tamilni 327 scaled
இலங்கைசெய்திகள்

வெளிநாடொன்றில் இலங்கை இளைஞன் கொடூரமாக கொலை

Share

வெளிநாடொன்றில் இலங்கை இளைஞன் கொடூரமாக கொலை

ஜப்பானில் இலங்கை இளைஞன் ஒருவர் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர்

ஜப்பானில் இலங்கையை சேர்ந்த இரு குழுவினருக்கு இடையில் ஏற்பட்ட மோதல் காரணமாக அப்பாவி இளைஞன் ஒருவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.

மாத்தறையை சேர்ந்த 26 வயதான ஷாலிந்த என்ற இளைஞனே கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கடந்த மாதம் 15ஆம் திகதி இலங்கையை சேர்ந்த குழுவொன்றுடன் ஏற்பட்ட மோதலையடுத்து கடுமையாக தாக்கப்பட்டுள்ளார்.

படுகாயமடைந்த நிலையில் ஜப்பானில் சிகிச்சை பெற்று வந்த இளைஞன் சில தினங்களுக்கு முன்னர் உயிரிழந்துள்ளார்.

கடுமையான குடும்ப வறுமையில் சிக்கி தவித்த ஷாலிந்தவின் பெற்றோர் கடனிற்கு பணம் பெற்று மகனை ஜப்பானிற்கு அனுப்பி வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Share
தொடர்புடையது
Untitled 1 2
சினிமாசெய்திகள்

ஜனநாயகன் கடைசி படம் இல்லையா? விஜய் பதிலால் குஷியில் ரசிகர்கள்

இன்று நடிகர் விஜய்யின் பிறந்தநாள் என்பதால் அதை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். அவர் ஏற்கனவே அரசியல்...

Untitled 1 1
சினிமாசெய்திகள்

விஜய்க்காக த்ரிஷா போட்ட பதிவு.. வைரலாகும் போட்டோவை பாருங்க

நடிகர் விஜய்க்கு இன்று பிறந்தநாள் என்பதால் பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர்....

19 1
உலகம்செய்திகள்

டொனால்ட் ட்ரம்பின் நீண்ட கால திட்டம்! குறி வைக்கப்பட்டுள்ள ஈரானின் முக்கிய இடங்கள்

ஒன்று அமைதி, இல்லாவிட்டால் ஈரானுக்கு அழிவு. ஈரானில் இன்னும் பல முக்கிய இடங்களை குறி வைத்துள்ளோம்...

18 2
இலங்கைசெய்திகள்

நாடாளுமன்ற ஊழியர்களுக்கான உணவு கட்டணத்தில் மேற்கொள்ளப்படும் திருத்தம்

நாடாளுமன்ற ஊழியர்களுக்கு விதிக்கப்படும் உணவு கட்டணங்களை திருத்தியமைக்க நாடாளுமன்ற குழு தீர்மானித்துள்ளது. நாடாளுமன்ற குழு கூடியபோது...