Mahinda Ranil 2 1 3 scaled
இலங்கைசெய்திகள்

வடக்கை சேர்ந்த நான்கு அதிகாரிகளுக்கு கிடைத்துள்ள வாய்ப்பு

Share

வடக்கை சேர்ந்த நான்கு அதிகாரிகளுக்கு கிடைத்துள்ள வாய்ப்பு

வடக்கை சேர்ந்த நான்கு அதிகாரிகளுக்கு இலங்கை நிர்வாக சேவை விசேட தரம் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை நிர்வாக சேவை விசேட தர தெரிவுக்கான நேர்முகத் தேர்வு நேற்று(16.03.2024) கொழும்பில் நடைபெற்றுள்ளது.

நாடு முழுவதும் காணப்படும் நிர்வாக சேவை விசேட தரத்திலான 43 வெற்றிடங்களை நிர்ப்பும் நோக்கில் நேர்முகத் தேர்வுக்கு 54 அதிகாரிகள் அழைக்கப்பட்டிருந்தனர். இவர்களில் 52 பேர் சமூகமளித்துள்ளனர்.

தேர்வுக்கான சிரேஷ்ட நிலைப்பட்டியலில் 43, 44, 45 மற்றும் 47 ஆவது இடங்களிலும் வடக்கைச் சேர்ந்த அதிகாரிகளே இடம்பெற்றிருந்த நிலையில் முதல் 43 இடங்களுக்குள் இருந்த ஓர் அதிகாரி நேர்முகத் தேர்வுக்குச் சமூகமளிக்காத காரணத்தால் 44 ஆவது இடத்தில் இருந்த வடக்கைச் சேர்ந்த அதிகாரி தற்போது 43 ஆவது இடத்தைப் பிடித்துக் கொண்டார். அவருக்கும் விசேட தர நிலை கிடைக்கும் வாய்ப்பு பெரும்பாலும் உறுதியாகியுள்ளது.

இருந்தபோதும் முழுமையான பரிசீலனைகளின் பின்னர் இடையில் உள்ள வேறு யாரும் அதிகாரிகள் சந்தர்ப்பத்தை இழந்தால், 43 இற்கு அடுத்த நிலையிலும் வடக்கைச் சேர்ந்த அதிகாரியே இருக்கின்றார் எனத் தெரிய வந்துள்ளது.

மேலும் தற்போது வரையான முதல் 43 இடங்களுக்குள்ளும் வடக்கைச் சேர்ந்த 4 அதிகாரிகள் இருக்கின்றமையும் குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
Untitled 1 Recovered Recovered 12
இலங்கைசெய்திகள்

கந்தளாய் சூரியபுர பகுதியில் லொறி விபத்து

கந்தளாய் சூரியபுர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சமகிபுர பகுதியில் ஒரு லொறி வீதியை விட்டு விலகி ஆற்றில்...

Untitled 1 Recovered Recovered 11
இலங்கைசெய்திகள்

கொழும்பில் நாளை முதல் நடைமுறைக்கு வரவுள்ள விசேட போக்குவரத்து திட்டம்!

போரா மாநாட்டை முன்னிட்டு கொழும்பில் விசேட போக்குவரத்து திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர். போரா மாநாடு...

Untitled 1 Recovered Recovered 9
இலங்கைசெய்திகள்

அதிகரிப்பைப் பதிவு செய்த கொழும்பு பங்குச் சந்தை

கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது. அதன்படி, இன்றையதினம்(24)...

Untitled 1 Recovered Recovered 8
இலங்கைசெய்திகள்

திடீரென இஸ்ரேலை எச்சரித்த ட்ரம்ப்!

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்களை நடத்தக்கூடாது என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்....