பாதாள உலகக் குழுவினர் இலங்கையின் அரசியலுக்குள்ளும் நுழைந்து விட்டனர். இந்தக் குழுவினரைக் கூண்டோடு ஒழித்துக் கட்டியே தீருவோம் என்று பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறுகையில்,
இதுவரை கைது செய்யப்பட்டுள்ள பாதாள உலகக் குழு உறுப்பினர்களுக்கு நீதிமன்றத்தின் ஊடாக உரிய தண்டனை வழங்கப்படும்.
இவர்களுடன் தொடர்புடைய பொது நபர்கள், அரசியல்வாதிகள் எவரும் தப்ப முடியாது. அவர்கள் அனைவரையும் கைது செய்தே தீருவோம். உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் தலைமறைவாகியுள்ள சகல பாதாள உலகக் குழுவினரையும் கைது செய்து சிறையில் அடைப்போம்.
இந்த ஆட்சியில் பாதாள உலகக் குழுவினரைக் கூண்டோடு ஒழித்துக் கட்டியே தீருவோம் என குறிப்பிட்டுள்ளார்.