இலங்கைசெய்திகள்

லெபனானில் உள்ள இலங்கையர் தூதரகத்தில் தஞ்சம்

Share
12 4
Share

லெபனானில் உள்ள இலங்கையர் தூதரகத்தில் தஞ்சம்

லெபனான் மீதான இஸ்ரேலின் வான் மற்றும் தரைவழி அகோரத் தாக்குதலை அடு்த்து அங்குள்ள இலங்கையர்கள் தலைநகர் பெய்ரூட்டில் உள்ள இலங்கைத் தூதரகத்தில் தஞ்சமடையத் தொடங்கியுள்ளனர்.

கடந்த இரண்டு நாட்களுக்குள் 32 பேர் வரையான இலங்கையர்கள் அவ்வாறு தூதரகத்தில் தஞ்சமடைந்துள்ள நிலையில், எதிர்வரும் நாட்களில் அந்த எண்ணிக்கை அதிகரிக்கலாம் என்று வௌிநாட்டலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது.

எனினும் இஸ்ரேலியத் தாக்குதல் காரணமாக லெபனானில் உள்ள எந்தவொரு இலங்கையரும் இதுவரை எதுவித பாதிப்புக்கும் உள்ளாகவில்லை என்றும் அங்குள்ள இலங்கைத் தூதரகம் உறுதிப்படுத்தியுள்ளது.

லெபனானில் உள்ள இலங்கையர்களை அங்குள்ள இலங்கைத் தூதரகத்துடன் தொடர்பைப் பேணிக் கொள்ளுமாறு வலியுறுத்தியுள்ள இலங்கையின் வௌிநாட்டலுவல்கள் அமைச்சு, அங்குள்ள நிலைமைகள் தொடர்பில் தொடர்ந்தும் உன்னிப்பாக கவனித்துக் கொண்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளது.

Share
Related Articles
23 3
உலகம்செய்திகள்

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் மூன்றாவது முறையும் போட்டி.! ட்ரம்ப் அளித்த பதில்

அமெரிக்க(us) ஜனாதிபதியாக 3வது முறையாக போட்டியிடுவது குறித்துதான் தீவிரமாக யோசிக்கவில்லை என ஜனாதிபதி ட்ரம்ப்(donald trump)...

22 3
உலகம்செய்திகள்

மீண்டும் ஏவுகணை சோதனை நடத்தி மிரட்டும் பாகிஸ்தான்

இந்தியாவுடனான(india) பதற்றத்திற்கு மத்தியில், 2 நாட்களில் 2வது முறையாக ஏவுகணை சோதனை மேற்கொண்டதாக பாகிஸ்தான்(pakistan) தெரிவித்துள்ளது....

21 4
உலகம்செய்திகள்

53 ஆண்டுகள் கழித்து பூமியில் விழும் விண்கலம் : எப்போது தெரியுமா?

53 ஆண்டுகளுக்கு முன்பு விண்ணில் ஏவப்பட்டு தோல்வியடைந்த சோவியத் (Soviet Union) கால விண்கலம் விரைவில்...

25 2
இலங்கைசெய்திகள்

சட்டவிரோத வர்த்தகம் : இலங்கை எத்தனையாவது இடம் பிடித்துள்ளது தெரியுமா…!

சட்டவிரோத வர்த்தகத்தின் சவால்களை சமாளிக்க முடிந்த 158 நாடுகளை உள்ளடக்கிய சமீபத்திய தரவரிசைப்படி, டென்மார்க்(denmark) முதலிடத்திலும்,...