25 2
இலங்கைசெய்திகள்

தீவு ஒன்றில் சிக்கியிருந்த இலங்கைத் தமிழர்கள்! நீண்ட மோதலுக்கு பின் கிடைத்த விடுதலை

Share

தீவு ஒன்றில் சிக்கியிருந்த இலங்கைத் தமிழர்கள்! நீண்ட மோதலுக்கு பின் கிடைத்த விடுதலை

இந்தியப் பெருங்கடலில் அமைந்துள்ள பிரித்தானிய – அமெரிக்க இராணுவத் தீவான டியாகோ கார்சியாவில்(Diego Garcia) கடந்த 03 ஆண்டுகளுக்கும் மேலாக சிக்கியிருந்த புலம்பெயர்ந்த இலங்கைர்கள் குழுவொன்று பிரித்தானியாவுக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

16 குழந்தைகள் உட்பட 60 பேர் அடங்கிய இலங்கைத் தமிழர்கள் குழுவொன்றே இவ்வாறு பிரித்தானியா அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கடந்த 2021ஆம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் இந்த குழுவினர் டியாகோ கார்சியா தீவில் அடிப்படை வசதிகள் இன்றி மிகவும் மோசமான நிலையில் வசித்து வந்துள்ளனர்.

இவ்வாறு, பிரித்தானியாவுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ள இலங்கை தமிழர்கள், அந்நாட்டில் 6 மாதக்காலம் தங்கியிருக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

மேலும், குறித்த ஆறு மாதங்களுக்கு தேவையான நிதி வசதியையும் அந்நாட்டு வெளிவிவகார அமைச்சு வழங்க தீர்மானித்துள்ளது.

இவர்கள் தீவில் இருந்த காலப்பகுதியில், பல உண்ணாவிரதங்கள் மற்றும் தற்கொலை முயற்சிகளில் ஈடுபட்டதாகவும் அதில் சிலர் சிகிச்சைக்காக ருவாண்டாவிற்கு மாற்றப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

அத்துடன், முகாமுக்குள் உடல் ரீதியான வன்கொடுமைகள் மற்றும் துன்புறுத்தல் போன்ற குற்றச்சாட்டுகளும் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, பிரித்தானியாவின் இந்த தீர்மானம், நீதிக்கான நீண்ட மோதலிற்கு கிடைத்த வரவேற்க தக்க நடவடிக்கை என தமிழர்களை பிரதிநிதித்துவம் செய்யும் சட்டத்தரணிகள் தெரிவித்துள்ளனர்.

Share
தொடர்புடையது
24 66dfd5556ba12
செய்திகள்இலங்கை

புலம்பெயர் இலங்கையர்களுக்கு வாக்களிக்கும் உரிமை: அநுர அரசு உறுதி! – அமைச்சர் விஜித ஹேரத் அறிவிப்பு

வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கையர்களுக்கு வாக்களிக்கும் உரிமையை வழங்குவதற்கு எதிர்காலத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என அநுர குமார...

124787881
செய்திகள்உலகம்

கனடா பிரதமரைச் சந்திக்க மறுத்த டொனால்ட் ட்ரம்ப்: ஆசியப் பயணத்தில் புதிய சர்ச்சை

ஆசியான் உச்சி மாநாட்டிற்குப் பிறகு தனது ஆசியப் பயணத்தின் இரண்டாவது கட்டமாக ஜப்பான் தலைநகர் டோக்கியோவுக்கு...

17334765974
செய்திகள்இலங்கை

தாயும் மூன்று வயது மகனும் சடலமாக மீட்பு – குடும்பத் தகராறில் கொலை-தற்கொலையா என சந்தேகம்

காலி – படபொல, கஹட்டபிட்டிய, பொல்லுன்னாவ பகுதியில் உள்ள ஒரு வீட்டில் இறந்து கிடந்த மூன்று...

MediaFile 8
இலங்கைசெய்திகள்

196 கிலோ கேரள கஞ்சாவுடன் முன்னாள் விமானப்படை சார்ஜென்ட் கைது! – முக்கிய போதைப்பொருள் கடத்தல்காரரின் மைத்துனர்

பொலிஸ் விசேட அதிரடிப்படையின் அதிகாரிகள் குழு நடத்திய சிறப்பு சோதனை நடவடிக்கையில், பெருமளவு கேரள கஞ்சாவுடன்...