அரசியல்இலங்கைசெய்திகள்

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானிகளுக்கு விடுத்துள்ள கடும் எச்சரிக்கை

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானிகளுக்கு விடுத்துள்ள கடும் எச்சரிக்கை
ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானிகளுக்கு விடுத்துள்ள கடும் எச்சரிக்கை
Share

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானிகளுக்கு விடுத்துள்ள கடும் எச்சரிக்கை

உள்நாட்டு விமானிகள் நாட்டை விட்டு வெளியேறினால், வெளிநாட்டு விமானிகள் மூலமாக ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானங்கள் தொடர்ந்து இயக்கப்படும் என துறைமுகங்கள் கப்பல் மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா எச்சரித்துள்ளார்.

நாட்டிலுள்ள அனைத்து விமானிகளும் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸை விட்டு வெளியேறினாலும் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் சேவை தொடரும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சிவில் விமான சேவைகள் அதிகார சபையில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும் கருத்து தெரிவித்த அமைச்சர், ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸின் மறுசீரமைப்பில் நிறுவனத்தின் நிர்வாக முடிவுகளை எடுப்பதற்கு முதலீட்டாளர்களுக்கு முழு உரிமை வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.

கொவிட் நெருக்கடி காரணமாக உலகம் முழுவதும் விமான சேவைகள் தடைப்பட்டன. இதனால் பல விமானங்கள் தரையிலேயே இருந்தன. ஏராளமானோர் வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர்.

ஸ்ரீலங்கா எயார்லைன்ஸில் நாங்கள் அவ்வாறு செய்யவில்லை. அந்த விமானிகளை 50% சம்பளத்தில் வைத்துள்ளோம். கொவிட் காலத்தில் தங்கள் விமானங்கள் செல்லாது என்று கூறி குவைத் ஏர்லைன்ஸின் சுமார் 70 விமானிகள் பணிநீக்கம் செய்யப்பட்டனர் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

வெளிநாடுகளில் இருந்து புதிய விமானிகள்
விமான சேவையின் மறுசீரமைப்பு மற்றும் விமானிகள் வெளியேறுவது குறித்து கருத்துத் தெரிவித்த அவர், 260 விமானிகள் கொண்ட குழு இன்னும் இலங்கையில் தங்கியுள்ளது.

அவர்கள் துபாய் அல்லது சிங்கப்பூர் சென்றால் அவர்களுக்கு பாாியளவான சம்பளம் கிடைக்கும் என எண்ணுகின்றனர். ஆனால் அந்த நாடுகளில் வாழ்க்கைச் செலவு அதிகம். அதையும் ஒப்பிட்டுப் பாருங்கள்.

புதிய விமானிகளுக்கான விண்ணப்பங்களை அழைக்கிறோம். ஆனால் சிலர் இந்த நாட்டில் இருக்க விரும்புகிறார்கள்.

ஆனால் அவர்கள் வெளியேறினால் வெளிநாடுகளில் இருந்து புதிய விமானிகள் பணியமர்த்தப்பட்டு விமான சேவை தொடரும் என தெரிவித்துள்ளார்.

Share

1 Comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Related Articles
8 10
இலங்கைசெய்திகள்

நாடாளுமன்றத்தில் இருந்து அதிரடியாக வெளியேற்றப்பட்ட அர்ச்சுனா

நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா நாடாளுமன்றத்தில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளார். நாடாளுமன்றத்தில் ஒழுங்கீனமாக நடந்து கொண்டதற்காக நாடாளுமன்ற...

10 10
இலங்கைசெய்திகள்

ரணிலின் வெளிநாட்டு பயணங்களால் ஏற்பட்ட செலவு : அமைச்சர் வெளியிட்ட தகவல்

ஜனாதிபதியாக இருந்த காலத்தில் வெளிநாட்டு சுற்றுப்பயணங்களுக்காக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க 1.27 பில்லியன் ரூபா...

6 11
உலகம்செய்திகள்

காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்கியதில் 13 இந்தியர்கள் பலி

காஷ்மீர்(Kasmir) மாநிலம் பூஞ்ச் மாவட்டத்தில் பாகிஸ்தான் இராணுவம் அத்துமீறி நடத்திய தாக்குதலில் 13 இந்தியர்கள் உயிரிழந்துள்ளனர்....

9 10
இலங்கைசெய்திகள்

விமான சேவையை நிறுத்தும் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ்

இந்தியா – பாகிஸ்தான் போர் தீவிரம் அடைந்துள்ள நிலையில், பாகிஸ்தானுக்கான விமான சேவைகளை தற்காலிகமாக இடைநிறுத்துவதாக...