24 66108de0a9de3
இலங்கைசெய்திகள்

ஜனாதிபதி தலைமையில் பாரம்பரிய நிகழ்வு

Share

பெரும்போக நெற்செய்கையில் பெறப்படும் பிரதான பகுதியை ஸ்ரீ மஹா போதிக்கு அர்ப்பணிக்கும் 57 ஆவது தேசிய புத்தரிசி திருவிழா(National Fresh Rice Festival) நடைபெறவுள்ளது.

இந்த விழா இன்று(06) ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க(Ranil Wickremesinghe) தலைமையில் ஸ்ரீ மஹா போதிக்கு முன்பாக நடைபெறவுள்ளது.

விவசாய அபிவிருத்தி திணைக்களத்தினால் 57 ஆவது தடவையாக நடாத்தப்படும் இந்த புத்தரிசி திருவிழாவில், இலங்கையில் உள்ள ஒவ்வொரு விவசாய சேவை நிலையங்களிலிருந்தும் சேகரிக்கப்படும் அரிசி ஸ்ரீ மஹா போதிக்கு வழங்கப்படவுள்ளது.

புத்தரிசி திருவிழாவில் பங்கேற்பதற்காக நாட்டின் அனைத்து பகுதிகளிலிருந்தும் விவசாயிகள் அனுராதபுரத்திற்கு (Anuradhapura) வருகை தருவது வழக்கமான விடயமாகும்.

எதிர்வரும் ஆண்டு பருவத்தில் பயிர்கள் செழிக்க புத்தரின் ஆசியை பெறுவதே இந்த புத்தரிசி திருவிழாவின் நோக்கம் என விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...