இலங்கைசெய்திகள்

வாகன விலைகளில் பெரும் மோசடி: விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவுறுத்தல்

Share
4 49
Share

வாகன விலைகளில் பெரும் மோசடி: விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவுறுத்தல்

இலங்கையில் பதிவு செய்யப்பட்ட வாகனங்களின் விலைகளை பொய்யாக குறைக்கும் முயற்சி இடம்பெற்று வருவதாக வாகன இறக்குமதி சந்தைப்பிரதிநிதிகள் தெரிவிக்கின்றனர்.

 

வாகன இறக்குமதி கட்டுப்பாடுகளை அரசாங்கம் தளர்த்துவதற்கு எதிர்பார்க்கும் பின்னணியில் இந்த மோசடி இடம்பெறுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

 

தற்போது சமூக ஊடகங்களில் வாகனங்களின் போலி விலைகள் பரப்பப்பட்டு வருவதாகவும், பயன்படுத்திய வாகனங்களின் சந்தை மதிப்பைக் குறைப்பதே இதன் முக்கிய நோக்கம் என்றும் அந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

 

இலங்கையிலுள்ள வாகன இறக்குமதி நிறுவனங்களும் இது தொடர்பில் கவனம் செலுத்தி வருவதாக கூறப்படுகின்றது.

 

முன்னணி நிறுவனங்களில் ஒன்றான ஏ. எம். டபிள்யூ. எதிர்காலத்தில் இறக்குமதி செய்யப்படவுள்ள புதிய வாகனங்களுக்கு பொய்யான விலைகளைக் குறிப்பிட்டு தற்போது சமூக ஊடகங்கள் மூலம் பல செய்திகள் திருத்தப்பட்டு வருவதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

 

புதிய வாகனங்களின் விலையை கணக்கிட சந்தை விலை மாற்றங்களை உன்னிப்பாக கவனித்து வருவதாகவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

 

இறக்குமதி செய்யப்படும் என எதிர்பார்க்கப்படும் புதிய வாகனங்களின் விலைகளுக்கு பொய்யான விலையை விளம்பரம் செய்து தற்போது பதிவு செய்யப்பட்ட வாகனங்களின் விலையை குறைக்க முயற்சிப்பதாக வாகன இறக்குமதியாளர்கள் கூறுகின்றனர்.

Share
Related Articles
25 1
இலங்கைசெய்திகள்

உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலில் ஒரு கோடியே 72லட்சம் பேர் வாக்களிக்கத் தகுதி

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலில் ஒரு ​கோடியே 72 லட்சத்து 96ஆயிரத்து 330 ​பேர் வாக்களிக்கத்...

24 1
இலங்கைசெய்திகள்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் குழப்பம் ஏற்படுத்திய பயணி கைது

கட்டுநாயக்க விமான நிலையத்தில் சுங்க அதிகாரிகளின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்த பயணி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்....

23 2
இலங்கைசெய்திகள்

சப்ரகமுவ பல்கலைக்கழக பகிடிவதை விவகாரம்! ​தொடர்புடைய மாணவர்கள் ஐவருக்கு மனஅழுத்தம்

சப்ரகமுவ பல்கலைக்கழக பகிடிவதை விவகாரத்தில் தொடர்புடையதாக தெரிவிக்கப்படும் ஐந்து மாணவிகள் மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது....

22 2
இலங்கைசெய்திகள்

வங்கி வாடிக்கையாளர்களுக்கான முக்கிய அறிவிப்பு

அனைத்து வங்கிகளும் நாளை காலை 11 மணி வரை மட்டுமே திறந்திருக்கும் என இலங்கை வங்கி...