18 25
இலங்கைசெய்திகள்

காலிமுகத்திடலில் குவிக்கப்பட்டுள்ள வாகனங்கள்: தயாசிறி ஜயசேகர குற்றச்சாட்டு

Share

காலிமுகத்திடலில் குவிக்கப்பட்டுள்ள வாகனங்கள்: தயாசிறி ஜயசேகர குற்றச்சாட்டு

வாகனங்களை காட்டி மக்களை ஏமாற்றி அந்த வாகனங்களை ஏலம் விட்டு திறைசேரிக்கு பணத்தை எடுத்துச்செல்லுமாறு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர குற்றம் சுமத்தியுள்ளார்.

ஜனாதிபதி செயலகத்தை சுற்றி ஆடம்பர வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ளமை தொடர்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இந்த கோரிக்கையை நேற்று (26) முன்வைத்துள்ளார்.

இது தொடர்பில் அங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர்,

வாகனங்களை காட்டுவதன் மூலம் அவர்கள் ஒரு சிறிய மகிழ்ச்சியைப் பெறுகிறார்கள் என்று நினைக்கிறேன். 2015ம் ஆண்டு ஜோன் அமரதுங்க காலிமுகத்திடலில் கார் ஷோ நடத்தியதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த வாகனங்களை அமைச்சர்கள், எம்.பி.க்கள் பயன்படுத்தவில்லை. இந்த வாகனங்களை பொதுப்பணித்துறையினர் மற்றும் அரச அதிகாரிகள் பயன்படுத்தி வருகின்றனர்.

இந்த வாகனங்களை ஏலமிட்டு பணத்தை திறைசேரிக்கு எடுத்துச் செல்லுமாறு ஜனாதிபதியிடம் கேட்டுக்கொள்கின்றேன்.

மேலும், இந்த வாகனங்களை ஏலமிட்டு அரச அதிகாரிகளுக்கு முச்சக்கர வண்டிகளை வழங்குமாறும் தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
4 1
அரசியல்இலங்கைசெய்திகள்

உங்களது ஆட்சிக்காலத்திலேயே காணிகளை விடுவியுங்கள்: ஜனாதிபதியிடம் நாகதீப விகாராதிபதி நேரில் வலியுறுத்தல்!

யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் தனியார் காணிகளை மீண்டும் அவர்களிடமே ஒப்படைக்க நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி அநுர...

25 68ed5a882ec6d
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சித்திரவதை செய்த பொலிஸ் பரிசோதகருக்கு 7 ஆண்டுகள் சிறை: மொனராகலை மேல் நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பு!

நபர் ஒருவரைத் தாக்கி காயப்படுத்தியமை மற்றும் கொடூரமாகச் சித்திரவதை செய்த குற்றத்திற்காகப் பொலிஸ் பரிசோதகர் ஒருவருக்கு...

645574 4228922 updates
உலகம்செய்திகள்

அண்டார்டிகா பனிக்கடியில் ஒளிந்திருக்கும் மர்ம உலகம்: அதிநவீன செயற்கைக்கோள் மூலம் புதிய வரைபடம் வெளியீடு!

அண்டார்டிகாவை மூடியுள்ள பல்லாயிரக்கணக்கான அடி ஆழமான பனிப்படலத்திற்குக் கீழே மறைந்திருக்கும் நிலப்பரப்பு குறித்து சர்வதேச விஞ்ஞானிகள்...

articles2FFE3TpF1W8KlSV5Uh5Ngm
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மீண்டும் தண்டவாளத்தில் ரயில்கள்: திருகோணமலை, மட்டக்களப்பு இரவு நேர சேவைகள் ஜனவரி 20 முதல் ஆரம்பம்!

திட்வா (Titwa) புயல் காரணமாக இடைநிறுத்தப்பட்டிருந்த கொழும்பு கோட்டையிலிருந்து திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு வரையான இரவு...