நடிகைகளை அவுஸ்திரேலியா அழைத்துச் சென்றதாக ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனம்
இலங்கைசெய்திகள்

நடிகைகளை அவுஸ்திரேலியா அழைத்துச் சென்றதாக ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனம்

Share

நடிகைகளை அவுஸ்திரேலியா அழைத்துச் சென்றதாக ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனம்

ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனம் பிரபல நடிகைகளை அவுஸ்திரேலியாவிற்கு அழைத்துச் சென்றுள்ளதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் மகேன் ரட்டட்ட தெயக் அமைப்பின் தலைவர் சஞ்சய சஞ்சய் மகாவத்த இந்த விடயங்களை தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறுகையில், கடந்த 2022ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக் கிண்ண ரி20 போட்டி தொடரில் இவ்வாறு நடிகைகள் அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அண்மையில் வெளியிடப்பட்டுள்ள கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கையில் இந்த தகவல்கள் தெரியவந்துள்ளன.

ஸ்ரீலங்கா கிரிக்கெட்டின் தலைவர் ஷம்மி சில்வா ஐந்து நடிகைகளை கிரிக்கெட் நிர்வாகத்தின் செலவில் வெளிநாட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளார் என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இது தொடர்பில் ஷம்மி சில்வாவுக்கு எதிராக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

அவுஸ்திரேலியாவிற்கு பயணம் மேற்கொண்ட நடிகைகள் பற்றிய பெயர் விபரங்களும் ஆதாரமாக சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.

குற்ற விசாரணை திணைக்களத்திடம் மகேன் ரட்டட தெயக் அமைப்பினால் இந்த முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

முன்னதாக மூன்று நடிகைகளை ஷம்மி சில்வா கிரிக்கெட் சபை பணத்தில் வெளிநாடு அழைத்துச் சென்றுள்ளதாக முறைப்பாடு செய்யப்பட்டதாகவும், கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கையின் அடிப்படையில் இந்த எண்ணிக்கை 5 ஆக அதிகரித்துள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Share

1 Comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
images 24
செய்திகள்இலங்கைபிராந்தியம்

காட்டு யானையைச் சித்திரவதை செய்து தீ வைத்த சம்பவம்: சந்தேக நபர்களுக்கு டிசம்பர் 24 வரை விளக்கமறியல்!

சீப்புக்குளம் பகுதியில் காட்டு யானையொன்றைச் சித்திரவதை செய்து, அதன் உடலில் தீ வைத்த சம்பவத்துடன் தொடர்புடைய...

1743195570
செய்திகள்உலகம்

சிட்னி துப்பாக்கிச் சூடு: வெறுப்புப் பேச்சைத் தடுக்க அவுஸ்திரேலியாவின் புதிய சட்டங்கள் மற்றும் கடும் எச்சரிக்கை!

அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரில் யூத சமூகத்தினரை இலக்கு வைத்து நடத்தப்பட்ட கொடூரமான துப்பாக்கிச் சூட்டைத் தொடர்ந்து,...

1739447780 5783
இந்தியாசெய்திகள்

இந்திய விமானங்களுக்கான வான்வெளித் தடையை ஜனவரி வரை நீடித்தது பாகிஸ்தான்!

இந்திய விமானங்கள் பாகிஸ்தான் வான்வெளியைப் பயன்படுத்துவதற்கு விதிக்கப்பட்டுள்ள தடையை மேலும் ஒரு மாத காலத்திற்கு நீடிப்பதாக...

25 6939a0f597196 1
செய்திகள்இலங்கை

டிட்வா சூறாவளியின் தாக்கம்: 200 கடல் மைல் கடற்கரை மாசு – கடற்றொழிலுக்குப் பாரிய அச்சுறுத்தல்!

சமீபத்தில் நிலவிய ‘டிட்வா’ (Ditwah) சூறாவளி மற்றும் வெள்ளப்பெருக்கினால் இலங்கையின் சுமார் 200 கடல் மைல்...