rtjy 247 scaled
இலங்கைசெய்திகள்

கனடா செல்ல முயற்சித்தவர் கட்டுநாயக்கவில் கைது

Share

கனடா செல்ல முயற்சித்தவர் கட்டுநாயக்கவில் கைது

இலங்கை கடவுச்சீட்டில் போலி கனேடிய வீசா மூலம் நாட்டை விட்டு வெளியேற முயன்ற நபரை குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் புதன்கிழமை மாலை கட்டுநாயக்க விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தியது.

42 வயதான அந்த நபர் புதன்கிழமை மாலை 5 மணி அளவில் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானமான UL225 விமானத்தில் பயணம் செய்ய முயன்றுள்ளார்.

இதன் போது விமான ஊழியர்கள் அவரது கனேடிய விசா குறித்து சந்தேகம் அடைந்து அவரை தடுத்து நிறுத்தி சோதனைக்குட்படுத்தியுள்ளனர்.

பின்னர் அவர் கட்டுநாயக்க விமான நிலைய எல்லை கண்காணிப்பு பிரிவில் குடிவரவுத் துறையின் சிறப்புப் பிரிவுக்கு அனுப்பப்பட்டார், அங்கு அதிகாரிகள் அவரது இலங்கை கடவுச்சீட்டில் ஒட்டப்பட்ட கனேடிய விசா போலியானது என்பதைக் கண்டறிந்தனர்.

இந்த நிலையில் பயணியின் இலங்கை கடவுச்சீட்டு உண்மையானது எனவும் அவர் வத்தளையில் உள்ள ஒரு நபரிடம் இருந்து 4.5 மில்லியன் ரூபாய்க்கு போலி கனேடிய விசாவைப் பெற்றுள்ளார் எனவும் சிரேஷ்ட குடிவரவு அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

சந்தேக நபர் முதலில் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில் டுபாய் சென்று பின்னர் வேறு விமானத்தில் கனடா செல்ல திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஒகஸ்ட் மாதத்தின் ஆரம்பத்தில் இருந்து கட்டுநாயக்க விமான நிலைய அதிகாரிகளுக்கு போலி பயண ஆவணங்களை தயாரித்து சட்டவிரோதமான முறையில் கனடா, இத்தாலி மற்றும் ஜெர்மனி போன்ற நாடுகளுக்கு செல்ல 10 க்கும் மேற்பட்ட நபர்கள் மேற்கொண்ட தொடர்ச்சியான முயற்சிகளின் பட்டியலை இந்த கைதும் சேர்க்கப்பட்டுள்ளது.

Share
தொடர்புடையது
23 657a8557d51bd md
செய்திகள்இலங்கை

காய்கறி விலையில் கடும் அதீத உயர்வு: பச்சை மிளகாய் 1,000 ரூபாயைத் தாண்டியது; மக்கள் கடும் அவதி!

இலங்கையின் சில பகுதிகளில் தாழ்நிலக் காய்கறிகளின் விலை முன்னெப்போதும் இல்லாத வகையில் அதீத உயர்வை எட்டியுள்ளதாகச்...

25 6943e3aa87891
செய்திகள்உலகம்

தன்னை ‘ஹீரோவாக’ காட்டிக்கொள்ள 12 நோயாளிகளைக் கொன்ற மருத்துவர்: பிரான்ஸ் நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதிப்பு!

பிரான்சில் சத்திரசிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நோயாளிகளுக்குத் திட்டமிட்டு விஷ ஊசி செலுத்தி, 12 பேரின் மரணத்திற்கு காரணமான...

1813418 flight12
செய்திகள்இந்தியா

அடர்ந்த மூடுபனி: டெல்லி விமான நிலையத்தில் 100-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து!

வட இந்தியா முழுவதும் நிலவி வரும் கடுமையான மூடுபனி காரணமாக, டெல்லி இந்திரா காந்தி சர்வதேச...

674b2a65b606d hardik pandya in frame 191544440 16x9 1
விளையாட்டுசெய்திகள்

தென்னாபிரிக்காவை வீழ்த்தி இந்தியா வெற்றி: 16 பந்துகளில் அரைசதம் அடித்து ஹர்திக் பாண்டியா புதிய சாதனை!

தென்னாபிரிக்காவிற்கு எதிரான 5-ஆவதும் கடைசியுமான டி20 போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றுள்ளது. இப்போட்டியில்...