இராமேஸ்வரத்திலிருந்து படகு மூலம் மன்னார் நோக்கிப் பயணித்த இலங்கையைச் சேர்ந்த வர்த்தகர் உட்பட நால்வரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மன்னாரைச் சேர்ந்த அந்த வர்த்தகர், தனக்கு எதிராக நிலுவையில் இருந்த வழக்கு நடவடிக்கைகள் குறித்த அச்சத்தில் படகு வழியாக இராமேஸ்வரத்திற்குத் தப்பிச் சென்றதாகக் கூறப்படுகிறது.
அவர் இராமநாதபுரம் மாவட்டத்தில் தனது குடும்பத்துடன் வாடகை வீட்டில் தங்கியிருந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தற்போது அவர் மீதான வழக்குகள் முடிவடைந்த நிலையில், அவர் தமிழகத்தில் இருந்து மீண்டும் மன்னாருக்குத் திரும்ப முடிவு செய்துள்ளார். இதற்காகவே அவர் இராமேஸ்வரம் பகுதியில் இருந்து படகு ஒன்றில் பயணித்துள்ளார்.
இந்நிலையில், இலங்கை கடற்பரப்பில் வைத்துக் குறித்த வர்த்தகர் உட்பட நால்வரும் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.