிறக்க நடவடிக்கை எடுக்கப்படும் என கட்சி செயற்பாட்டாளர்களிடம் பசில் ராஜபக்ச உறுதியளித்துள்ளார் என அரசியல் வட்டாரங்களில் இருந்து அறிய முடிகின்றது.

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் ஸ்தாபகரான பசில் ராஜபக்ச கட்சி தலைமையகத்தில் கடந்த வாரம் முதல் தொடர் சந்திப்புகளை நடத்திவருகின்றார்.

தொகுதி அமைப்பாளர்கள், முன்னாள் உள்ளாட்சி மற்றும் மாகாணசபை உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் என பலரும் சந்திப்பில் பங்கேற்று வருகின்றனர்.

சமகால அரசியல் மற்றும் கட்சியின் எதிர்கால நகர்வுகள் தொடர்பில் கட்சி செயற்பாட்டாளர்களின் ஆலோசனைகளும், கருத்துகளும் கோரப்படுவதுடன், எவ்வாறு செயற்பட வேண்டும் என இதன்போது ஆலோசனையும் வழங்கப்பட்டு வருகின்றது என தெரியவருகின்றது.

மொட்டு கட்சிக்கு ஜனாதிபதி தரப்பில் கவனிப்பு எதுவும் இல்லை, அமைச்சு பதவி கூட வழங்குவதில் இழுத்தடிப்பு தொடர்கின்றது என உள்ளக்குமுறல்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.

அதேபோல அடுத்த ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்ரமசிங்கவுக்கு மொட்டு கட்சி ஆதரவு வழங்கவுள்ள விவகாரம் தொடர்பிலும் அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

அவ்வேளையிலேயே மொட்டு கட்சி உறுப்பினர் ஒருவரே வேட்பாளராக களமிறக்கப்படுவார் என்ற உத்தரவாதத்தை பசில் ராஜபக்ச வழங்கியுள்ளார் என தெரியவருகின்றது.

Share
தொடர்புடையது
MediaFile 3 5
செய்திகள்இலங்கை

பேருந்து விபத்துக்களைத் தடுக்க நடமாடும் போதைப்பொருள் சோதனைப் பேருந்து அறிமுகம்: அமைச்சர் பிமல் ரத்நாயக்க திறந்து வைத்தார்!

பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில், பயணப் பேருந்து ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்களிடையே போதைப்பொருள் பயன்பாட்டைக்...

articles2FISZ4kXqRjW2IZH13NUki
உலகம்செய்திகள்

அவுஸ்திரேலிய செனட் சபை ஒத்திவைப்பு: பர்தா அணிந்து சபைக்குள் நுழைந்த செனட்டர் நீக்கம்!

அவுஸ்திரேலியாவின் செனட் சபை இன்று (நவம்பர் 24) ஒரு மணி நேரத்திற்கு இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தீவிர...

farmers scaled 1
உலகம்செய்திகள்

பிரித்தானியாவில் குடும்பப் பண்ணை வரிக்கு எதிர்ப்பு: லிங்கன்ஷையரில் விவசாயிகள் டிராக்டர் போராட்டம்!

பிரித்தானியாவில் விவசாயிகள் இன்று (நவம்பர் 24) ஒரு போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். இந்த வாரம் சமர்ப்பிக்கப்படவுள்ள வரவு...