4 49
இலங்கைசெய்திகள்

வாகன விலைகளில் பெரும் மோசடி: விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவுறுத்தல்

Share

வாகன விலைகளில் பெரும் மோசடி: விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவுறுத்தல்

இலங்கையில் பதிவு செய்யப்பட்ட வாகனங்களின் விலைகளை பொய்யாக குறைக்கும் முயற்சி இடம்பெற்று வருவதாக வாகன இறக்குமதி சந்தைப்பிரதிநிதிகள் தெரிவிக்கின்றனர்.

 

வாகன இறக்குமதி கட்டுப்பாடுகளை அரசாங்கம் தளர்த்துவதற்கு எதிர்பார்க்கும் பின்னணியில் இந்த மோசடி இடம்பெறுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

 

தற்போது சமூக ஊடகங்களில் வாகனங்களின் போலி விலைகள் பரப்பப்பட்டு வருவதாகவும், பயன்படுத்திய வாகனங்களின் சந்தை மதிப்பைக் குறைப்பதே இதன் முக்கிய நோக்கம் என்றும் அந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

 

இலங்கையிலுள்ள வாகன இறக்குமதி நிறுவனங்களும் இது தொடர்பில் கவனம் செலுத்தி வருவதாக கூறப்படுகின்றது.

 

முன்னணி நிறுவனங்களில் ஒன்றான ஏ. எம். டபிள்யூ. எதிர்காலத்தில் இறக்குமதி செய்யப்படவுள்ள புதிய வாகனங்களுக்கு பொய்யான விலைகளைக் குறிப்பிட்டு தற்போது சமூக ஊடகங்கள் மூலம் பல செய்திகள் திருத்தப்பட்டு வருவதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

 

புதிய வாகனங்களின் விலையை கணக்கிட சந்தை விலை மாற்றங்களை உன்னிப்பாக கவனித்து வருவதாகவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

 

இறக்குமதி செய்யப்படும் என எதிர்பார்க்கப்படும் புதிய வாகனங்களின் விலைகளுக்கு பொய்யான விலையை விளம்பரம் செய்து தற்போது பதிவு செய்யப்பட்ட வாகனங்களின் விலையை குறைக்க முயற்சிப்பதாக வாகன இறக்குமதியாளர்கள் கூறுகின்றனர்.

Share
தொடர்புடையது
Untitled 1 Recovered Recovered 12
இலங்கைசெய்திகள்

கந்தளாய் சூரியபுர பகுதியில் லொறி விபத்து

கந்தளாய் சூரியபுர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சமகிபுர பகுதியில் ஒரு லொறி வீதியை விட்டு விலகி ஆற்றில்...

Untitled 1 Recovered Recovered 11
இலங்கைசெய்திகள்

கொழும்பில் நாளை முதல் நடைமுறைக்கு வரவுள்ள விசேட போக்குவரத்து திட்டம்!

போரா மாநாட்டை முன்னிட்டு கொழும்பில் விசேட போக்குவரத்து திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர். போரா மாநாடு...

Untitled 1 Recovered Recovered 9
இலங்கைசெய்திகள்

அதிகரிப்பைப் பதிவு செய்த கொழும்பு பங்குச் சந்தை

கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது. அதன்படி, இன்றையதினம்(24)...

Untitled 1 Recovered Recovered 8
இலங்கைசெய்திகள்

திடீரென இஸ்ரேலை எச்சரித்த ட்ரம்ப்!

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்களை நடத்தக்கூடாது என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்....