tamilni 417 scaled
இலங்கைசெய்திகள்

இலங்கையில் குவியும் வெளிநாட்டவர்கள்

Share

இலங்கையில் குவியும் வெளிநாட்டவர்கள்

3 வருடங்களின் பின்னர் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகூடிய அளவை எட்டியுள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

நேற்று நாட்டிற்கு வருகை தந்த வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை 09 லட்சத்தை தாண்டியுள்ளதாக அபிவிருத்தி மற்றும் முதலீட்டு உறவுகள் பணிப்பாளர் பிரசாத் ஜயசூரிய தெரிவித்துள்ளார்.

ஆசிய கிண்ண ஒருநாள் கிரிக்கெட் போட்டியை காண வரும் சுற்றுலா பயணிகளும் இவர்களில் அடங்குவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஆசிய கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடரின் இரண்டாவது போட்டி இன்றைய தினம் பல்லேகல மைதானத்தில் நடைபெற உள்ளது.

போட்டியைக் காண வரும் சுற்றுலாப் பயணிகளுக்காக மைதானத்தைச் சுற்றியுள்ள தங்குமிட வசதிகள் உள்ளிட்ட அனைத்து சுற்றுலா சேவைகளும் தயார்படுத்தப்பட்டுள்ளதாக பிரசாத் ஜயசூரிய மேலும் குறிப்பிட்டார்.

இந்தியா, ரஷ்யா, பிரித்தானியா, ஜேர்மன் உள்ளிட்ட நாடுகளிலிருந்து அதிகளவான சுற்றுலா பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளனர்.

இதன்மூலம் பெருந்தொகை டொலர் உள்ளீர்க்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Share
தொடர்புடையது
22 2
இலங்கைசெய்திகள்

ஐக்கிய நாடுகளின் பட்டிலில் இந்தியாவை முந்திய இலங்கை

ஐக்கிய நாடுகள் சபையின் நிலையான வளர்ச்சிக்கான இலக்குகள் பட்டியலில், இலங்கைக்கு 93வது இடம் கிடைத்துள்ளது. வறுமை...

21 2
இலங்கைசெய்திகள்

இருநூறு உள்ளூராட்சி மன்றங்களின் அதிகாரத்தைக் கைப்பற்றிய அரசாங்கம்

நாடு தழுவிய ரீதியில் 200 உள்ளூராட்சி மன்றங்களின் அதிகாரத்தை தேசிய மக்கள் சக்தி தலைமையிலான அரசாங்கம்...

20 1
செய்திகள்பொழுதுபோக்கு

இறுதி நாளில் இந்தியாவை வீழ்த்திய இங்கிலாந்து

சுற்றுலா இந்திய அணிக்கும் இங்கிலாந்து அணிக்கும் இடையிலான முதலாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி...

Untitled 1 Recovered Recovered Recovered Recovered 3
இலங்கைசெய்திகள்

முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

ஜனாதிபதி செயலகத்தின் வாகனங்களை மோசடியாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டின் கீழ் முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவுக்கு எதிரான...