24 6635888ab8495
இலங்கைசெய்திகள்

மரக்கறிகளின் விலைகளில் ஏற்படவுள்ள மாற்றம்

Share

மரக்கறிகளின் விலைகளில் ஏற்படவுள்ள மாற்றம்

இந்த வருட இறுதி வரை மரக்கறிகளின் விலைகள் உயரும் சாத்தியம் இல்லை என ஹெக்டர் கொப்பேகடுவ விவசாய ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் (Hector Kobbekaduwa Agrarian Research and Training Institute) தெரிவித்துள்ளது.

மரக்கறிகள் மற்றும் பழங்கள் மற்றும் ஏனைய உணவுப் பயிர்களின் விலை நிலைகள் தொடர்பில் ஏற்படக்கூடிய சாத்தியமுள்ள சூழ்நிலைகள் தொடர்பான ஆய்வு அறிக்கையை விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீரவிடம் கையளிக்கும் போதே அந்த நிறுவனம் இந்த விடயங்களை குறிப்பிட்டுள்ளது.

மே மற்றும் ஜூன் மாதங்களின் கடைசி இரண்டு வாரங்களில் கடும் மழை பெய்தால், ஜூன் மாதம் வரை மரக்கறிகளின் விலையில் சில அதிகரிப்பு ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் கூறியுள்ளது.

இருப்பினும் இந்த வருட இறுதி வரை மரக்கறிகளின் விலைகளில் பெரியளவில் மாற்றம் ஏற்படாது எனவும் நிறுவனம் தெரிவித்துள்ளது.

அதேநேரம், எதிர்காலத்தில் அரிசியின் விலை அதிகரிக்கக் கூடும் எனவும் எதிர்வுகூறப்பட்டுள்ளது.

இதன்படி கீரி சம்பா மற்றும் சம்பா போன்றவற்றின் விலை அதிகரிக்கக் கூடும் என ஹெக்டர் கொப்பேகடுவ விவசாய ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

Share
தொடர்புடையது
world 161
செய்திகள்இலங்கைபிராந்தியம்

விபத்துகளால் 713 பேர் பலி: வாகன ஓட்டுநர்களுக்கு பொலிஸார் கடும் எச்சரிக்கை!

தற்போது நிலவி வரும் பண்டிகைக் காலத்தில் மதுபோதையில் வாகனம் செலுத்துவதையும், கவனக்குறைவாகச் செயல்படுவதையும் தவிர்க்குமாறு இலங்கை...

world 160
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையில் நிகழ்ந்த விபத்துக்கள் மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகள்: பொலிஸாரின் அதிரடி சோதனைகள்!

இலங்கையின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில மணிநேரங்களில் இடம்பெற்ற விபத்துக்கள் மற்றும் பொலிஸ் சோதனைகளில் பலர்...

world 159
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பட்டாசு வெடிக்கும் போது அவதானம் செலுத்துமாறு சுகாதார அமைச்சு அறிவுறுத்தல்!

சித்திரைப் புத்தாண்டு கொண்டாட்டங்களின் போது எதிர்பாராத விதமாக இடம்பெறும் பட்டாசு விபத்துகளைத் தடுப்பது குறித்து சுகாதார...

world 158
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கல்கிசையில் மோதல்: இலங்கை பெண்ணைத் தாக்கிய உக்ரைன் பெண் விளக்கமறியலில்!

கல்கிசையில் அமைந்துள்ள உணவகம் ஒன்றிற்கு முன்பாக கடந்த 12ஆம் திகதி இரவு இடம்பெற்ற மோதல் சம்பவம்...