2025 ஆம் ஆண்டின் மூன்றாவது காலாண்டிற்கான (ஜூலை முதல் செப்டம்பர் வரை) இலங்கையின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் (GDP) வளர்ச்சி வீதம் 5.4% ஆகப் பதிவாகியுள்ளது எனத் தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் (Department of Census and Statistics – DCS) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டின் முக்கிய பொருளாதார துறைகளின் வலுவான செயல்திறன் இந்த குறிப்பிடத்தக்க வளர்ச்சிக்கு பங்களித்துள்ளது.
அதன்படி, இந்த காலப்பகுதியில், விவசாய நடவடிக்கைகள் 3.6% அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளன. அதேநேரம், கைத்தொழில் நடவடிக்கைகள் 8.1% என்ற குறிப்பிடத்தக்க அதிகரிப்பைக் காட்டியுள்ளன.
அத்துடன்,, சேவைத்துறை 3.5% வளர்ச்சி அடைந்துள்ளதாக தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, இந்த ஆண்டில் இரண்டாம் காலாண்டில் (ஏப்ரல் முதல் ஜூன் வரை), இலங்கையின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி வீதம் 4.9 சதவீதமாக பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.