tamilnif 6 scaled
இலங்கைசெய்திகள்

கொழும்பில் காதலியின் ஏமாற்றத்தால் காதலனின் முடிவு

Share

கொழும்பில் காதலியின் ஏமாற்றத்தால் காதலனின் முடிவு

கொழும்பு, ஹோமாகம பிரதேசத்தில் தொலைபேசி அழைப்புக்கு தனது காதலி பதிலளிக்காததால் மனமுடைந்து இளைஞன் உயிரை மாய்த்துக் கொண்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உடபுசல்லாவ பகுதியைச் சேர்ந்த மகேஸ்வரன் சரத் குமார் என்ற 27 வயதுடைய நபரே நேற்று முன்தினம் உயிரை மாய்த்துள்ளார்.

சில மாதங்களுக்கு முன்னர் ஹோமாகம, கலவிவத்த பிரதேசத்தில் நிர்மாணிக்கப்பட்டு வரும் இரண்டு மாடி வீட்டில் கொத்தனார் வேலை செய்து வந்துள்ளார்.

வேலை முடிந்ததும் காதலிக்கு பலமுறை தொலைபேசி அழைப்பேற்படுத்தியுள்ளார். ஆனால் காதலி பதிலளிக்காதமையினால் குறித்த இளைஞன் மின் விசிறியில் தூக்கிட்டு உயிரை மாய்த்துள்ளார்.

குறித்த இளைஞன் எப்படித் தூக்கில் தொங்கத் தயாராகிறார் என்பதைத் தெரிவித்து பல புகைப்படங்கள் மற்றும் குறுஞ்செய்திகளை தனது காதலிக்கு அனுப்பியுள்ளமை தெரியவந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

உயிரிழந்த இளைஞரின் பிரேத பரிசோதனை ஹோமாகம மேலதிக மரண விசாரணை அதிகாரி மானெல் கமகேவினால் நடத்தப்பட்டது.

இது தொடர்பாக ஹோமாகம பொலிஸாரால் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

Share
தொடர்புடையது
Untitled 27
செய்திகள்விளையாட்டு

ஐபிஎல் 2026: சன்ரைசர்ஸை வீழ்த்தி நடப்பு சாம்பியன் பெங்களூரு அணி அபார வெற்றி!

ஐபிஎல் 2026 தொடரின் தொடக்க ஆட்டத்தில், நடப்பு சாம்பியனான ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணி,...

Untitled 26
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மின்சாரக் கட்டணத் திருத்தம்: பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் இறுதி முடிவு நாளை!

இலங்கையில் எதிர்வரும் ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலப்பகுதிக்கான மின்சாரக் கட்டணத் திருத்தம் குறித்த தனது...

Untitled 25
உலகம்செய்திகள்

ஆந்த்ரோபிக் நிறுவனத்தின் புதிய ஏஐ இரகசியங்கள் கசிவு: சைபர் பாதுகாப்பு நிறுவனங்களுக்குப் பெரும் சவால்!

உலகின் முன்னணி செயற்கை நுண்ணறிவு (AI) நிறுவனமான ஆந்த்ரோபிக் (Anthropic), உருவாக்கி வரும் தனது அடுத்த...

01 39
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சீன ஆய்வுக்கப்பல் ஊழியருக்கு அவசர சிகிச்சை: மனிதாபிமான அடிப்படையில் உதவிய இலங்கை கடற்படை!

இலங்கையின் பிரத்தியேக பொருளாதார வலயத்திற்குள் (EEZ) நங்கூரமிட்டிருந்த சீன ஆய்வுக்கப்பலான ‘ஷி யான் 6’ (Shi...