tamilnif 6 scaled
இலங்கைசெய்திகள்

கொழும்பில் காதலியின் ஏமாற்றத்தால் காதலனின் முடிவு

Share

கொழும்பில் காதலியின் ஏமாற்றத்தால் காதலனின் முடிவு

கொழும்பு, ஹோமாகம பிரதேசத்தில் தொலைபேசி அழைப்புக்கு தனது காதலி பதிலளிக்காததால் மனமுடைந்து இளைஞன் உயிரை மாய்த்துக் கொண்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உடபுசல்லாவ பகுதியைச் சேர்ந்த மகேஸ்வரன் சரத் குமார் என்ற 27 வயதுடைய நபரே நேற்று முன்தினம் உயிரை மாய்த்துள்ளார்.

சில மாதங்களுக்கு முன்னர் ஹோமாகம, கலவிவத்த பிரதேசத்தில் நிர்மாணிக்கப்பட்டு வரும் இரண்டு மாடி வீட்டில் கொத்தனார் வேலை செய்து வந்துள்ளார்.

வேலை முடிந்ததும் காதலிக்கு பலமுறை தொலைபேசி அழைப்பேற்படுத்தியுள்ளார். ஆனால் காதலி பதிலளிக்காதமையினால் குறித்த இளைஞன் மின் விசிறியில் தூக்கிட்டு உயிரை மாய்த்துள்ளார்.

குறித்த இளைஞன் எப்படித் தூக்கில் தொங்கத் தயாராகிறார் என்பதைத் தெரிவித்து பல புகைப்படங்கள் மற்றும் குறுஞ்செய்திகளை தனது காதலிக்கு அனுப்பியுள்ளமை தெரியவந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

உயிரிழந்த இளைஞரின் பிரேத பரிசோதனை ஹோமாகம மேலதிக மரண விசாரணை அதிகாரி மானெல் கமகேவினால் நடத்தப்பட்டது.

இது தொடர்பாக ஹோமாகம பொலிஸாரால் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...