24 66178e547e14c
இலங்கைசெய்திகள்

புதிய மின் சீர்திருத்த சட்டமூலத்தில் திருப்தியில்லை

Share

புதிய மின் சீர்திருத்த சட்டமூலத்தில் திருப்தியில்லை

அண்மையில் திருத்தப்பட்ட மின் மறுசீரமைப்பு சட்டமூலம் தொடர்பில் தொழிற்சங்கங்களுடன் விரிவான கலந்துரையாடல்களை மேற்கொள்ளவில்லை என இலங்கை மின்சார சபை ஊழியர் சங்கம் (CEBWU) குற்றம் சுமத்துவதாக பொதுச் செயலாளர் ரஞ்சன் ஜெயலால் (Ranjan Jayalal) தெரிவித்துள்ளார்.

செய்தி தளமொன்றின் நேர்காணலில் நேற்றைய தினம் (10.04.2024) கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

கடந்த 8ஆம் திகதி நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தின் போது புதுப்பிக்கப்பட வேண்டிய சட்டமூலத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர (Kanchana Wijesekera) அறிவித்திருந்தார்.

இச் சட்டமூலத்தின் திருத்தப்பட்ட பதிப்பை வர்த்தமானியில் வெளியிடுவதற்கும், அதன் பின்னர் மேலதிக பரிசீலனை மற்றும் ஒப்புதலுக்காக நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்குமாறும் அமைச்சுக்கு அறிவுறுத்தப்பட்டிருந்தது.

இந்நிலையில், தென் மற்றும் மேல் மாகாணங்களில் உள்ள சில மின்சார சபையின் கிளைகளுடன் அமைச்சகம் கலந்தாலோசித்ததில் பெரும்பான்மையை பிரதிநிதித்துவப்படுத்தும் பொது தொழிற்சங்கங்கள் கவலை வெளியிட்டுள்ளன என ரஞ்சன் ஜெயலால் கூறியுள்ளார்.

மேலும் அவர், “சட்டமூலம் திருத்தப்பட்டதாக அமைச்சகம் கூறினாலும், உத்தேச சட்டமூலத்தின் உள்ளடக்கம் மற்றும் நோக்கங்கள் மாற்றப்படவில்லை.

ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்த மின்சார சபை தொழிற்சங்கங்கள் இந்த சட்டமூலம் குறித்து எந்த எதிர்ப்பையும் எழுப்பவில்லை. எனவே, முக்கிய எதிர்க்கட்சிகளின் ஆதரவுடன் இந்த சட்டமூலம் நிச்சயமாக நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படும்.

முழு எரிசக்தி துறையையும் அதானி குழுமத்திற்கு வழங்குவதற்கு சாத்தியமான அனைத்து நடவடிக்கைகளையும் அமைச்சர் விஜேசேகர எடுத்து வருகின்றார். மேலும், முன்மொழியப்பட்ட சட்டமூலமானது ‘இந்திய வம்சாவளியை’ கொண்ட சட்டமாகும்.

இந்த சட்டமூலம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டவுடன் அதன் அரசியலமைப்புத் தன்மைக்கு எதிர்ப்பு தெரிவிப்போம்.

அது மாத்திரமன்றி, புதிய சட்டமூலத்தினாலான விளைவுகள் தலைமுறைகளுக்கும் நீடிக்கும்” என குற்றம் சுமத்தியுள்ளார்.

Share
தொடர்புடையது
25 688de9f74b46a
இலங்கைசெய்திகள்

உள்நாட்டு இறைவரித் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு

2024/2025 மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமான அறிக்கைகளைச் சமர்ப்பிப்பதற்காக வழங்கப்பட்ட தனிப்பட்ட அடையாள எண்ணின் (PIN) செல்லுபடியாகும்...

25 688df4fc39fbe
இலங்கைசெய்திகள்

வாய்த்தர்க்கத்தில் ஒருவர் சுட்டுக்கொலை.. பொலிஸாரிடம் சரணடைந்த சந்தேகநபர்

அம்பலாந்தோட்டை, ஹுங்கம பிங்காம பகுதியில் இன்று (02) மதியம் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது....

25 688e26468e8e8
சினிமாசெய்திகள்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு காலமானார்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு உடல்நலக் குறைவால் காலமானார். அவர் தனது 71ஆவது வயதில்...

25 688e158f2c449
இலங்கைசெய்திகள்

சட்டத்தை நடைமுறைப்படுத்தியவரால் நிராகரிக்கப்பட்ட ஜனாதிபதி சிறப்புரிமைகள்

இலங்கையின் முதல் நிறைவேற்றதிகார ஜனாதிபதியான ஜே.ஆர்.ஜெயவர்த்தனவால் கொண்டுவரப்பட்ட ஜனாதிபதிகளுக்கான சலுகைகளை அவரே பெற்றுக்கொள்ளவில்லை என அரசியல்...