24 6623381d5e2fc
இலங்கைசெய்திகள்

நியூசிலாந்திற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ள இலங்கை பிரதிநிதிகள் குழு

Share

நியூசிலாந்திற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ள இலங்கை பிரதிநிதிகள் குழு

நியூசிலாந்தின் வெலிங்டனில் (New Zealand Wellington) இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தை திறப்பதற்கான அமைச்சரவையின் தீர்மானத்தை அடுத்து, அமைச்சின் வெளிநாட்டு சொத்துக்கள் முகாமைத்துவம் மற்றும் அபிவிருத்திப் பிரிவின் பணிப்பாளர் நாயகம் பிரதீபா சாரம் (Pradeepa Saram) தலைமையிலான உத்தியோகபூர்வ பிரதிநிதிகள் குழு நியூசிலாந்துக்கு விஜயம் செய்யவுள்ளது.

குறித்த விஜயமானது ஏப்ரல் 22ஆம் திகதி முதல் 25ஆம் திகதி வரை நியூசிலாந்தில் நடைபெறவுள்ளது.

இந்த விஜயத்தின் போது, ​​தூதுக்குழுவினர் நியூசிலாந்தின் வெளிவிவகார மற்றும் வர்த்தக அமைச்சின் அதிகாரிகள் உட்பட பிற நிறுவனங்களுடன் தொடர்புடைய பங்குதாரர்களுடன் சந்திப்புகளில் ஈடுபடவுள்ளனர்.

நியூசிலாந்தில் கணிசமான அளவில் தொழில் வல்லுநர்கள் மற்றும் மாணவர்களைக் கொண்ட ஒரு குறிப்பிடத்தக்க இலங்கை வெளிநாட்டவர் சமூகம் உள்ளமையால் உயர்ஸ்தானிகராலயத்தை நிறுவுவதற்கும் வர்த்தகம், கல்வி, விளையாட்டு, அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் போன்ற துறைகளில் வலுவான ஒத்துழைப்பைப் பின்தொடர்வதற்கும் இது சாதகமாக அமையவுள்ளது.

இந்நிலையில், நியூசிலாந்து 2021இல் இலங்கையில் ஒரு உயர்ஸ்தானிகராலயத்தை திறந்துள்ளதுடன் இது இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளில் ஒரு முக்கிய மைல்கல்லாகவும் காணப்படுகின்றது.

Share
தொடர்புடையது
691d4cefe4b04fae5692dd8e
செய்திகள்உலகம்

ஜப்பானில் துறைமுகத்தில் பயங்கரத் தீ விபத்து: 170 கட்டிடங்கள் நாசம், ஒருவர் பலி!

ஜப்பானின் தென்மேற்கு ஒய்டா மாகாணத்தில் உள்ள கடற்கரை நகரமான சகனோஸ்கி (Saganoseki) நகரத்தின் துறைமுகப் பகுதியில்...

image 1fa61088e1
செய்திகள்இலங்கை

திரிபோஷாவுக்குத் தீவிரப் பற்றாக்குறை: மகப்பேறு மற்றும் குழந்தைகள் மருத்துவமனைகள் நெருக்கடியில்!

நாட்டிலுள்ள பல மகப்பேறு மற்றும் குழந்தைகள் மருத்துவமனைகளில் திரிபோஷாவுக்குக் (Thriposha) கடுமையான பற்றாக்குறை நிலவுவதாக மருத்துவ...

images 1 10
செய்திகள்இலங்கை

கொழும்பு மத்திய தபால் பறிமாற்றகத்தில் 30 கிலோ ‘குஷ்’ போதைப்பொருள் கைப்பற்றப்பட்டது – பெறுமதி ₹150 மில்லியன்!

பொலிஸ் மத்திய குற்ற விசாரணைப் பணியக அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையில், 30 கிலோ கிராம்...

images 23
செய்திகள்இலங்கை

கொட்டாஞ்சேனைக் கொலைச் சம்பவம்: ‘ஐஸ்’ போதைப்பொருளுடன் துப்பாக்கிதாரி கைது – 72 மணி நேர தடுப்புக் காவலில் விசாரணை!

கொட்டாஞ்சேனைப் பிரதேசத்தில் துப்பாக்கிச் சூடு நடத்தி நபரொருவரைக் கொலை செய்த சம்பவத்துடன் தொடர்புடைய துப்பாக்கிதாரி, ‘ஐஸ்’...