25 6847df28bf8fe
இலங்கைசெய்திகள்

அமெரிக்காவில் இலங்கை பெண்ணுக்கு நேர்ந்த கதி: பெருந்தொகை டொலர்கள் நாசம்

Share

அமெரிக்காவில் சிகோபி பகுதியில் இலங்கை உணவக லொறியான Island Spice தீவிபத்துக்குள்ளாகி முழுமையாக சேதமடைந்துள்ளது.

அதன் உரிமையாளர் டீ பெர்னாண்டோ என்ற பெண், வியாழக்கிழமை காலை ஒரு உணவு தொடர்பான நிகழ்வுக்குச் செல்லும் வழியில் தனது உணவு லொரி தீப்பிடித்ததாக கூறினார்.

எனது உறவினர் லொறியை ஓட்டி வந்தார். அதில் இருந்து திடீரென புகை வெளியேற தொடங்கியபோது நான் பின்னால் இருந்தேன்,” என பாதிக்கப்பட்ட இலங்கை பெண் கண்ணீருடன் தெரிவித்துள்ளது.

2022ஆம் ஆண்டு முதல் இயங்கி வரும் உணவு லொறியை இனி பயன்படுத்த முடியாத நிலைக்குள்ளாகியுள்ளதென அவர் கூறியுள்ளார்.

இந்த லொறி எங்களுக்கு சமையலறையை விட மிகவும் பெரியது. இது எங்கள் இதயத்தின் மற்றும் சமூகத்தின் ஒரு பகுதியாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

தீ விபத்துகளிலிருந்து பாதுகாக்கவும், அது விதிமுறைகளுக்கு ஏற்ப உள்ளதா என்பதை உறுதிப்படுத்தவும் லொறிக்கு சரியான உபகரணங்களைப் பெற ஆயிரக்கணக்கான டொலர்களை செலவிட்டதாக பாதிக்கப்பட்ட பெண்ணான பெர்னாண்டோ தெரிவித்தார்.

இதையெல்லாம் மாற்றுவதற்கு எவ்வளவு செலவாகும் என்று எனக்குத் தெரியவில்லை என பெர்னாண்டோ குறிப்பிட்டுள்ளார்.

இந்த தீ விபத்தில் யாருக்கும் காயங்கள் ஏற்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

Share
தொடர்புடையது
25 684c110644e76
இலங்கைசெய்திகள்

கிழித்தெறியப்பட்ட பௌத்த தோரண பதாதைகள்! விளக்கமளித்த பெண்

தனியார் காணி ஒன்றில் பௌத்த விகாரை வடிவில் பதாதைகள் கடந்த இரு தினங்களுக்கு முன்னர் அமைக்கப்பட்டிருந்தது....

images 3 1
இலங்கைசெய்திகள்

அகமதாபாத் விமான விபத்தில் உயிர் பிழைத்த ஒரே பயணி பகிர்ந்த தகவல்

உலகையே உலுக்கிய அகமதாபாத் விமான விபத்தில் ஒரே ஒரு பயணி மட்டும் உயிர் பிழைத்த நிகழ்வு...

25 684befed3eedb
இலங்கைசெய்திகள்

ஒபரேஷன் ரைசிங் லயன்! ஈரானை உலுக்கிய தாக்குதலால் அணு ஆயுத விளிம்பில் மத்திய கிழக்கு

அலை அலையாக வான்வழித் தாக்குதல்கள், உயர் இராணுவ மற்றும் அரசியல் அதிகாரிகளைக் கொல்வது மற்றும் இராணுவ...

images 8
இலங்கைசெய்திகள்

யாழ்.மாநகர சபையின் முதல்வர் தொடர்பில் சுமந்திரன் வெளியிட்ட கருத்து

இலங்கை தமிழரசுக்கட்சி முன்னிறுத்திய வேட்பாளர்களுக்கு வாக்களித்து தெரிவு நிகழ்ச்சிக்கு ஒத்துழைத்த அனைவருக்கும் நன்றி என தமிழரசுக்...