tamilnig 15 scaled
இலங்கைசெய்திகள்

ஜனாதிபதி தேர்தலுக்காக உருவாகும் பரந்த கூட்டணி : ரணிலிற்கு பெருகும் ஆதரவு

Share

ஜனாதிபதி தேர்தலுக்காக உருவாகும் பரந்த கூட்டணி : ரணிலிற்கு பெருகும் ஆதரவு

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை பொது வேட்பாளராக முன்னிறுத்துவதற்கான பரந்த கூட்டணியொன்று உருவாக்கப்பட உள்ளதாக அரசாங்கத்திற்கு ஆதரவளிக்கும் கட்சி ஒன்றின் உள்ளக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தற்போது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பொது வேட்பாளராக ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடவுள்ளதாக ஏற்கனவே அறிவித்துள்ளதாகவும், அதற்கமைவாக அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகள் ஒன்றிணைந்து அமைக்கப்படவுள்ள கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சிகள் இதனை முன்வைத்துள்ளதாகவும் அந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன பெரும்பான்மை ஆதரவை வழங்க வேண்டும் என்ற கருத்தைக் கொண்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இதற்கமைய, ஜனாதிபதித் தேர்தலில் நிமல் லான்சா, சுசில் பிரேமஜயந்த, பிரசன்ன ரணதுங்க உள்ளிட்ட குழுவினர், ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவளிப்பதாக பகிரங்கமாக அறிவித்துள்ளனர்.

மேலும், ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவளிக்க ஐக்கிய மக்கள் சக்தியின் சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவும் விருப்பம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க, வடக்கில் சி. விக்னேஸ்வரன் உள்ளிட்ட குழுக்கள் இதுவரை தமது ஆதரவினை அறிவிக்கவில்லை எனவும் கூறப்படுகின்றது.

இதேவேளை, அநுரகுமார திஸாநாயக்கவின் தேசிய மக்கள் சக்திக்கு ஆதரவளிப்பதற்காக மேலும் பல அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புக்கள் கலந்துரையாடல்களை நடத்தி வருகின்றன.

இதன் காரணமாக எதிர்வரும் பொதுத்தேர்தல் அல்லது ஜனாதிபதி தேர்தல் இந்நாட்டில் அதிக கூட்டணிகளை கொண்ட தேர்தலாக மாறும் என்றும் அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Share
தொடர்புடையது
MediaFile 3 5
செய்திகள்இலங்கை

பேருந்து விபத்துக்களைத் தடுக்க நடமாடும் போதைப்பொருள் சோதனைப் பேருந்து அறிமுகம்: அமைச்சர் பிமல் ரத்நாயக்க திறந்து வைத்தார்!

பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில், பயணப் பேருந்து ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்களிடையே போதைப்பொருள் பயன்பாட்டைக்...

articles2FISZ4kXqRjW2IZH13NUki
உலகம்செய்திகள்

அவுஸ்திரேலிய செனட் சபை ஒத்திவைப்பு: பர்தா அணிந்து சபைக்குள் நுழைந்த செனட்டர் நீக்கம்!

அவுஸ்திரேலியாவின் செனட் சபை இன்று (நவம்பர் 24) ஒரு மணி நேரத்திற்கு இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தீவிர...

farmers scaled 1
உலகம்செய்திகள்

பிரித்தானியாவில் குடும்பப் பண்ணை வரிக்கு எதிர்ப்பு: லிங்கன்ஷையரில் விவசாயிகள் டிராக்டர் போராட்டம்!

பிரித்தானியாவில் விவசாயிகள் இன்று (நவம்பர் 24) ஒரு போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். இந்த வாரம் சமர்ப்பிக்கப்படவுள்ள வரவு...