24 66597db5ef3eb
இலங்கைசெய்திகள்

தென் கொரிய பயண கண்காட்சியில் சாதனை படைத்த இலங்கை

Share

தென் கொரிய பயண கண்காட்சியில் சாதனை படைத்த இலங்கை

தென் கொரியாவில் (South Korea) அண்மையில் நடைபெற்ற 39ஆவது சியோல் சர்வதேச பயண கண்காட்சியில் (SITF) சிறந்த சாவடி வடிவமைப்புக்கான விருதை இலங்கை சுற்றுலாத்துறை பெற்றுள்ளது.

குறித்த சர்வதேச பயண நிகழ்வு கடந்த மே 09 முதல் 12 வரை நடைபெற்றுள்ளதுடன் இதில் 70 நாடுகள் தங்கள் சுற்றுலா வளங்கள் மற்றும் கலாசாரங்களை வெளிப்பபடுத்தியுள்ளன.

இதில் இலங்கையினால் வடிவமைக்கப்பட்ட சாவடியின் அமைப்பு, கருப்பொருள்கள், சுற்றுலாத் தயாரிப்புகள் மற்றும் பொருட்கள் பங்கேற்பாளர்கள் மத்தியில் அதிக கவனத்தை ஈர்த்துள்ளது.

இந்நிலையில், ஒவ்வொரு வருடமும் கணிசமான அளவு சுற்றுலாப் பயணிகளை இலங்கைக்கு வருகை தருவதால் தென் கொரியா இலங்கைக்கு சுற்றுலாப் பயணிகளை அனுமதிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது.

இலங்கைக்கு கொரியப் பயணிகள் அதிக ஆர்வம் காட்டுவதில் கலாசார மற்றும் மதப் பின்னணிகள், எண்ணற்ற பயண இடங்கள் ஆகியவை சிறப்பம்சமாக உள்ளன.

இந்த வருட ஜனவரி முதல் ஏப்ரல் வரை தென் கொரியாவிலிருந்து மொத்தம் 4,005 வருகை தந்துள்ளதுடன் இது 2023ஆம் ஆண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடும்போது படிப்படியான அதிகரிப்பையும் காட்டியுள்ளது.

Share
தொடர்புடையது
articles2FVR2hd2cLIcHfFF66K3BB
செய்திகள்அரசியல்இலங்கை

மலையகமே எமது தாயகம்; வடக்கு, கிழக்குக்குச் செல்லத் தயாரில்லை – சபையில் வேலுசாமி ராதாகிருஷ்ணன் எம்.பி. முழக்கம்!

மலையக மக்கள் தமது தாயகமாக மலையகத்தையே கருதுவதாகவும், அங்கிருந்து இடம்பெயர்ந்து வடக்கு அல்லது கிழக்கு மாகாணங்களுக்குச்...

images 4 5
செய்திகள்இலங்கை

சம்பா, கீரி சம்பா அரிசிக்கு தட்டுப்பாடு ஏற்படலாம்: அமைச்சர் வசந்த சமரசிங்க எச்சரிக்கை!

‘டிட்வா’ (Ditwa) சூறாவளி காரணமாக நாட்டின் விவசாயத் துறை பாரிய பின்னடைவைச் சந்தித்துள்ளதாகவும், இதன் விளைவாக...

death ele
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

அநுராதபுரத்தில் சோகம்: காட்டு யானைத் தாக்குதலில் 48 வயது விவசாயி பலி; நண்பர்கள் உயிர் தப்பினர்!

அநுராதபுரம், தம்புத்தேகம பகுதியில் தனது விவசாய நிலத்தைப் பாதுகாக்கச் சென்ற விவசாயி ஒருவர் காட்டு யானைத்...

images 3 6
செய்திகள்அரசியல்இலங்கை

ஜனவரி 6 வரை பாராளுமன்றம் ஒத்திவைப்பு: உறுப்பினர்கள் மற்றும் ஊழியர்களுக்கு நீண்ட விடுமுறை!

இலங்கை பாராளுமன்றத்தின் அமர்வுகள் எதிர்வரும் ஜனவரி மாதம் 06 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில்,...