24 6680f522acbc0
இலங்கைசெய்திகள்

இலங்கையின் கடவுச்சீட்டுகள் தொடர்பில் வெளியான அறிவித்தல்

Share

இலங்கையின் கடவுச்சீட்டுகள் தொடர்பில் வெளியான அறிவித்தல்

நாளை (01) முதல் காலாவதியாகவுள்ள இலங்கை கடவுச்சீட்டுகளின் (Sri lanka Passport) செல்லுபடியாகும் காலம் மேலும் ஒரு வருடத்துக்கு நீடிக்கப்பட்டுள்ளது.

இதனைக் குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகம் ஹர்ஷ இலுக்பிட்டிய (Harsha Ilukpitiya) தெரிவித்துள்ளார்.

இதன்படி எதிர்வரும் நவம்பர் மாதம் முதல் இலத்திரனியல் கடவுச்சீட்டு வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே இலத்திரனியல் கடவுச்சீட்டு வழங்கும் செயற்பாட்டினை முன்னெடுப்பதற்கு வசதியாக நாளை முதல் காலாவதியாகும் கடவுச்சீட்டுகளின் செல்லுபடியாகும் காலம் நீடிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

புதிய இலத்திரனியல் கடவுச்சீட்டுகள் அச்சிடுவதற்கு ஏலங்கள் கோரப்பட்ட பின்னர் ஒரு நிறுவனம் தெரிவு செய்யப்பட்டுள்ளதாகவும், அதற்கான நடவடிக்கைகள் தற்போது நடைபெற்று வருவதாகவும் குடிவரவுத்துறையின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை குறித்த திட்டம் தொடங்கப்பட்டவுடன் ஆண்டுதோறும் சுமார் 7 இலட்சம் இலத்திரனியல் கடவுச்சீட்டுகளை வழங்க முடியும் என திணைக்களம் தீர்மானித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
30 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ரியாத் மற்றும் டுபாய்க்கான விமான சேவைகளை மீண்டும் ஆரம்பிக்கிறது ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்!

மத்திய கிழக்கில் நிலவும் மோதல் நிலைமைகளுக்கு மத்தியில் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த ரியாத் மற்றும் டுபாய்க்கான தினசரி...

29 2
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

சர்வதேச பொருளாதார சவால்களை எதிர்கொள்ள இலங்கை தயார்: மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் வீரசிங்க நம்பிக்கை

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் மற்றும் உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வு...

23 4
செய்திகள்இலங்கை

தமிழக சட்டமன்ற தேர்தல்: தவெக-அதிமுக கூட்டணி குறித்து வெளியாகும் பரபரப்பு தகவல்கள்

தமிழகத்தில் நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அரசியல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. குறிப்பாக, நடிகர் விஜய்யின்...

22 7
செய்திகள்அரசியல்இலங்கை

முன்னாள் முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனின் அடிப்படை உரிமை மனு: விசாரணை வரும் 13-ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு!

கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது...