IMG 20220322 WA0001
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

கடும் பொருளாதார நெருக்கடியால் இலங்கையர்கள் தமிழகத்துக்குப் படையெடுப்பு!

Share

இலங்கையில் கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக கடுமையான பொருளாதார சிக்கல் ஏற்பட்டு மக்கள் அத்தியாவசியப்பொருள்களை வாங்க முடியாமல் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். இந்நிலையில், இலங்கையின் கடுமையான பொருளாதார நெருக்கடியைத் தாக்கு பிடிக்க முடியாமல் பெரும்பாலான இலங்கையர்கள் அகதிகளாக தமிழகத்துக்குப் படையெடுத்துச் செல்லும் சூழல் உருவாகி வருகின்றது.

இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையே 13 மணல் தீடைகள் உள்ளன. இதில் இந்தியாவுக்குச் சொந்தமான 6 தீடைகளும், இலங்கைக்குச் சொந்தமான 7 தீடைகளும் உள்ளன. இந்நிலையில், தனுஷ்கோடிக்கு அடுத்த மூன்றாம் மணல் தீடை பகுதியில் சந்தேகத்துக்கு இடமாக ஓர் ஆண், இரு பெண்கள் மற்றும் ஒரு கை குழந்தை உட்பட 3 குழந்தைககள் என 6 பேர் நிற்கின்றனர் என்று கியூ பிரிவு பொலிஸாருக்கு இரகசியத் தகவல் கிடைத்துள்ளது.

இதையடுத்து கியூ பிரிவுப் பொலிஸார், இந்தியக் கடலோர காவல் படைக்குத் தகவல் கொடுத்ததையடுத்து கடலோர காவல் படையினர் அவர்களைக் கைதுசெய்து விசாரணை நடத்தியதில் முதல் கட்டமாக இலங்கை தலைமன்னார் பகுதியில் இருந்து அகதிகளாக தமிழகத்துக்கு வந்தமை தெரியவந்துள்ளது.

WhatsApp Image 2022 03 22 at 1.51.36 PM

இதையடுத்து 6 பேரையும் இந்தியக் கடலோர காவல் படைக்குச் சொந்தமான கப்பலில் ஏற்றி மண்டபம் கடலோர காவல் படை அலுவலகத்துக்கு விசாரணைக்காக அனுப்பப்பட்டுள்ளனர். விசாரணைகளின் பின்னர் அவர்கள் மரைன் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்படவுள்ளனர்.

இலங்கையில் இருந்து தமிழகம் வந்த அகதிகள் தரும் உறுதியான தகவல்களை அடுத்து அவர்களை இலங்கை அகதிகள் முகாமில் வைப்பார்களா அல்லது சிறைக்குக் கொண்டு செல்வார்களா என்பது முழு விசாரணைக்குப் பின்னர் தெரியவரும்.

மேலும், தற்போது சென்றுள்ள 6 பேர் அகதிகளாக எதற்கு வந்தார்கள் என்று பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றது. மேலும், இது போன்று இலங்கையில் இருந்து அகதிகளாக ஏராளமானோர் தமிழகத்துக்குச் செல்லத் தயாராக இருக்கின்றனர் என்று விசாரணையில் தெரியவருகின்றது.

இதையடுத்து இலங்கையில் இருந்து அகதிகளாக அதிகமானோர் தமிழகத்துக்குச் செல்ல வாய்ப்புள்ளது எனக் கிடைத்த தகவலை அடுத்து இந்தியக் கடலோர காவல் படை, கியூ பிரிவு, மரைன் பொலிஸார் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
40
உலகம்செய்திகள்

போர்நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்ட இந்திய – பாகிஸ்தான்..! ட்ரம்ப் வெளியிட்ட தகவல்

இந்தியாவும் பாகிஸ்தானும் உடனடி போர்நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக...

37
இலங்கைசெய்திகள்

இலங்கையில் கடவுச்சீட்டு பெற மீண்டும் நீண்ட வரிசையில் காத்திருக்கும் மக்கள்

பத்தரமுல்ல குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் தலைமை அலுவலகத்திற்கு அருகில் நேற்று முதல் நீண்ட வரிசைகள்...

38
இலங்கைசெய்திகள்

மொட்டு கட்சியில் மாற்றம்..! முக்கிய பதவிக்கு புதிய நியமனம்

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் செயற்பாட்டு பிரதானி பதவிக்கு முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ...

36
இலங்கைசெய்திகள்

கொட்டாஞ்சேனை மாணவி விவகாரம்: பிரதமர் தலைமையில் முக்கிய சந்திப்பு Prime Minister Meeting Kotahena Student Death

கொட்டாஞ்சேனையில் தவறான முடிவெடுத்து உயிரிழந்த மாணவி தொடர்பிலான விசாரணைகளை விரைவுபடுத்துமாறு பிரதமர் ஹரிணி அமரசூரிய, பொலிஸ்...