24 661e7216576be
இலங்கைசெய்திகள்

வெளிநாடொன்றிலிருந்து நாடு கடத்தப்படும் அபாயத்தில் இலங்கை பெண்கள்

Share

வெளிநாடொன்றிலிருந்து நாடு கடத்தப்படும் அபாயத்தில் இலங்கை பெண்கள்

அவுஸ்திரேலியாவில் ஆபத்தை எதிர்நோக்கியுள்ளதாக இலங்கை தமிழ் குடும்பம் ஒன்று தெரிவித்துள்ளது.

அவுஸ்திரேலிய குடியேற்ற சட்டமூலம் நடைமுறைக்கு வந்துள்ள நிலையில் இந்த நெருக்கடி நிலைமை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக தன்னையும் தன் தாயும் சகோதரியும் சிறையில் அடைக்கப்படலாம் அல்லது இலங்கைக்கு திருப்பி அனுப்பப்படலாம் என்று அச்சப்படுவதாக யுவதி ஒருவர் தெரிவித்துள்ளார்.

குடும்பத்துடன் இலங்கையிலிருந்து தப்பிச் சென்ற கென்பராவைச் சேர்ந்த 19 வயது தாதியர் மாணவி பியுமெதர்ஷிகா கனேஷன், சிறையில் அடைக்கப்படும் அல்லது நாடு கடத்தப்படும் அச்சுறுத்தலை எதிர்நோக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

குடியேற்ற சட்டத்தில் அவுஸ்திரேலிய அரசாங்கத்தினால் முன்வைக்கப்பட்ட மாற்றங்கள் மனித உரிமைகளுடன் முற்றிலும் பொருந்தாதவை என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

ஆபத்தை ஏற்படுத்தும் சட்டத்தை கைவிட வேண்டும் என மனித உரிமைகள் குழுக்கள் செனட் குழுவிடம் தெரிவித்தன.

Share
தொடர்புடையது
21 1
இலங்கைசெய்திகள்

விபத்துக்குள்ளான கெப் ரக வாகனம்

புல்மோட்டையிலிருந்து சென்ற கெப் வாகனம் புடவைக்கட்டில் விபத்துக்குள்ளாகியுள்ளது. இன்று (23) அதிகாலை 04:35 மணியளவில் புல்மோட்டையில்...

19 2
இலங்கைசெய்திகள்

மூதூர் பிரதேச சபை இலங்கை தமிழரசுக் கட்சி வசம்!

திருகோணமலை – மூதூர் பிரதேச சபைக்கான, தவிசாளர் மற்றும் உதவி தவிசாளர் தெரிவு இன்று(23) கிழக்கு...

20
இலங்கைசெய்திகள்

இலங்கை ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்

இலங்கை மத்திய வங்கி இன்றைய நாளுக்கான (23) நாணயமாற்று விகிதங்களை வெளியிட்டுள்ளது. அதன்படி, அமெரிக்க டொலர்...

22 1
உலகம்செய்திகள்

அமெரிக்க நகரங்களில் ட்ரம்பிற்கு எதிராக போராட்டத்தில் குதித்த மக்கள்

ஈரான்(IRAN) மீதான தாக்கு தலை கண்டித்தும் போரை உடனே நிறுத்த வேண்டும் என்றும் அமெரிக்காவில்(USA) பல்வேறு...