24 66108de0a9de3
இலங்கைசெய்திகள்

ஜனாதிபதி தலைமையில் பாரம்பரிய நிகழ்வு

Share

பெரும்போக நெற்செய்கையில் பெறப்படும் பிரதான பகுதியை ஸ்ரீ மஹா போதிக்கு அர்ப்பணிக்கும் 57 ஆவது தேசிய புத்தரிசி திருவிழா(National Fresh Rice Festival) நடைபெறவுள்ளது.

இந்த விழா இன்று(06) ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க(Ranil Wickremesinghe) தலைமையில் ஸ்ரீ மஹா போதிக்கு முன்பாக நடைபெறவுள்ளது.

விவசாய அபிவிருத்தி திணைக்களத்தினால் 57 ஆவது தடவையாக நடாத்தப்படும் இந்த புத்தரிசி திருவிழாவில், இலங்கையில் உள்ள ஒவ்வொரு விவசாய சேவை நிலையங்களிலிருந்தும் சேகரிக்கப்படும் அரிசி ஸ்ரீ மஹா போதிக்கு வழங்கப்படவுள்ளது.

புத்தரிசி திருவிழாவில் பங்கேற்பதற்காக நாட்டின் அனைத்து பகுதிகளிலிருந்தும் விவசாயிகள் அனுராதபுரத்திற்கு (Anuradhapura) வருகை தருவது வழக்கமான விடயமாகும்.

எதிர்வரும் ஆண்டு பருவத்தில் பயிர்கள் செழிக்க புத்தரின் ஆசியை பெறுவதே இந்த புத்தரிசி திருவிழாவின் நோக்கம் என விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
25 688de9f74b46a
இலங்கைசெய்திகள்

உள்நாட்டு இறைவரித் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு

2024/2025 மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமான அறிக்கைகளைச் சமர்ப்பிப்பதற்காக வழங்கப்பட்ட தனிப்பட்ட அடையாள எண்ணின் (PIN) செல்லுபடியாகும்...

25 688df4fc39fbe
இலங்கைசெய்திகள்

வாய்த்தர்க்கத்தில் ஒருவர் சுட்டுக்கொலை.. பொலிஸாரிடம் சரணடைந்த சந்தேகநபர்

அம்பலாந்தோட்டை, ஹுங்கம பிங்காம பகுதியில் இன்று (02) மதியம் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது....

25 688e26468e8e8
சினிமாசெய்திகள்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு காலமானார்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு உடல்நலக் குறைவால் காலமானார். அவர் தனது 71ஆவது வயதில்...

25 688e158f2c449
இலங்கைசெய்திகள்

சட்டத்தை நடைமுறைப்படுத்தியவரால் நிராகரிக்கப்பட்ட ஜனாதிபதி சிறப்புரிமைகள்

இலங்கையின் முதல் நிறைவேற்றதிகார ஜனாதிபதியான ஜே.ஆர்.ஜெயவர்த்தனவால் கொண்டுவரப்பட்ட ஜனாதிபதிகளுக்கான சலுகைகளை அவரே பெற்றுக்கொள்ளவில்லை என அரசியல்...