24 66173c095b57f
இலங்கைசெய்திகள்

ரூபாவின் பெறுமதியில் ஏற்படும் அதிகரிப்பு : ரணில் வெளியிட்ட தகவல்

Share

ரூபாவின் பெறுமதியில் ஏற்படும் அதிகரிப்பு : ரணில் வெளியிட்ட தகவல்

ரூபாவுக்கு நிகரான அமெரிக்க டொலரின் பெறுமதி எதிர்காலத்தில் 280 ஆக குறையும் என மத்திய வங்கி தெரிவித்துள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

ஒரு வருடத்திற்கு முன்னர் இருந்த சிரமங்கள் தற்போது முடிவுக்கு வந்துள்ளதாக ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

“நாங்கள் அனைவரும் தற்போது சற்று தளர்வாக வாழ்க்கையை கழித்து வருகின்றோம். இரண்டு அல்லது மூன்று வருடங்களுக்கு முன்னர் அவ்வாறான நிலைமை ஒன்று காணப்படவில்லை.

அனைவரும் துன்பங்களை அனுபவித்தோம். பணிக்கு செல்ல முடியவில்லை. உணவு பெற்றுக் கொள்ள முடியவில்லை.

மருத்துவமனைக்கு செல்ல முடியாமல் போனது பாடசாலைகள் மூடப்பட்டது. அதிகமான துன்பங்களை நீங்களே அனுபவித்தீர்கள்.

குறைந்த வருமானம் கொண்ட மக்கள், பொருளாதார நெருக்கடியில் வாழ்ந்த மக்கள், விவசாயிகள் போன்றோர் கடும் நெருக்கடியின் போதும் அதனை பொறுத்துக் கொண்டனர். அதற்கு உங்கள் அனைவருக்கும் நன்றி கூறுவதற்கு நான் கடமைப்பட்டுள்ளேன்.

நாட்டை ஏற்கும் போது கடுமையான சிக்கலுக்குரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டியிருக்கும் என நான் நினைத்தேன்.

அரசாங்கத்தின் செலவுகளை குறைத்தோம். வற் வரி அதிகரித்தோம். அந்த வரியை நீங்களே சுமந்தீர்கள். அதனை சுமந்தமையினால் நாடு நிலையான நிலைக்குள்ளாகியுள்ளது.

தற்போது கடன் பெறுவதில்லை. டொலர் பெறுமதி குறைந்துள்ளது. மேலும் குறையும். 280 ரூபாயை எட்டும் என மத்திய வங்கி தெரிவித்துள்தென அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
05 18
செய்திகள்உலகம்

வெறும் $35,000-ல் ஒரு போர்!: அமெரிக்காவையே திணறடிக்கும் மலிவு விலை ட்ரோன்கள் – போர்க்களத்தில் ஒரு புதிய புரட்சி!

நவீன போர்க்களம் தற்போது ஒரு மிகப்பெரிய மாற்றத்தைச் சந்தித்து வருகிறது. ஒரு காலத்தில் பல கோடி...

06 16
செய்திகள்உலகம்

நமது கரையை வந்தடைந்த போர்!: இந்தியப் பெருங்கடல் ஒரு ‘பொருளாதார நெடுஞ்சாலை’ – நாமல் ராஜபக்ச எச்சரிக்கை!

இந்தியாவின் புதுடெல்லியில் நடைபெற்ற ‘WION World PULSE’ மாநாட்டில் உரையாற்றிய இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் நாமல்...

04 17
செய்திகள்இலங்கைபிராந்தியம்

எரிசக்தி நெருக்கடியை சமாளிக்க விசேட பொறிமுறை: ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க நாட்டு மக்களுக்கு உரை

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழலால் ஏற்பட்டுள்ள உலகளாவிய எரிபொருள் விநியோகத் தடைகளை எதிர்கொள்ள இலங்கை...

03 18
செய்திகள்உலகம்

‘சேவ் அமெரிக்கா’ சட்டமூலம்: ஆதரவளிக்காத செனட்டர்களுக்கு டொனால்டு ட்ரம்ப் கடும் எச்சரிக்கை!

அமெரிக்க வரலாற்றிலேயே மிகவும் தீர்மானமிக்க சட்டமூலமாக அமையவுள்ள ‘சேவ் அமெரிக்கா’ (Save America Act) சட்டமூலத்திற்கு...