24 661e7216576be
இலங்கைசெய்திகள்

வெளிநாடொன்றிலிருந்து நாடு கடத்தப்படும் அபாயத்தில் இலங்கை பெண்கள்

Share

வெளிநாடொன்றிலிருந்து நாடு கடத்தப்படும் அபாயத்தில் இலங்கை பெண்கள்

அவுஸ்திரேலியாவில் ஆபத்தை எதிர்நோக்கியுள்ளதாக இலங்கை தமிழ் குடும்பம் ஒன்று தெரிவித்துள்ளது.

அவுஸ்திரேலிய குடியேற்ற சட்டமூலம் நடைமுறைக்கு வந்துள்ள நிலையில் இந்த நெருக்கடி நிலைமை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக தன்னையும் தன் தாயும் சகோதரியும் சிறையில் அடைக்கப்படலாம் அல்லது இலங்கைக்கு திருப்பி அனுப்பப்படலாம் என்று அச்சப்படுவதாக யுவதி ஒருவர் தெரிவித்துள்ளார்.

குடும்பத்துடன் இலங்கையிலிருந்து தப்பிச் சென்ற கென்பராவைச் சேர்ந்த 19 வயது தாதியர் மாணவி பியுமெதர்ஷிகா கனேஷன், சிறையில் அடைக்கப்படும் அல்லது நாடு கடத்தப்படும் அச்சுறுத்தலை எதிர்நோக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

குடியேற்ற சட்டத்தில் அவுஸ்திரேலிய அரசாங்கத்தினால் முன்வைக்கப்பட்ட மாற்றங்கள் மனித உரிமைகளுடன் முற்றிலும் பொருந்தாதவை என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

ஆபத்தை ஏற்படுத்தும் சட்டத்தை கைவிட வேண்டும் என மனித உரிமைகள் குழுக்கள் செனட் குழுவிடம் தெரிவித்தன.

Share
தொடர்புடையது
Untitled 53
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கை – மலேசியா இடையே புதிய வான்வழி இணைப்பு: பாட்டிக் ஏர் தனது சேவையைத் தொடங்கியது!

மலேசியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான விமான இணைப்பை வலுப்படுத்தும் ஒரு புதிய மைல்கல்லாக, பாட்டிக் ஏர் மலேசியா...

Untitled 52
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தொட்டகமுவ மும்முறை கொலை வழக்கு: 18 ஆண்டுகளின் பின் நான்கு சந்தேக நபர்கள் விடுதலை!

கடந்த 2006-ஆம் ஆண்டு பாலப்பிட்டிய, தொட்டகமுவ பகுதியில் இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் உட்பட மூவர் சுட்டுக்கொல்லப்பட்ட...

Untitled 51
செய்திகள்இலங்கைபிராந்தியம்

யக்கல கட்சி அலுவலக விவகாரம்: ஜே.வி.பி-யிடம் இருந்து முன்னிலை சோசலிசக் கட்சியிடம் ஒப்படைக்க நீதிமன்றம் உத்தரவு!

யக்கல (Yakkala) பகுதியில் அமைந்துள்ள முன்னிலை சோசலிசக் கட்சியின் (FLSP) அலுவலகத்தை ஜனதா விமுக்தி பெரமுன...

Untitled 50
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் தலைவர் சரத் கணேகோடா ராஜினாமா: புதிய பதில் தலைவர் நியமனம்!

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் (SriLankan Airlines) மற்றும் ஸ்ரீலங்கன் கேட்டரிங் ஆகிய நிறுவனங்களின் தலைவராகப் பணியாற்றி வந்த...