15 24
இலங்கைசெய்திகள்

1 மில்லியனை கடந்துள்ள சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை

Share

1 மில்லியனை கடந்துள்ள சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை

இந்த வருடம் 1.9 மில்லியனுக்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அதிகாரசபை (SLTDA) தெரிவித்துள்ளது.

டிசம்பர் முதல் பாதியில் மட்டும், 97,115 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளதோடு, ஒரு நாளைக்கு சராசரியாக 6,474 சுற்றுலாப் பயணிகள் நாட்டை வந்தடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், டிசம்பர் மாதத்தில் இதுவரை 193,471 முதல் 229,644 சுற்றுலாப் பயணிகள் வந்துள்ளனர்.

குறிப்பாக டிசம்பர் முதல் பாதியில், 21,174 சுற்றுலாப் பயணிகள் இந்தியாவில் இருந்து வந்துள்ளனர்.

மேலும், ரஷ்யாவில் இருந்து 13,762 சுற்றுலா பயணிகளும், இங்கிலாந்தில் இருந்து 7,417 சுற்றுலா பயணிகளும், ஜெர்மனியில் இருந்து 6,574 சுற்றுலா பயணிகளும் வந்துள்ளனர்.

2023ஆம் ஆண்டில், இந்தியாவில் இருந்து 385,267 சுற்றுலாப் பயணிகளும், ரஷ்யாவிலிருந்து 180,414 சுற்றுலாப் பயணிகளும், ஐக்கிய இராச்சியத்திலிருந்து 166,999 சுற்றுலாப் பயணிகளும் வந்துள்ளனர்.

இந்நிலையில், முதற்கட்டமாக இந்த ஆண்டு 2.3 மில்லியன் சுற்றுலாப் பயணிகளின் வருகை இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

இருப்பினும், பல மாதங்களாக தொடரும் விசா பிரச்சினைகள் சுற்றுலாப் பயணிகளின் வருகைக்கு இடையூறாக இருந்ததுடன், இது இந்த இலக்குகளை அடைவதை ஓரளவு பாதித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
Untitled 27
செய்திகள்விளையாட்டு

ஐபிஎல் 2026: சன்ரைசர்ஸை வீழ்த்தி நடப்பு சாம்பியன் பெங்களூரு அணி அபார வெற்றி!

ஐபிஎல் 2026 தொடரின் தொடக்க ஆட்டத்தில், நடப்பு சாம்பியனான ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணி,...

Untitled 26
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மின்சாரக் கட்டணத் திருத்தம்: பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் இறுதி முடிவு நாளை!

இலங்கையில் எதிர்வரும் ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலப்பகுதிக்கான மின்சாரக் கட்டணத் திருத்தம் குறித்த தனது...

Untitled 25
உலகம்செய்திகள்

ஆந்த்ரோபிக் நிறுவனத்தின் புதிய ஏஐ இரகசியங்கள் கசிவு: சைபர் பாதுகாப்பு நிறுவனங்களுக்குப் பெரும் சவால்!

உலகின் முன்னணி செயற்கை நுண்ணறிவு (AI) நிறுவனமான ஆந்த்ரோபிக் (Anthropic), உருவாக்கி வரும் தனது அடுத்த...

01 39
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சீன ஆய்வுக்கப்பல் ஊழியருக்கு அவசர சிகிச்சை: மனிதாபிமான அடிப்படையில் உதவிய இலங்கை கடற்படை!

இலங்கையின் பிரத்தியேக பொருளாதார வலயத்திற்குள் (EEZ) நங்கூரமிட்டிருந்த சீன ஆய்வுக்கப்பலான ‘ஷி யான் 6’ (Shi...