இரகசிய மனைவியை பார்க்க சென்ற வெளிநாட்டவர் - இரகசியத்தை கண்டுபிடித்த பொலிஸார்
இலங்கைசெய்திகள்

இரகசிய மனைவியை பார்க்க சென்ற வெளிநாட்டவர் – இரகசியத்தை கண்டுபிடித்த பொலிஸார்

Share

இரகசிய மனைவியை பார்க்க சென்ற வெளிநாட்டவர் – இரகசியத்தை கண்டுபிடித்த பொலிஸார்

இலங்கையில் எட்டு வருடங்களாக வீசா இன்றி தங்கியிருந்த பங்களாதேஷ் பிரஜை ஒருவர் மாரவில மெதகொட பிரதேசத்தில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

மொஹமட் சிபோன் என்ற பங்களாதேஷ் பிரஜை நேற்று காலை கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2015ம் ஆண்டு நவம்பர் மாதம் குறித்த வெளிநாட்டவரின் கடவுச்சீட்டு இரத்து செய்யப்பட்டது, அதன் பின்னர் அவர் சட்டவிரோதமாக நாட்டில் தங்கியிருப்பது தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்ட பங்களாதேஷ் நபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது, ​​தும்மலசூரிய பிரதேசத்தில் வசிக்கும் தனது இரகசிய மனைவியின் வீட்டிற்கு சென்றுவிட்டு மீண்டும் வென்னப்புவ பிரதேசத்திற்கு செல்ல தயாராக இருந்தமை தெரியவந்துள்ளது.

சட்டவிரோதமான முறையில் நாட்டில் தங்கியிருந்த சந்தேக நபர், நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு பயணித்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. சந்தேகநபர் மாரவில நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Recent Posts

தொடர்புடையது
images 10
செய்திகள்இந்தியா

டெல்லி செங்கோட்டை கார் வெடிப்பு: பலியானோருக்கு பிரதமர் மோடி இரங்கல் – உள்துறை அமைச்சர் அமித் ஷாவுடன் நிலைமை குறித்து ஆலோசனை!

புதுடெல்லி செங்கோட்டை அருகே கார் வெடித்து 8 பேர் உயிரிழந்த சம்பவத்துக்குப் பிரதமர் நரேந்திர மோடி...

1762783393 Namal Rajapaksa SLFP Sri Lanka Ada Derana 6
செய்திகள்அரசியல்இலங்கை

சுதந்திரக் கட்சி தலைமையகத்தில் நாமல் ராஜபக்ஷ: 10 ஆண்டுகளுக்குப் பிறகு வருகை – அரசியல் கூட்டம் குறித்துப் பேச்சுவார்த்தை!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) தேசிய அமைப்பாளர் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தலைமையிலான கட்சியின்...

25 6912189d45e01
இலங்கைசெய்திகள்

வவுனியாவில் ரெலோ ஊடக சந்திப்புப் புறக்கணிப்பு: சர்ச்சைக்குரிய குரல் பதிவு விவகாரம் – நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் உடனடியாக வெளியேற்றம்!

ரெலோ (TELO) கட்சியின் தலைவரும், வன்னி நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் கட்சியின் ஊடகச் சந்திப்பை...

image 3268f37140
பிராந்தியம்இலங்கைசெய்திகள்

மன்னார் காற்றாலைத் திட்ட எதிர்ப்புப் போராட்டம் 100ஆவது நாளை எட்டியது: வாழ்வுரிமைச் சாத்வீகப் போராட்டம் தீப்பந்த எழுச்சிப் போராட்டமாக மாற்றம்!

மன்னார் தீவில் காற்றாலை மின் கோபுரங்கள் அமைப்பதற்கு எதிராக முன்னெடுக்கப்பட்டு வரும் மக்களின் வாழ்வுரிமைச் சாத்வீகப்...