24 6635cdf8c7f58
இலங்கைசெய்திகள்

பல பில்லியன் நாணயத்தை அழித்த இலங்கை மத்திய வங்கி

Share

பல பில்லியன் நாணயத்தை அழித்த இலங்கை மத்திய வங்கி

கடந்தாண்டு புழக்கத்துக்கு பொருத்தமற்ற சுமார் 80 பில்லியன் ரூபாய் பெறுமதியான நாணயத் தாள்களை இலங்கை மத்திய வங்கி எரித்து அழித்துள்ளது.

கடந்த வருடம், மத்திய வங்கி நிர்ணயித்த நியமங்களுக்கு பொருத்தமற்ற 79.82 பில்லியன் ரூபா பெறுமதியான நாணயத்தாள்கள் அழிக்கப்பட்டன.

மத்திய வங்கி கடந்த வருடம் 250 மில்லியன் புதிய நாணயத்தாள்களை பெற்றுள்ளது.

அதற்கமைய, 469.28 பில்லியன் ரூபா பெறுமதியான நாணயத் தாள்களும் 571.95 மில்லியன் ரூபா பெறுமதியான நாணயங்களும் புழக்கத்திற்காக வெளியிடப்பட்டுள்ளன.

கடந்த 2022 ஆம் ஆண்டை விட 2023 ஆம் ஆண்டில் நாட்டில் நாணய சுழற்சி அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

கடந்த 2022ஆம் ஆண்டில் 2.1 சதவீதமாக இருந்த பணப்புழக்கத்தின் வளர்ச்சி 2023ஆம் ஆண்டுக்குள் 15.6 சதவீதமாக உயர்ந்துள்ளது.

அதற்கமைய, கடந்த ஆண்டு நாட்டில் புழக்கத்தில் இருந்த பணத்தின் அளவு 1,186.5 பில்லியன் ரூபாயாகும்.

Share
தொடர்புடையது
articles2FVR2hd2cLIcHfFF66K3BB
செய்திகள்அரசியல்இலங்கை

மலையகமே எமது தாயகம்; வடக்கு, கிழக்குக்குச் செல்லத் தயாரில்லை – சபையில் வேலுசாமி ராதாகிருஷ்ணன் எம்.பி. முழக்கம்!

மலையக மக்கள் தமது தாயகமாக மலையகத்தையே கருதுவதாகவும், அங்கிருந்து இடம்பெயர்ந்து வடக்கு அல்லது கிழக்கு மாகாணங்களுக்குச்...

images 4 5
செய்திகள்இலங்கை

சம்பா, கீரி சம்பா அரிசிக்கு தட்டுப்பாடு ஏற்படலாம்: அமைச்சர் வசந்த சமரசிங்க எச்சரிக்கை!

‘டிட்வா’ (Ditwa) சூறாவளி காரணமாக நாட்டின் விவசாயத் துறை பாரிய பின்னடைவைச் சந்தித்துள்ளதாகவும், இதன் விளைவாக...

death ele
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

அநுராதபுரத்தில் சோகம்: காட்டு யானைத் தாக்குதலில் 48 வயது விவசாயி பலி; நண்பர்கள் உயிர் தப்பினர்!

அநுராதபுரம், தம்புத்தேகம பகுதியில் தனது விவசாய நிலத்தைப் பாதுகாக்கச் சென்ற விவசாயி ஒருவர் காட்டு யானைத்...

images 3 6
செய்திகள்அரசியல்இலங்கை

ஜனவரி 6 வரை பாராளுமன்றம் ஒத்திவைப்பு: உறுப்பினர்கள் மற்றும் ஊழியர்களுக்கு நீண்ட விடுமுறை!

இலங்கை பாராளுமன்றத்தின் அமர்வுகள் எதிர்வரும் ஜனவரி மாதம் 06 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில்,...