tamilni 128 scaled
இலங்கைசெய்திகள்

கொழும்பிற்கு கணவனுடன் சென்ற பெண்ணுக்கு அதிர்ச்சி

Share

கொழும்பிற்கு கணவனுடன் சென்ற பெண்ணுக்கு அதிர்ச்சி

கணவருடன் தொடருந்தில் கொழும்பு நோக்கி பயணித்த பெண்ணொருவரின் கைப்பையில் இருந்த 30 லட்சம் ரூபாவிற்கும் அதிக பெறுமதியான தங்கம் மற்றும் பணம் திருடப்பட்ட சம்பவம் தொடர்பில் கெக்கிராவ பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

பேருவளை, கங்கனாங்கொட பிரதேசத்தில் வசிக்கும் 28 வயதுடைய பெண் ஒருவர் செய்த முறைப்பாட்டிற்கமைய, பொலிஸார் இந்த விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

சுதந்திர தினத்தன்று தனது கணவருடன் தொடருந்தில் கொழும்பு நோக்கி பயணித்த வேளையில் தூங்கிவிட்டதாகவும், கெக்கிராவ தொடருந்து நிலையத்தை கடந்து சிறிது தூரம் சென்ற போது தொடருந்து காவலாளி ஒருவர் வந்து தொடருந்து பயணிகளுக்கு தங்களின் பொருட்கள் சரியாக உள்ளதா என பார்க்குமாறு தகவல் வழங்கியதாகவும் முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்பின், அவர்கள் அமர்ந்திருந்த இருக்கைக்கு அடியில் வைக்கப்பட்டிருந்த கைப்பையை எடுத்து சோதனையிட்டபோது, ​​பெட்டியில் தங்க நகைகள், கையடக்க தொலைபேசி, பணம் இல்லாததையும், பெட்டியில் தேடியபோதும் கிடைக்காததையும் உணர்ந்தனர்.

கைப்பையை யாரோ தொடுவதைக் கண்டதாக அங்கிருந்தவர்கள் கூறியுள்ளனர். இந்த திருட்டு தொடர்பில் தொடருந்து காவலர்களுக்கும் கெக்கிராவ தொடருந்து நிலையத்திற்கும் அறிவித்ததையடுத்து மருதானைக்கு சென்று மீண்டும் தனது தந்தை மற்றும் கணவருடன் கெக்கிராவ பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இந்த திருட்டில் ஈடுபட்ட நபர் அல்லது குழுவை கைது செய்ய கெக்கிராவ பொலிஸ் அதிகாரிகள் குழு விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Share
தொடர்புடையது
Untitled 1 Recovered Recovered 12
இலங்கைசெய்திகள்

கந்தளாய் சூரியபுர பகுதியில் லொறி விபத்து

கந்தளாய் சூரியபுர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சமகிபுர பகுதியில் ஒரு லொறி வீதியை விட்டு விலகி ஆற்றில்...

Untitled 1 Recovered Recovered 11
இலங்கைசெய்திகள்

கொழும்பில் நாளை முதல் நடைமுறைக்கு வரவுள்ள விசேட போக்குவரத்து திட்டம்!

போரா மாநாட்டை முன்னிட்டு கொழும்பில் விசேட போக்குவரத்து திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர். போரா மாநாடு...

Untitled 1 Recovered Recovered 9
இலங்கைசெய்திகள்

அதிகரிப்பைப் பதிவு செய்த கொழும்பு பங்குச் சந்தை

கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது. அதன்படி, இன்றையதினம்(24)...

Untitled 1 Recovered Recovered 8
இலங்கைசெய்திகள்

திடீரென இஸ்ரேலை எச்சரித்த ட்ரம்ப்!

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்களை நடத்தக்கூடாது என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்....