tamilni 216 scaled
இலங்கைசெய்திகள்

அமெரிக்காவிடம் உதவி கோரும் இலங்கை

Share

அமெரிக்காவிடம் உதவி கோரும் இலங்கை

ஊழலுக்கு எதிரான போராட்டத்தில் தொழில்நுட்ப உதவி மற்றும் பயிற்சியை அமெரிக்காவிடம் இருந்து இலங்கை கோரியுள்ளது.

வர்த்தகம் மற்றும் முதலீட்டு உறவுகளை மேம்படுத்தும் வகையில், அமெரிக்காவும் இலங்கையும் நேற்று (10) கொழும்பில் பதினான்காவது வர்த்தக மற்றும் முதலீட்டு கட்டமைப்பு சந்திப்பை நடத்தின.

இந்தக்கூட்டத்தின் போது, இரண்டு நாட்டு பிரதிநிதிகளும் முதலீட்டு சூழல், சமீபத்திய தொழிலாளர் சீர்திருத்தங்கள், அறிவுசார் சொத்து பாதுகாப்பு நடைமுறை, சுங்கம் உட்பட்ட சந்தை அணுகலுக்கான தொழில்நுட்ப தடைகள் குறித்து ஆராய்ந்தனர்.

இந்தநிலையில் வெளிநாட்டு நேரடி முதலீட்டை அங்கீகரிப்பதில் வெளிப்படைத்தன்மை மற்றும் செயல்திறன் என்பன முக்கிய உந்துசக்திகளாக வலியுறுத்தப்பட்டன.

அத்துடன் ஊழலுக்கு எதிரான வலுவான நடவடிக்கைகளை மேற்கொள்வதன் முக்கியத்துவத்தை அமெரிக்கா அடிக்கோடிட்டுக் காட்டியது இதன்போதே, தற்போது முன்மொழியப்பட்டுள்ள ஊழல் தடுப்புச் சட்டத்தின் நடைமுறைக்கு தொழில்நுட்ப உதவிகளை வழங்கவேண்டும் என்று அமெரிக்காவிடம் இலங்கை கோரிக்கை விடுத்துள்ளது.

Share
தொடர்புடையது
8 9
இலங்கைசெய்திகள்

இசைப்பிரியா – பாலச்சந்திரன் படுகொலை விவகாரம் : சட்ட நடவடிக்கைக்கு அஸ்திவாரம்!

இசைப்பிரியா மற்றும் பாலச்சந்திரன் ஆகியோரின் மரணம் தொடர்பான முறைப்பாடு கொழும்பில் பொலிஸ் தலைமையகத்தில் உள்ள சட்டப்...

7 12
இலங்கைசெய்திகள்

ஷிரந்தியை காப்பாற்ற தேரர்களை நாடும் மகிந்த! போலி செய்தி தொடர்பில் வெளியான அறிக்கை

தனது மனைவி ஷிரந்தி ராஜபக்ச கைது செய்யப்படுவதை தடுக்கக் கோரி தற்போதைய ஜனாதிபதி அநுரகுமாரவுக்கு அழுத்தம்...

6 17
இந்தியாசெய்திகள்

விபத்துக்குள்ளான ஏர் இந்தியா விமானம் : வெளியான மற்றுமொரு தகவல்

விபத்துக்குள்ளான ஏர் இந்தியா விமானத்திலிருந்து பதிவு செய்யப்பட்ட தரவை புலனாய்வாளர்கள் பதிவிறக்கம் செய்துள்ளதாக இந்திய சிவில்...

5 16
இலங்கைசெய்திகள்

அரசாங்க பாடசாலைகளில் பாட நேரங்களில் ஏற்படவுள்ள மாற்றம்

அரசாங்க பாடசாலைகளில் ஒரு பாடத்திற்கான கற்பித்தல் நேரத்தை 45 நிமிடங்களிலிருந்து 50 நிமிடங்களாக அதிகரிப்பது குறித்து...