1 27
இலங்கைசெய்திகள்

வீட்டுப் பணியாளருக்கு சம்பளம் வழங்காத இலங்கை இராஜதந்திரி

Share

வீட்டுப் பணியாளருக்கு சம்பளம் வழங்காத இலங்கை இராஜதந்திரி

அவுஸ்திரேலியாவுக்கான இலங்கையின் முன்னாள் பிரதி உயர்ஸ்தானிகர் ஹிமாலி அருணாதிலக்க தனது வீட்டுப் பணியாளருக்கு சம்பளம் வழங்காத விடயம் குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக இலங்கை வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

இராஜதந்திரிகள் தங்கள் உத்தியோகபூர்வ பிரதிநிதித்துவ கடமைகளுக்கு உதவுவதற்கு வீட்டு உதவியாளர்களை அழைத்துச் செல்வதற்கு, இலங்கையின் வெளியுறவு அமைச்சினால் வசதி செய்யப்படுவது வழக்கமான நடைமுறை என வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தநிலையில், ஹிமாலி அருணாதிலக்க, அவுஸ்திரேலியாவிலிருந்து, கடமை முடிந்து புறப்படுவதற்கு முன், அவருடைய ஊழியரின் சம்பளமாக அமைச்சினால் அங்கீகரிக்கப்பட்ட கொடுப்பனவு அவருக்கு வழங்கப்பட்டுள்ளது என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

முன்னதாக, ஊழியரின் கடவுச்சீட்டை பறிமுதல் செய்து மூன்று வருடங்களில் இரண்டு நாட்கள் மாத்திரமே விடுமுறை வழங்கிய அருணாதிலக்க தொடர்பில் முறையாக ஆராயத் தவறியதற்காக, பிராந்திய நீதிமன்ற நீதிபதி, அவுஸ்திரேலியாவின் உள்விவகார திணைக்களத்தை கடுமையாக சாடியதாக அவுஸ்திரேலிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.

அத்துடன், அவர் தமது முன்னாள் வீட்டுப் பணியாளருக்கு 543,000 டொலர்களை சம்பளம் மற்றும் வட்டியாக செலுத்த வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

2015ஆம் ஆண்டு முதல் 2018 ஆம் ஆண்டு வரை கென்பராவில் பணியாற்றிய ஹிமாலி அருணதிலகா, தனது ஊழியரான பிரியங்கா தனரத்னவுக்கு அவுஸ்திரேலியாவில் இருந்த காலத்தில் குறைந்தபட்ச ஊதியம் மற்றும் நிபந்தனைகளை மறுத்துள்ளார்.

இதன்போது, தனரத்ன வாரத்தில் ஏழு நாட்களும் காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை பணிபுரிந்ததாகவும், சமையல் எண்ணெயில் கையை எரித்த பிறகு இரண்டு நாட்கள் மட்டுமே விடுமுறை அளிக்கப்பட்டதாகவும் நீதிபதி எலிசபெத் ராப்பர் கண்டறிந்தார்.

இந்த காலகட்டத்தில், அவருக்கு வெறும் 11,200 டொலர் அதாவது ஒரு மணி நேரத்திற்கு சுமார் 75 சத டொலர் கொடுப்பனவு இலங்கைக்கு அனுப்பப்பட்டதாக விசாரணைகளில் தெரியவந்ததாகவும் நீதிபதி குறிப்பிட்டிருந்தார்.

Share
தொடர்புடையது
images 10 4
செய்திகள்இலங்கை

தனியார் துறை ஊழியர்களுக்கும் ஓய்வூதியம்? அரசாங்கம் புதிய திட்டம் குறித்து ஆலோசனை!

தனியார் துறை ஊழியர்களின் எதிர்கால நலனைக் கருத்திற்கொண்டு அவர்களுக்குப் புதிய ஓய்வூதியத் திட்டமொன்றை (Pension Scheme)...

sajith
செய்திகள்இலங்கை

நாடாளுமன்றத்தில் பரபரப்பு: பெண் ஊழியர் துன்புறுத்தல் அறிக்கை ஏன் மறைக்கப்படுகிறது? சஜித் பிரேமதாச கேள்வி!

நாடாளுமன்ற பெண் ஊழியர்கள் எதிர்கொண்ட பாலியல் துன்புறுத்தல்கள் தொடர்பான விசாரணை அறிக்கை, நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படாமல்...

செய்திகள்இலங்கை

இலங்கை மின்சார சபை மறுசீரமைப்பு இறுதிக்கட்டத்தில்! ஊழியர்களின் நலன்களுக்கு முக்கியத்துவம் என அறிவிப்பு!

நாட்டின் எதிர்கால மின்சாரத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் நோக்கில் திட்டமிடப்பட்டுள்ள இலங்கை மின்சார சபையின் (CEB)...

96b6d210 5408 11ef b8c3 f76c0a5f70a8.jpg
செய்திகள்உலகம்

யுனுஸின் ஆட்சி சட்டவிரோதமானது! – இந்தியாவிலிருந்து ஷேக் ஹசீனா விடுத்த முதல் பகிரங்க அறிக்கை!

கடந்த 2024-ஆம் ஆண்டு பங்களாதேஷில் ஏற்பட்ட மக்கள் புரட்சியைத் தொடர்ந்து நாட்டை விட்டு வெளியேறி இந்தியாவில்...