15 24
இலங்கைசெய்திகள்

1 மில்லியனை கடந்துள்ள சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை

Share

1 மில்லியனை கடந்துள்ள சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை

இந்த வருடம் 1.9 மில்லியனுக்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அதிகாரசபை (SLTDA) தெரிவித்துள்ளது.

டிசம்பர் முதல் பாதியில் மட்டும், 97,115 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளதோடு, ஒரு நாளைக்கு சராசரியாக 6,474 சுற்றுலாப் பயணிகள் நாட்டை வந்தடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், டிசம்பர் மாதத்தில் இதுவரை 193,471 முதல் 229,644 சுற்றுலாப் பயணிகள் வந்துள்ளனர்.

குறிப்பாக டிசம்பர் முதல் பாதியில், 21,174 சுற்றுலாப் பயணிகள் இந்தியாவில் இருந்து வந்துள்ளனர்.

மேலும், ரஷ்யாவில் இருந்து 13,762 சுற்றுலா பயணிகளும், இங்கிலாந்தில் இருந்து 7,417 சுற்றுலா பயணிகளும், ஜெர்மனியில் இருந்து 6,574 சுற்றுலா பயணிகளும் வந்துள்ளனர்.

2023ஆம் ஆண்டில், இந்தியாவில் இருந்து 385,267 சுற்றுலாப் பயணிகளும், ரஷ்யாவிலிருந்து 180,414 சுற்றுலாப் பயணிகளும், ஐக்கிய இராச்சியத்திலிருந்து 166,999 சுற்றுலாப் பயணிகளும் வந்துள்ளனர்.

இந்நிலையில், முதற்கட்டமாக இந்த ஆண்டு 2.3 மில்லியன் சுற்றுலாப் பயணிகளின் வருகை இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

இருப்பினும், பல மாதங்களாக தொடரும் விசா பிரச்சினைகள் சுற்றுலாப் பயணிகளின் வருகைக்கு இடையூறாக இருந்ததுடன், இது இந்த இலக்குகளை அடைவதை ஓரளவு பாதித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
articles2FVR2hd2cLIcHfFF66K3BB
செய்திகள்அரசியல்இலங்கை

மலையகமே எமது தாயகம்; வடக்கு, கிழக்குக்குச் செல்லத் தயாரில்லை – சபையில் வேலுசாமி ராதாகிருஷ்ணன் எம்.பி. முழக்கம்!

மலையக மக்கள் தமது தாயகமாக மலையகத்தையே கருதுவதாகவும், அங்கிருந்து இடம்பெயர்ந்து வடக்கு அல்லது கிழக்கு மாகாணங்களுக்குச்...

images 4 5
செய்திகள்இலங்கை

சம்பா, கீரி சம்பா அரிசிக்கு தட்டுப்பாடு ஏற்படலாம்: அமைச்சர் வசந்த சமரசிங்க எச்சரிக்கை!

‘டிட்வா’ (Ditwa) சூறாவளி காரணமாக நாட்டின் விவசாயத் துறை பாரிய பின்னடைவைச் சந்தித்துள்ளதாகவும், இதன் விளைவாக...

death ele
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

அநுராதபுரத்தில் சோகம்: காட்டு யானைத் தாக்குதலில் 48 வயது விவசாயி பலி; நண்பர்கள் உயிர் தப்பினர்!

அநுராதபுரம், தம்புத்தேகம பகுதியில் தனது விவசாய நிலத்தைப் பாதுகாக்கச் சென்ற விவசாயி ஒருவர் காட்டு யானைத்...

images 3 6
செய்திகள்அரசியல்இலங்கை

ஜனவரி 6 வரை பாராளுமன்றம் ஒத்திவைப்பு: உறுப்பினர்கள் மற்றும் ஊழியர்களுக்கு நீண்ட விடுமுறை!

இலங்கை பாராளுமன்றத்தின் அமர்வுகள் எதிர்வரும் ஜனவரி மாதம் 06 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில்,...