tamilnaadi 25 scaled
இலங்கைசெய்திகள்

ஜோர்தானில் சம்பளமின்றி தவிக்கும் இலங்கையர்கள்

Share

ஜோர்தானில் உள்ள இரண்டு ஆடைத்தொழிற்சாலைகளில் பணிபுரியும் இலங்கை ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கப்படவில்லை மற்றும் அவர்களது குடியிருப்பு மற்றும் வேலை அனுமதிகள் புதுப்பிக்கப்படவில்லை என அம்மானில் உள்ள இலங்கை தூதரகம் தெரிவித்துள்ளது.

இதனையடுத்து தொழிற்சாலை நிர்வாகம் மற்றும் ஜோர்டானிய அதிகாரிகளின் ஒருங்கிணைப்புடன் தூதரகத்தின் ஒருங்கிணைந்த முயற்சியால், இரண்டு ஆடைத் தொழிற்சாலைகளைச் சேர்ந்த 296 தொழிலாளர்களில், 41 தொழிலாளர்கள் சம்பள நிலுவைத் தொகை மற்றும் சமூகப் பாதுகாப்புக் கோரிக்கைகளைப் பெற்ற பின்னர், இலங்கைக்குத் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.

அத்துடன் இரண்டு தொழிற்சாலைகளில் பணிபுரியும் 30 தொழிலாளர்களை, ஜோர்டானில் உள்ள மற்ற ஆடைத் தொழிற்சாலைகளில் அவர்களது ஒப்புதலுடன் மீண்டும் பணியமர்த்தவும் தூதரகம் இணங்கியுள்ளது.

மேலும், எஞ்சியுள்ள தொழிலாளர்களை அவர்களது சம்பள நிலுவைகள் மற்றும் பிற உரிமைகளை பெற்றுக்கொடுத்து விரைவாக நாட்டுக்கு திருப்பி அனுப்புவதற்கு ஜோர்டானிய அதிகாரிகள், தொழிற்சாலை நிர்வாகம் மற்றும் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் என்பன தீவிரமாக செயற்பட்டு வருகின்றன.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...