17 7
இலங்கைசெய்திகள்

இலங்கை அரசாங்கம் பெற்றுள்ள பெருந்தொகை கடன்

Share

இலங்கை அரசாங்கம் பெற்றுள்ள பெருந்தொகை கடன்

இந்த ஆண்டின் (2024) முதல் நான்கு மாதங்களில் அரசாங்கம் 796.5 பில்லியன் ரூபாயை கடனாகப் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கை அமைச்சு வெளியிட்டுள்ள மத்திய ஆண்டு நிதி நிலை அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த காலப்பகுதியில் கடன் சேவை மற்றும் அபிவிருத்தித் திட்டங்களுக்காக உள்நாட்டு கடனாக 734.2 பில்லியன் ரூபா பெறப்பட்டுள்ளதுடன், வெளிநாட்டு திட்டக்கடனாக பெறப்பட்ட தொகை 62.3 பில்லியன் ரூபாய் ஆகும்.

மேலும், 2024ஆம் ஆண்டின் முதல் நான்கு மாதங்களில் உள்நாட்டுக் கடனுக்கான வட்டியை செலுத்துவதற்காக 692.1 பில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளது.

மேலும், வெளிநாட்டுக் கடனுக்கான வட்டியை செலுத்துவதற்காக செலவிடப்பட்ட தொகை 34 பில்லியன் ரூபா ஆகும்.

இந்த ஆண்டின் முதல் நான்கு மாதங்களில், நாட்டின் கடன்களில் தோராயமாக 92.2 சதவீதம் உள்நாட்டிலிருந்து பெறப்பட்டவை என்றும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...