tamilnaadi 4 scaled
இலங்கைசெய்திகள்

எரிபொருள் விற்பனையில் ஏற்பட்டுள்ள திடீர் மாற்றம்

Share

நாட்டில் நிலவும் உயர் பணவீக்கம் காரணமாக, தினசரி எரிபொருள் விற்பனை சுமார் 40% குறைந்துள்ளதாக பெட்ரோலிய விநியோகஸ்தர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

அதன்படி, நாட்டின் பொருளாதாரம் சாதாரண நிலையில் இருந்த போது நாளொன்றுக்கு சுமார் ஐயாயிரம் மெற்றிக் தொன் பெட்ரோல் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

இதற்கமைய, நாளொன்றுக்கு விற்பனை செய்யப்படும் பெட்ரோலின் அளவு சுமார் இரண்டாயிரம் மெற்றிக் தொன்களாகவும், டீசல் விற்பனை சுமார் 1800 மெற்றிக் தொன்களாகவும் குறைந்துள்ளது.

இதேவேளை, சாதாரண நிலைமைகளின் போது நாளொன்றுக்கு சுமார் 4800 மெற்றிக் தொன் டீசல் விற்பனை செய்யப்பட்டுள்ளதுடன், தற்போது நாளொன்றுக்கு சுமார் 3000 மெற்றிக் தொன் டீசல் விற்பனை செய்யப்படுவதாகவும் கூறப்படுகின்றது.

எவ்வாறாயினும், அடுத்த வருடம் முதலாம் திகதி VAT வரி காரணமாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை அதிகரிக்கப்பட்டால் எரிபொருள் விற்பனை மேலும் வீழ்ச்சியடையும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

அந்த வகையில், எரிபொருள் விற்பனை குறையும் பட்சத்தில் எரிபொருள் நிரப்பு நிலையங்களை பராமரிக்க முடியாத நிலை ஏற்படும் எனவும் பெட்ரோலிய விநியோகஸ்தர்கள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

Share

Recent Posts

தொடர்புடையது
25 69149dba7d420
உலகம்செய்திகள்

முதுகலை, முனைவர் பட்ட மாணவர்களுக்கான கல்வி அனுமதி நடைமுறை இலகுபடுத்தப்பட்டது – மாகாண சான்றளிப்பு இனித் தேவையில்லை!

எதிர்வரும் 2026ஆம் ஆண்டு முதல் சர்வதேச மாணவர்கள் கல்வி அனுமதிகளைப் பெறும் முறையை கனடா இலகுவாக்க...

MediaFile 2 2
செய்திகள்இலங்கை

கெஹல்பத்தர பத்மே வாக்குமூலத்தின் அடிப்படையில்: முன்னணி நடிகை ஒருவர் விரைவில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு அழைக்கப்படலாம்!

கைது செய்யப்பட்டுத் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள பாதாள உலகக் குழு உறுப்பினர் கெஹல்பத்தர பத்மே வழங்கிய வாக்குமூலத்தின்...

25 69148ab688d8c
செய்திகள்உலகம்

அமெரிக்காவிற்குத் திறமையான தொழிலாளர்கள் தேவை: H-1B விசா கட்டண உயர்வுக்குப் பின் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவிப்பு!

தனது நாட்டிற்கு வெளிநாடுகளில் இருக்கும் திறமையான தொழிலாளர்கள் மற்றும் சிறப்புத் திறன்களைக் கொண்டவர்கள் தேவை என...

1747801591 RAMITH 6
இலங்கைசெய்திகள்

நாகரிகமற்ற செயல்: ரூ. 296 மில்லியன் சொத்துக் குவிப்பு வழக்கில் பிணையில் வந்த கெஹெலியவின் மகன் ரமித் ரம்புக்வெல்ல

முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவின் மகனும், முன்னாள் தனிப்பட்ட செயலாளருமான ரமித் ரம்புக்வெல்ல, நீதிமன்றத்திற்கு வெளியே...