tamilnih scaled
இலங்கைசெய்திகள்

சிறுவர் தொடர்பில் நாடாளுமன்றக்குழு தகவல்

Share

சிறுவர் தொடர்பில் நாடாளுமன்றக்குழு தகவல்

2023 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதத்தில் மாத்திரம் 168 சிறுவர் பாலியல் துஷ்பிரயோக சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

இதில் 16 வயதுக்குட்பட்ட 22 சிறுமிகள் கர்ப்பமடைந்துள்ளனர் என்று நாடாளுமன்றக்குழு தகவல் வெளியிட்டுள்ளது.

2024 ஆம் ஆண்டிற்கான பாதீட்டு திட்ட முன்மொழிவுகள் மற்றும் ஆலோசனைகளைப் பெறுவதற்காக அண்மையில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.

இதில் ஜனநாயகத்திற்கான வெஸ்ட்மின்ஸ்டர் அறக்கட்டளை உள்ளிட்ட சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகள் இதில் பங்கேற்றுள்ளனர்.

இதன்போது, சிறுவர்களுக்கான பாலியல் கல்வியை வழங்குவதற்கான ஒரு முறையான வேலைத்திட்டத்தை உருவாக்குவது மிகவும் அவசரமான தேவை குறித்து சிவில் சமூக அமைப்புகளின் பிரதிநிதிகள் வலியுறுத்தலை விடுத்துள்ளனர்.

சுகாதார வசதிகள் உள்ளிட்ட ஏனைய வசதிகள் தேவைப்படும் பாடசாலை மாணவிகளின் எண்ணிக்கையை இனங்கண்டு அவர்களுக்குத் தேவையான வசதிகளை வழங்குவதற்கான அமைப்பைத் தயாரிப்பது தொடர்பிலும் குழுவினால் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

மேலும், பெண்கள் நலனில் கவனம் செலுத்தாமையால் ஏற்படக்கூடிய பிரச்சினைகள் மற்றும் பாடசாலை மாணவிகள் எதிர்நோக்கும் சிரமங்கள் தொடர்பில் சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகள் நாடாளுமன்றக் குழுவிடம் விளக்கமளித்துள்ளனர்.

Share
தொடர்புடையது
kurunagale
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ரஷ்யப் பெண்ணின் 3 இலட்சம் பெறுமதியான தொலைபேசி திருட்டு: உனவட்டுனவில் ஒருவர் கைது!

வெளிநாட்டுப் பெண்ணிடம் தொலைபேசி திருடிய குற்றச்சாட்டில் நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். ரஷ்ய நாட்டுப் பெண் ஒருவரிடமிருந்தே...

articles2FzfwGOGwTVgau0U5wzDGJ
செய்திகள்உலகம்

பாகிஸ்தானில் பிரிவினைவாதிகள் நடத்திய கோரத் தாக்குதல்: உயிரிழப்பு 193 ஆக அதிகரிப்பு!

பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் உள்ள 12 நகரங்களில் நேற்று (31) பலூச் விடுதலை இராணுவத்தைச் சேர்ந்த...

nipah scare kyrgyzstan bans animal products imports from v0 KAIhqUTvKj
செய்திகள்உலகம்

இந்திய இறைச்சி மற்றும் விலங்குப் பொருட்களுக்கு கிர்கிஸ்தான் தடை: நிபா வைரஸ் அச்சமே காரணம்!

இந்தியாவில் நிபா (Nipah) வைரஸ் பரவல் நிலவுவதாகக் கூறி, அங்கிருந்து இறக்குமதி செய்யப்படும் இறைச்சி மற்றும்...

image cb55c225d6
செய்திகள்இலங்கை

சந்தையில் எகிறியது இஞ்சியின் விலை: ஒரு கிலோ 2,000 ரூபாவைத் தாண்டியது!

இலங்கையின் உள்ளூர் சந்தைகளில் இஞ்சியின் விலை முன்னெப்போதும் இல்லாத வகையில் சடுதியாக உயர்வடைந்துள்ளதாக நுகர்வோரும் வியாபாரிகளும்...