ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களது பெயர் அறிவிப்பு
இலங்கைசெய்திகள்

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களது பெயர் அறிவிப்பு

Share

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களது பெயர் அறிவிப்பு

ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடமாட்டார் என சுற்றுலாத் துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெருமவும் அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவார்கள்.

ரணில் விக்ரமசிங்கவின் வேட்புமனு எதிர்வரும் காலங்களில் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படும். அறிவிப்பு வெளியானதும், சில பெரிய மாற்றங்களை பொதுமக்கள் பார்க்கலாம்.

ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடமாட்டார். அதற்குப் பதிலாக கடந்த ஆண்டு தேர்தலின் போது அவர் செய்ததைப் போல டலஸ் அழகப்பெருமவின் வேட்புமனுவுக்கு ஆதரவளிப்பார்.

சஜித் பிரேமதாச மீண்டும் தேர்தலில் தோல்வியடைய முடியாது, எனவே அடுத்த வருடம் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட மாட்டார்.

நாட்டைக் காப்பாற்ற கடந்தாண்டு ரணில் விக்ரமசிங்க முன்வந்தார் என்பது மக்களுக்குத் தெரியும். கடந்த ஆண்டிலிருந்து கணிசமான முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.

நாட்டை சரியான பாதையில் இட்டுச் செல்லவும், நீண்டகால மற்றும் நிலையான அபிவிருத்திக்கான மேடையை அமைப்பதற்கும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவால் முடியும் என தெரிவித்துள்ளார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Recent Posts

தொடர்புடையது
court
இலங்கைசெய்திகள்

நாடு கடத்தப்பட்ட சந்தேக நபர்கள் 90 நாட்கள் தடுப்புக் காவலில்: குண்டுச் சம்பவங்களுடன் தொடர்பு குறித்து விசாரணை!

இலங்கையில் நடந்த குற்றச் சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் எனக் கூறப்பட்டு, அண்மையில் இந்தியாவிலிருந்து நாடு கடத்தப்பட்ட மூன்று...

w 1280h 720format jpgimgid 01k941vebwvgjntwjfmrjvf3ysimgname trump 1762146498940
செய்திகள்உலகம்

இரகசியமாக அணு ஆயுதப் பரிசோதனை செய்கின்றன: அமெரிக்காவும் பரிசோதிப்பதில் தவறில்லை – டொனால்ட் ட்ரம்ப்!

பாகிஸ்தான், சீனா, ரஷ்யா மற்றும் வடகொரியா ஆகிய நாடுகள் இரகசியமாக அணு ஆயுத சோதனைகளில் ஈடுபட்டு...

Anil Ambani
இந்தியாசெய்திகள்

ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் கடன் மோசடி: அனில் அம்பானி குழுமத்தின் ₹ 7,500 கோடிக்கு அதிகமான சொத்துக்கள் முடக்கம்!

ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் (RCom) மற்றும் அதன் இணை நிறுவனங்கள் மீதான கடன் மோசடி வழக்குகளைத் தொடர்ந்து,...

images 8
செய்திகள்இலங்கை

யாழ். செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வு ஒத்திவைப்பு: மழை காரணமாக அடுத்த ஆண்டு ஜனவரி 19-இல் மீண்டும் ஆராய முடிவு!

யாழ்ப்பாணம் செம்மணி மனிதப் புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகள் குறித்துத் தீர்மானம் ஒன்று எடுக்கப்பட்டுள்ளது....