4 49
இலங்கைசெய்திகள்

வாகன விலைகளில் பெரும் மோசடி: விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவுறுத்தல்

Share

வாகன விலைகளில் பெரும் மோசடி: விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவுறுத்தல்

இலங்கையில் பதிவு செய்யப்பட்ட வாகனங்களின் விலைகளை பொய்யாக குறைக்கும் முயற்சி இடம்பெற்று வருவதாக வாகன இறக்குமதி சந்தைப்பிரதிநிதிகள் தெரிவிக்கின்றனர்.

 

வாகன இறக்குமதி கட்டுப்பாடுகளை அரசாங்கம் தளர்த்துவதற்கு எதிர்பார்க்கும் பின்னணியில் இந்த மோசடி இடம்பெறுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

 

தற்போது சமூக ஊடகங்களில் வாகனங்களின் போலி விலைகள் பரப்பப்பட்டு வருவதாகவும், பயன்படுத்திய வாகனங்களின் சந்தை மதிப்பைக் குறைப்பதே இதன் முக்கிய நோக்கம் என்றும் அந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

 

இலங்கையிலுள்ள வாகன இறக்குமதி நிறுவனங்களும் இது தொடர்பில் கவனம் செலுத்தி வருவதாக கூறப்படுகின்றது.

 

முன்னணி நிறுவனங்களில் ஒன்றான ஏ. எம். டபிள்யூ. எதிர்காலத்தில் இறக்குமதி செய்யப்படவுள்ள புதிய வாகனங்களுக்கு பொய்யான விலைகளைக் குறிப்பிட்டு தற்போது சமூக ஊடகங்கள் மூலம் பல செய்திகள் திருத்தப்பட்டு வருவதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

 

புதிய வாகனங்களின் விலையை கணக்கிட சந்தை விலை மாற்றங்களை உன்னிப்பாக கவனித்து வருவதாகவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

 

இறக்குமதி செய்யப்படும் என எதிர்பார்க்கப்படும் புதிய வாகனங்களின் விலைகளுக்கு பொய்யான விலையை விளம்பரம் செய்து தற்போது பதிவு செய்யப்பட்ட வாகனங்களின் விலையை குறைக்க முயற்சிப்பதாக வாகன இறக்குமதியாளர்கள் கூறுகின்றனர்.

Share
தொடர்புடையது
world 44
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தித்வா புயல் பாதிப்பு: இழப்பீடுகளை விரைவாக வழங்க பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய உத்தரவு!

தித்வா (Tithwa) புயலால் ஏற்பட்ட பேரிடரால் பாதிக்கப்பட்ட மக்களுக்குரிய இழப்பீட்டுத் தொகையை எவ்விதத் தாமதமுமின்றி விரைவாக...

world 43
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மீண்டும் உயர்கிறதா மின் கட்டணம்? அதிகரிப்பைக் கோருகிறது தேசிய அமைப்பு இயக்குநரகம்!

இலங்கை மின்சார சபை (CEB) கலைக்கப்பட்ட பின்னர் உருவாக்கப்பட்ட அரசிற்குச் சொந்தமான தனியார் நிறுவனமான தேசிய...

world 42
செய்திகள்இலங்கைபிராந்தியம்

உள்ளூர் தொழில்களை வலுப்படுத்துவதே அரசாங்கத்தின் இலக்கு:  ஜனாதிபதி அநுரகுமார உறுதி!

உள்நாட்டுத் தொழில்களைப் பாதுகாப்பதும், அவற்றை வலுப்படுத்துவதுமே தற்போதைய அரசாங்கத்தின் முதன்மையான நோக்கமாகும் என ஜனாதிபதி அநுரகுமார...

world 41
செய்திகள்இலங்கை

இந்தியா – இலங்கை கடல்சார் உறவில் புதிய மைல்கல்: கொழும்பு கப்பல் கட்டும் தளத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்!

இந்தியா மற்றும் இலங்கை இடையிலான பொருளாதார மற்றும் வர்த்தக உறவுகளை மேலும் வலுப்படுத்தும் நோக்கில், கொழும்பு...