tamilni 98 scaled
இலங்கைசெய்திகள்

நல்லிணக்கத்தை விரும்பாத இலங்கை அரசாங்கம்

Share

நல்லிணக்கத்தை விரும்பாத இலங்கை அரசாங்கம்

மாவீரர் நினைவேந்தலை மேற்கொண்டவர்களுக்கு எதிராக பயங்கரவாத தடைச் சட்டத்தை பயன்படுத்துவதன் மூலம் இலங்கை அரசாங்கம் நல்லிணக்கத்தை விரும்பவில்லை என்பதே தெளிவாகின்றது என தமிழ் தேசிய மக்கள் முன்னணி தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் குற்றஞ்சாட்டியுள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்று(05.12.2023) இடம்பெற்ற அமர்வில் பங்கேற்று கருத்து வெளியிட்ட போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

“மீண்டும் ஒருமுறை நினைவேந்தலை செய்வதை தடுக்கும் வகையிலேயே பயங்கரவாத தடைச் சட்டம் பயன்படுத்தப்பட்டுள்ளது.

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் அமைப்பாளர் மற்றும் அவரது மகன் ஆகியோர் மாவீரர் துயிலும் இல்லமொன்றுக்கு சென்றிருந்தனர்.

சிவப்பு மற்றும் மஞ்சள் கொடிகளை கொண்டுசெல்வதற்காக வாகனமொன்றையும் அமைப்பாளர் வாடகைக்கு அமர்த்திருந்தார்.

தமது கட்சியின் அமைப்பாளர் நினைவுகூரல் நிகழ்வில் கூட பங்கேற்கவில்லை. எனவும் மீளத் திரும்பிக்கொண்டிருக்கும் போது இடைநடுவே, சோதனைச் சாவடியில் அவர் நிறுத்தப்பட்டு, சோதனையிட்ட பின்னர் வாகனத்தை கைப்பற்றுவதற்கு பொலிஸார் தீர்மானித்தனர்.

சிவப்பு மஞ்சள் கொடியை வைத்திருந்ததன் காரணமாக சாரதியையும் பொலிஸார் கைதுசெய்தனர் எனவும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கூறியுள்ளார்.

சிவப்பு மற்றும் மஞ்சள் கொடிகள் என்பது தமிழ் தேசியத்திற்கான நிறங்களாகும் எனவும் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் என்ற எனது கட்சியின் கொடியிலும் சிவப்பு மஞ்சள் உள்ளது.

பெடரல் கட்சியின் கொடியிலும் சிவப்பு மஞ்சள் உள்ளது என கூறியுள்ளது. போர்க் குற்றவாளியான பிள்ளையானின் கட்சிக் கொடியிலும் சிவப்பு மஞ்சள் உள்ளது.

எனினும் தமது கட்சியின் அமைப்பாளர் மற்றும் அவரது மகன் ஆகியோர் கைதுசெய்யப்படவில்லை என்ற போதிலும் சாரதி கைதுசெய்யப்பட்டதால், பொலிஸாருடன் சென்றிருந்தனர்.

நினைவேந்தல் நிகழ்வை செய்ய வேண்டும் என தமது அமைப்பாளரின் மகன் விரும்பினார் எனவும் அது குறித்து பொலிஸாரிடம் கேட்டுக்கொண்டார்.

வெளியே சென்று தீபம் ஏற்றுமாறு பொலிஸார் கூறியுள்ளதை அடுத்து வெளியே சென்று தீபம் ஏற்றிய போது அமைப்பாளரையும் அவரது மகனையும் பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

குறித்த மூவரும் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டுள்ளனர். சர்வதேசத்திற்கு கூறிய விடயத்திற்கு எதிராக நினைவுகூரலை செய்யும் போது நீங்கள் பயங்கரவாத தடைச் சட்டத்தைப் பயன்படுத்துகின்றீர்கள்.

வெறுமனே நினைவுகூரலை செய்தால், அதனை விசாரணை செய்ய வேண்டுமாயின் வேறு சட்டங்களை பயன்படுத்தியிருக்க முடியும் என்ற போதிலும் பயங்கரவாத தடைச் சட்டத்தை பயன்படுத்தியன் மூலம் மக்களை அச்சுறுத்த முற்படுகின்றீர்கள்.

அவர்களை அச்சமூட்டி, நினைவேந்தலை கைவிடுவதை உறுதி செய்ய முனைகின்றீர்கள் எனவும் உங்களின் நோக்கம் என்பது நல்லிணக்கம் அல்ல.

உங்களின் நோக்கம் என்பது, தமிழ் மக்களின் உரிமைகளை நிலைநாட்டுவது அல்ல. அடுத்த தடவை மக்கள் தமது செயற்பாடுகளை சுயமாக கட்டுப்படுத்தி, நினைவேந்தலை செய்யாமல் தடுப்பதே உங்களின் நோக்கமாக உள்ளது” என குறிப்பிட்டுள்ளார்.

Share

Recent Posts

தொடர்புடையது
world 60
செய்திகள்அரசியல்இலங்கை

செயற்கை நுண்ணறிவு எதிர்காலத்தை கொள்கை மற்றும் அறநெறிகளுடன் வடிவமைக்க வேண்டும்: பிரதமர் ஹரினி அமரசூரிய வலியுறுத்தல்

இலங்கை வெறுமனே செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்திற்குத் தன்னைத் தகவமைத்துக் கொள்வதை விடுத்து, வலுவான கொள்கை,...

world 59
செய்திகள்உலகம்

டெனரிஃப் தீவை வந்தடையும் சொகுசுக் கப்பலில் ஹன்டா வைரஸ் பரவல்: ஐரோப்பிய நாடுகள் அவசர வெளியேற்ற நடவடிக்கை

‘எம்வி ஹோண்டியஸ்’ (MV Hondius) என்ற சொகுசுக் கப்பலில் பரவி வரும் கொடிய ஹன்டா வைரஸ்...

world 58
செய்திகள்இந்தியா

தமிழக முதலமைச்சர் விஜய் அதிரடி அறிவிப்பு: மாநில நிதிநிலை குறித்து விரைவில் ‘வெள்ளை அறிக்கை’ வெளியீடு

தமிழகத்தின் புதிய முதலமைச்சராக இன்று (மே 10) பதவியேற்றுக்கொண்ட சி. ஜோசப் விஜய், தனது முதல்...

world 57
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மின் கட்டண உயர்வு: தரமற்ற நிலக்கரி இறக்குமதி சுமையை மக்கள் மீது சுமத்த வேண்டாம் என சஜித் பிரேமதாச வலியுறுத்தல்

அரசாங்கத்தினால் அண்மையில் அறிவிக்கப்பட்ட மின்சாரக் கட்டண உயர்வு, தரமற்ற நிலக்கரி இறக்குமதியினால் ஏற்பட்ட நட்டத்தை மின்...