இலங்கைசெய்திகள்

இலங்கையில் கடுமையாக நடைமுறையாகும் சட்டம்

tamilni 62 scaled
Share

இலங்கையில் கடுமையாக நடைமுறையாகும் சட்டம்

ரயில் சேவை உட்பட பொதுப் போக்குவரத்தை அத்தியாவசிய சேவையாக மாற்றுவதற்காக வர்த்தமானி அறிவித்தலில் வெளியிடப்பட்டுள்ள விதிமுறைகள் மற்றும் சட்டங்களை கடுமையாக நடைமுறைப்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்கவினால் செப்டம்பர் 12 ஆம் திகதி வெளியிடப்பட்டதுடன், இது ஒரு மாத காலத்திற்கு செல்லுபடியாகும்.

பணிப்பகிஷ்கரிப்பு அல்லது வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு கடமைக்கு சமூகமளிக்காத அனைத்து ரயில்வே ஊழியர்களும் உரிய வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளபடி சேவையை கைவிட்டவர்களாக கருதப்படுவார்கள் என அரசாங்கம் அறிவித்துள்ளது.

இதற்கிடையில், ஒரு தாக்குதலின் அடிப்படையில் ரயில்வே ஊழியர்களின் குழுவால் தொடங்கப்பட்ட தொழிற்சங்க நடவடிக்கை தொடர்ந்து முன்னெடுக்கப்படுகின்றது.

இந்த நிலையில் ரயில்வே உதவிக் காவலர்களின் விடுமுறைகள் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இரத்துச் செய்யப்பட்டுள்ளது.

அத்துடன், இன்று அனைத்து உதவிக் காவலர்களும் நண்பகல் 12 மணிக்கு முன்னர் பணிக்கு சமூகமளிக்க வேண்டும் என ரயில்வே பொது முகாமையாளர் அறிவித்துள்ளார்.

Share
Related Articles
15 7
இலங்கைசெய்திகள்

தமிழரசின் பெருவெற்றி – நான் கூறியது நடந்து விட்டது….! மார்தட்டும் சுமந்திரன்

அன்று நான் கூறியது இன்று நிரூபணமாகியுள்ளது என இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளரான ஜனாதிபதி...

16 7
உலகம்செய்திகள்

ஹவுதிகளுக்கு பேரிழப்பு : யேமனின் முக்கிய விமான நிலையத்தை தகர்த்து அழித்தது இஸ்ரேல்

யேமனின் தலைநகரிலுள்ள சர்வதேச விமான நிலையத்தை வான்வழித் தாக்குதல்கள் மூலம் தகர்த்து அழித்துள்ளதாக இஸ்ரேல் இராணுவம்...

13 7
இலங்கைசெய்திகள்

நான் கூறியதை கேட்டிருந்தால் வெற்றி – ரணில் விக்ரமசிங்க

எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து சபைகளில் கூட்டணியாக போட்டியிட்டிருந்தால் ஐம்பது முதல் நூறு எண்ணிக்கையிலான இடங்களை வென்றிருக்க முடியும்...

12 7
இலங்கைசெய்திகள்

பல்கலைகளில் தொடரும் அடாவடித்தனம் : ஆறு மாணவர்கள் அதிரடியாக கைது

சக மாணவர் ஒருவரைத் தாக்கிய குற்றச்சாட்டில் ஸ்ரீ ஜெயவர்தனபுர பல்கலையை (University of Sri Jayewardenepura)...