tamilnid 13 scaled
இலங்கைசெய்திகள்

எரிபொருள் விநியோகம் தொடர்பில் அறிவிப்பு

Share

எரிபொருள் விநியோகம் தொடர்பில் அறிவிப்பு

பண்டிகை காலத்தில் எரிபொருளை தட்டுப்பாடின்றி விநியோகிக்க அனைத்து எரிபொருள் நிரப்பு நிலையங்களும் உடன்பட்டுள்ளதாக பெட்ரோலிய விநியோகச்சங்கத்தின் இணைச்செயலாளர் கபில நாவுதுன்ன தெரிவித்துள்ளார்.

இதேவேளை, அனைத்து எரிபொருள் நிரப்பு நிலையங்களிலும் 50 சதவீத எரிபொருள் கையிருப்பை பேனுமாறு இராஜாங்க அமைச்சர் டி.வி. சானக அறிவுறுத்தியுள்ளார்.

லங்கா ஐஓசி, இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் மற்றும் சினோபெக் ஆகிய எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு இவ்வாறு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, எதிர்வரும் வாரத்தில் தடையின்றிய மின் விநியோகத்தை உறுதி செய்யுமாறும் மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர பணிப்புரை விடுத்துள்ளார்.

இதன்படி, திட்டமிடப்பட்ட அனைத்து மின்வெட்டுகளையும் உடனடியாக இடைநிறுத்துமாறும் அமைச்சர் அறிவித்துள்ளார்.

அடிக்கடி மின்தடை ஏற்படுவதாக நுகர்வோரிடம் இருந்து கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளை ஆராய்ந்த அமைச்சு இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Share
தொடர்புடையது
Untitled 9
செய்திகள்இலங்கை

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் கதிர்காமம் சென்ற பேருந்து தீப்பற்றி எரிந்து நாசம்!

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் வெலிப்பன்ன (Welipanna) நுழைவாயிலுக்கு அருகாமையில் கதிர்காமம் நோக்கிப் பயணித்த சொகுசுப் பேருந்து...

Untitled 8
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையில் கடும் வெப்பம் மே மாதம் வரை நீடிக்கும்: வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!

இலங்கையில் தற்போது நிலவி வரும் கடும் வெப்பமான காலநிலை எதிர்வரும் மே மாதம் வரை நீடிக்கும்...

Untitled 7
செய்திகள்இலங்கைபிராந்தியம்

குமண தேசிய பூங்காவில் சிறுத்தை தாக்குதல்: செக் குடியரசு நாட்டுத் துறவி உயிரிழப்பு!

இலங்கையின் அம்பாறை மாவட்டத்திலுள்ள குமண தேசிய பூங்காவிற்குட்பட்ட பம்பர கஸ்தலாவ ஆரண்ய சேனாசனத்தில் (Bambara Kasthalawa...

Untitled 6
செய்திகள்உலகம்

வட்ஸ்அப்பில் அதிரடி மாற்றங்கள்: ஐபோன் பயனர்களுக்கும் இரட்டை கணக்கு வசதி அறிமுகம்!

பயனர்களின் அன்றாடத் தகவல் பரிமாற்றத்தை மேலும் எளிமையாகவும், நேர்த்தியாகவும் மாற்றும் நோக்கில் வட்ஸ்அப் (WhatsApp) நிறுவனம்...