6 26
இலங்கைசெய்திகள்

ஜனாதிபதி ரணிலின் ஆட்சி காலத்தில் நிகழ்ந்த மாற்றங்கள்!

Share

ஜனாதிபதி ரணிலின் ஆட்சி காலத்தில் நிகழ்ந்த மாற்றங்கள்!

ரணில் தேர்தலில் வெற்றியீட்டினால் நாடு அபிவிருத்தி அடைந்த நாடாக மாறும் என ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானி சாகால ரட்னாயக்க தெரிவித்துள்ளார்.

ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது” ஜனாதிபதி இந்த நாட்டை பொறுப்பேற்று வரிசை யுகத்திற்கு முற்றுப் புள்ளிவைத்து மக்களின் இயல்பு வாழ்க்கையினை மீட்டுக்கொடுத்துள்ளார்.

இந்த நாட்டை பொறுப்பேற்ற நாள் முதல் ஜனாதிபதி அபிவிருத்தி தொடர்பிலேயே சிந்தித்து வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருகின்றார்.

ரணில் இந்த நாட்டின் இரண்டு வருடங்களாக ஆட்சி செய்த காலப் பகுதியில் வறுமைக் கோட்டின் கீழ் வாழும் குடும்பங்களுக்கு பல நிவாரண சலுகைகளையும் வழங்கியுள்ளார்.

காணி உரிமையின்றி அவதிப்பட்ட 20 இலட்சம் குடும்பங்களுக்கு காணி உரிமையினையும் வழங்கி வருகின்றார்.

கொழும்பு நகரில் தொடர்மாடி குடியிருப்புக்களில் உள்ள 55 ஆயிரம் குடும்பங்களுக்கும் காணி உரிமை வழங்கி வருகின்றார்.

நாட்டு மக்கள் நெருக்கடியை எதிர்கொண்ட போது மக்கள் பண்டிகைகளையும் கொண்டாட முடியாத நிலையில் இருந்தனர். மக்களின் நலன் கருதி 20 இலட்சம் குடும்பங்களுக்கு அரிசி நிவாரணத்தையும் வழங்கியிருந்தார்.

பாடசாலை மாணவர்களின் நலன் தொடர்பாகவும் ஜனாதிபதி அதிக கவனம் செலுத்தியிருந்தார்.

2 வருடங்களுக்குள் நாட்டில் இந்தளவில் மாற்றங்களை ஏற்படுத்திய ஜனாதிபதி மேலும் 5 வருடங்களுக்கு இந்த நாட்டை ஆட்சி செய்யும் போது நாடு அபிவிருத்தி அடைந்த நாடாக மாற்றமடையும்” என சாகால ரட்னாயக்க தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
1276730 0.jpeg
செய்திகள்உலகம்

ஈரான் சிறைப்பிடித்த எண்ணெய்க் கப்பல் ‘தலாரா’ விடுவிப்பு: 21 பணியாளர்களும் பாதுகாப்பாக உள்ளனர்!

ஹாா்முஸ் நீரிணைப் பகுதியில் ஈரான் கடந்த வாரம் சிறைப்பிடித்த, மாா்ஷல் தீவுகளின் கொடியேற்றப்பட்ட ‘தலாரா’ (Talara)...

pm modi 13 20251119144744
இந்தியாசெய்திகள்

ஜி20 மாநாட்டில் பங்கேற்க இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தென்னாபிரிக்காவிற்குப் பயணம்!

இந்திய பிரதமர் நரேந்திர மோடி தென்னாபிரிக்காவிற்கு விஜயம் செய்யத் தயாராகி வருவதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன....

images 5 7
செய்திகள்பிராந்தியம்

யாழ்ப்பாணத்தில் சோகம்: கால் தவறி கிணற்றில் வீழ்ந்த வெளிநாட்டுப் பிரஜை உயிரிழப்பு!

யாழ்ப்பாணம் – ஆறுகால்மடம் பகுதியில் நபரொருவர் கால் தவறி கிணற்றுக்குள் வீழ்ந்து பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர்...

images 4 8
இலங்கைசெய்திகள்

அரச மருத்துவமனைகளில் 150 மருந்து வகைகளுக்குத் தட்டுப்பாடு: சிகிச்சை சேவைகள் பாதிக்கப்படும் அபாயம் – அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்!

அரச மருத்துவமனைகளில் சுமார் 150 மருந்து வகைகளுக்குத் தட்டுப்பாடு நிலவுவதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்...