tamilni 165 scaled
இலங்கைசெய்திகள்

இலங்கையில் மீண்டும் சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள்

Share

இலங்கையில் மீண்டும் சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள்

இலங்கையின் இந்தோ – அவுஸ்திரேலிய தட்டு எல்லையில் மற்றுமொரு பெரிய அளவிலான நிலநடுக்கம் ஏற்படக்கூடும் என பேராதனை பல்கலைக்கழகத்தின் முன்னாள் சிரேஷ்ட பேராசிரியர் அதுல சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்புக்கு 310 கிலோமீற்றர் தொலைவில் வடகிழக்கு ஆழ்கடல் பகுதியில் நேற்று 11ஆம் திகதி அதிகாலை 1.30 மணியளவில் ஏற்பட்ட 4.65 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் தொடர்பிலேயே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

நிலநடுக்கம் குறித்து பேராசிரியர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

நேற்றைய தினம் இந்தோ – அவுஸ்திரேலிய டெக்டோனிக் தகடு மற்றும் இந்தோனேசியா மற்றும் ஜப்பானுக்கு இடையிலான டெக்டோனிக் தகடுகளில் 08 நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளன.

இந்த நிலநடுக்கங்கள் அனைத்தும் ரிக்டர் அளவுகோலில் 4 அளவை விட அதிகமாக பதிவாகியுள்ளது.

இருப்பினும், இந்த ஆழ்கடல் நிலநடுக்கத்தால் இலங்கைக்கு சுனாமி ஆபத்து எதுவும் இல்லை எனவும், கிழக்கு கடற்கரைக்கு அருகில் உள்ள கடலில் நடுக்கம் ஏற்பட்டால் சுனாமி அபாயம் அதிகரிக்கலாம் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மேலும், கடந்த காலங்களில் நாட்டில் பல நிலநடுக்கங்கள் பதிவாகியுள்ளதுடன், மொராக்கோவில் ஏற்பட்ட நிலநடுக்கம் சக்திவாய்ந்த நிலநடுக்கமாகவும் பதிவாகியுள்ளது.

இலங்கை இந்திய – அவுஸ்திரேலிய பீடபூமியில் அமைந்துள்ள இரண்டு தகடுகள் பிரிந்து பூமிக்குள் ஏற்படும் மாற்றங்களே இந்த நிலநடுக்கங்களுக்குக் காரணம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தெற்கு அரைக்கோளத்தில் எதிர்காலத்தில் பல நிலநடுக்கங்கள் ஏற்படலாம் எனவும், அதற்காக நாம் பயப்பட வேண்டியதில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
Untitled 27
செய்திகள்விளையாட்டு

ஐபிஎல் 2026: சன்ரைசர்ஸை வீழ்த்தி நடப்பு சாம்பியன் பெங்களூரு அணி அபார வெற்றி!

ஐபிஎல் 2026 தொடரின் தொடக்க ஆட்டத்தில், நடப்பு சாம்பியனான ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணி,...

Untitled 26
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மின்சாரக் கட்டணத் திருத்தம்: பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் இறுதி முடிவு நாளை!

இலங்கையில் எதிர்வரும் ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலப்பகுதிக்கான மின்சாரக் கட்டணத் திருத்தம் குறித்த தனது...

Untitled 25
உலகம்செய்திகள்

ஆந்த்ரோபிக் நிறுவனத்தின் புதிய ஏஐ இரகசியங்கள் கசிவு: சைபர் பாதுகாப்பு நிறுவனங்களுக்குப் பெரும் சவால்!

உலகின் முன்னணி செயற்கை நுண்ணறிவு (AI) நிறுவனமான ஆந்த்ரோபிக் (Anthropic), உருவாக்கி வரும் தனது அடுத்த...

01 39
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சீன ஆய்வுக்கப்பல் ஊழியருக்கு அவசர சிகிச்சை: மனிதாபிமான அடிப்படையில் உதவிய இலங்கை கடற்படை!

இலங்கையின் பிரத்தியேக பொருளாதார வலயத்திற்குள் (EEZ) நங்கூரமிட்டிருந்த சீன ஆய்வுக்கப்பலான ‘ஷி யான் 6’ (Shi...