tamilnaadi 11 scaled
இலங்கைசெய்திகள்

சேவையில் இல்லாத விமானங்களுக்கு 565 கோடி ரூபாவை வாடகை

Share

சேவையில் இல்லாத விமானங்களுக்கு 565 கோடி ரூபாவை வாடகை

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான 08 விமானங்கள் சேவையில் இருந்து விலக்கிக் கொள்ளப்பட்ட போதிலும் பெருந்தொகை பணத்தை செலுத்தியுள்ளது.

அந்த விமானங்களுக்கான வாடகையாக 5,646.76 மில்லியன் ரூபாவை விமான நிறுவனம் செலுத்தியுள்ளதாக தேசிய கணக்காய்வு அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் தனது விமான நடவடிக்கைகளுக்கு 27 விமானங்களின் தேவையுடன் உள்ளது.

தற்போது நிறுவனத்திடம் 24 விமானங்கள் மட்டுமே உள்ளன. அறிக்கைக்கமைய, ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் தற்போது 18 விமானங்களை செயற்பாட்டிற்குப் பயன்படுத்துகிறது.

மேலும் நிறுவனம் வைத்திருந்த 24 விமானங்களில் 08 விமானங்கள் 2023 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 20ஆம் திகதிக்குள் சேவையில் இருந்து விலக்கிக் கொள்ளப்பட்டது.

2021 ஆம் ஆண்டு முதல் 2023 ஆம் ஆண்டு ஏப்ரல் 20 ஆம் திகதி வரை பயன்பாட்டிலிருந்து விலக்கிக் கொள்ளப்பட்ட இந்த விமானங்களுக்கான வாடகைத் தொகையாக 5,646.76 மில்லியன் ரூபாவை விமான நிறுவனம் செலுத்தியுள்ளது.

Share
தொடர்புடையது
MediaFile 1 10
செய்திகள்அரசியல்இலங்கை

ஒன்றிணைந்த எதிர்க்கட்சி கூட்டத்தில் துப்பாக்கியுடன் காணப்பட்ட முன்னாள் எம்.பி: விசாரணைக்காகப் பறிமுதல்!

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் உதித லொக்குபண்டாரவிடம் (Uditha Lokubandara) இருந்த ஒரு கைத்துப்பாக்கியை நுகேகொடப் பொலிஸ்...

parliament2
செய்திகள்அரசியல்இலங்கை

அனர்த்த நிலைமை குறித்துப் பேச: பாதிக்கப்பட்ட மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஜனாதிபதி அழைப்பு!

நாட்டில் ஏற்பட்டுள்ள அனர்த்த நிலைமைகள் குறித்து விவாதிப்பதற்காக, அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட அனைத்து மாவட்டங்களையும் சேர்ந்த பாராளுமன்ற...

images 6 2
செய்திகள்இலங்கை

வாகன இறக்குமதி நிலையான மட்டத்தை அடைந்தது; டொலர் கையிருப்பு உயரும்: மத்திய வங்கி ஆளுநர் நம்பிக்கை!

இலங்கையில் நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் வாகன இறக்குமதி குறிப்பிடத்தக்க அளவில் நிலையான மட்டத்தை அடைந்துள்ளதாக,...