tamilnaadi 25 scaled
இலங்கைசெய்திகள்

ஜோர்தானில் சம்பளமின்றி தவிக்கும் இலங்கையர்கள்

Share

ஜோர்தானில் உள்ள இரண்டு ஆடைத்தொழிற்சாலைகளில் பணிபுரியும் இலங்கை ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கப்படவில்லை மற்றும் அவர்களது குடியிருப்பு மற்றும் வேலை அனுமதிகள் புதுப்பிக்கப்படவில்லை என அம்மானில் உள்ள இலங்கை தூதரகம் தெரிவித்துள்ளது.

இதனையடுத்து தொழிற்சாலை நிர்வாகம் மற்றும் ஜோர்டானிய அதிகாரிகளின் ஒருங்கிணைப்புடன் தூதரகத்தின் ஒருங்கிணைந்த முயற்சியால், இரண்டு ஆடைத் தொழிற்சாலைகளைச் சேர்ந்த 296 தொழிலாளர்களில், 41 தொழிலாளர்கள் சம்பள நிலுவைத் தொகை மற்றும் சமூகப் பாதுகாப்புக் கோரிக்கைகளைப் பெற்ற பின்னர், இலங்கைக்குத் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.

அத்துடன் இரண்டு தொழிற்சாலைகளில் பணிபுரியும் 30 தொழிலாளர்களை, ஜோர்டானில் உள்ள மற்ற ஆடைத் தொழிற்சாலைகளில் அவர்களது ஒப்புதலுடன் மீண்டும் பணியமர்த்தவும் தூதரகம் இணங்கியுள்ளது.

மேலும், எஞ்சியுள்ள தொழிலாளர்களை அவர்களது சம்பள நிலுவைகள் மற்றும் பிற உரிமைகளை பெற்றுக்கொடுத்து விரைவாக நாட்டுக்கு திருப்பி அனுப்புவதற்கு ஜோர்டானிய அதிகாரிகள், தொழிற்சாலை நிர்வாகம் மற்றும் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் என்பன தீவிரமாக செயற்பட்டு வருகின்றன.

Share
தொடர்புடையது
25 688de9f74b46a
இலங்கைசெய்திகள்

உள்நாட்டு இறைவரித் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு

2024/2025 மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமான அறிக்கைகளைச் சமர்ப்பிப்பதற்காக வழங்கப்பட்ட தனிப்பட்ட அடையாள எண்ணின் (PIN) செல்லுபடியாகும்...

25 688df4fc39fbe
இலங்கைசெய்திகள்

வாய்த்தர்க்கத்தில் ஒருவர் சுட்டுக்கொலை.. பொலிஸாரிடம் சரணடைந்த சந்தேகநபர்

அம்பலாந்தோட்டை, ஹுங்கம பிங்காம பகுதியில் இன்று (02) மதியம் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது....

25 688e26468e8e8
சினிமாசெய்திகள்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு காலமானார்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு உடல்நலக் குறைவால் காலமானார். அவர் தனது 71ஆவது வயதில்...

25 688e158f2c449
இலங்கைசெய்திகள்

சட்டத்தை நடைமுறைப்படுத்தியவரால் நிராகரிக்கப்பட்ட ஜனாதிபதி சிறப்புரிமைகள்

இலங்கையின் முதல் நிறைவேற்றதிகார ஜனாதிபதியான ஜே.ஆர்.ஜெயவர்த்தனவால் கொண்டுவரப்பட்ட ஜனாதிபதிகளுக்கான சலுகைகளை அவரே பெற்றுக்கொள்ளவில்லை என அரசியல்...