24 6635888ab8495
இலங்கைசெய்திகள்

மரக்கறிகளின் விலைகளில் ஏற்படவுள்ள மாற்றம்

Share

மரக்கறிகளின் விலைகளில் ஏற்படவுள்ள மாற்றம்

இந்த வருட இறுதி வரை மரக்கறிகளின் விலைகள் உயரும் சாத்தியம் இல்லை என ஹெக்டர் கொப்பேகடுவ விவசாய ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் (Hector Kobbekaduwa Agrarian Research and Training Institute) தெரிவித்துள்ளது.

மரக்கறிகள் மற்றும் பழங்கள் மற்றும் ஏனைய உணவுப் பயிர்களின் விலை நிலைகள் தொடர்பில் ஏற்படக்கூடிய சாத்தியமுள்ள சூழ்நிலைகள் தொடர்பான ஆய்வு அறிக்கையை விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீரவிடம் கையளிக்கும் போதே அந்த நிறுவனம் இந்த விடயங்களை குறிப்பிட்டுள்ளது.

மே மற்றும் ஜூன் மாதங்களின் கடைசி இரண்டு வாரங்களில் கடும் மழை பெய்தால், ஜூன் மாதம் வரை மரக்கறிகளின் விலையில் சில அதிகரிப்பு ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் கூறியுள்ளது.

இருப்பினும் இந்த வருட இறுதி வரை மரக்கறிகளின் விலைகளில் பெரியளவில் மாற்றம் ஏற்படாது எனவும் நிறுவனம் தெரிவித்துள்ளது.

அதேநேரம், எதிர்காலத்தில் அரிசியின் விலை அதிகரிக்கக் கூடும் எனவும் எதிர்வுகூறப்பட்டுள்ளது.

இதன்படி கீரி சம்பா மற்றும் சம்பா போன்றவற்றின் விலை அதிகரிக்கக் கூடும் என ஹெக்டர் கொப்பேகடுவ விவசாய ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

Share
தொடர்புடையது
Muthur
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மாவிலாறு அணைக்கட்டு உடைந்ததால் வெள்ளம்: திருகோணமலை-மட்டக்களப்பு வீதி மூழ்கியது; 309 பேர் வான்வழியாக மீட்பு!

அதிக மழைவீழ்ச்சி காரணமாக நிரம்பி வழிந்த திருகோணமலை மாவிலாறு அணைக்கட்டின் ஒரு பகுதி நேற்று (நவம்பர்...

images 14
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாயாறு பிரதான பாலம் உடைந்தது: முல்லைத்தீவிலிருந்து மணலாறு, திருகோணமலை போக்குவரத்து முற்றாகத் தடை!

நாட்டில் தொடர்ந்து நிலவி வரும் வெள்ளப் பெருக்கு காரணமாக, முல்லைத்தீவில் உள்ள நாயாறு பிரதான பாலம்...

images 13
செய்திகள்இலங்கை

வெள்ளம் பாதித்த பகுதிகளில் ‘கொதித்தாறிய நீரை’ மட்டுமே அருந்தவும்: சுகாதாரப் பரிசோதகர்கள் சங்கம் எச்சரிக்கை!

வெள்ளம் பாதித்த பகுதிகளில் உள்ள மக்கள் குடிநீரைப் பயன்படுத்துவதில் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும் என்று...

img 692c75999ccf8
செய்திகள்இலங்கை

ஹெலிகொப்டர் விபத்தில் விங் கமாண்டர் நிர்மால் சியம்பலாபிட்டிய உயிரிழப்பு: விமானப்படை இரங்கல்!

சீரற்ற வானிலை காரணமாகப் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருட்களை விநியோகிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தபோது, வென்னப்புவ, லுணுவில...